Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் அழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்

அழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள்

  • PDF

சமீப காலங்களாக உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருப்பதால் பெட்ரோலின் விலை பெருமளவுக்கு குறைந்து வருகிறது.தற்சமயம் பெட்ரோல் விலை $40 க்கும் குறைந்து விட்டது.பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோலின் இறக்குமதியை பல நாடுகள் குறைத்து விட்டதே இதற்கு முக்கிய காரணம்.

 

இதன் விளைவாக பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் லாபமும் குறைந்து வருகிறது. எனவே அரபு நாடுகள் தன் லாபத்தின் அளவை அதிகரிக்க பெட்ரோல் உற்பத்தியை  குறைத்து விலையை ஏற்ற முடிவு செய்து பெட்ரோல் உற்பத்தியையும் மிக பெரிய அளவில் குறைத்து வருகின்றனர். இதை மற்றொரு வகையில் பார்த்தால் உலகளவில் தேவை குறைவாக இருப்பதால்,உற்பத்தியை குறைக்கிறார்கள். ஒரு சாரார் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருந்து, உற்பத்தியாளர்கள் அதிக லாபம் பெற்றால் தான் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டு பிடிக்க மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக ஆளவு செலவு செய்ய முடியும் என்கின்றனர்.



இதில் ஒரளவு உண்மை உள்ளது. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணைக்கு தற்போது எதிர் பாக்கும் விலை பேரல் ஒன்றுக்கு $75க்கும் மேல் என்று தெரிகிறது. நல்ல வேலையாக இதுவரை நடத்திய உற்பத்தி குறைப்பிற்கு பின்னும் அதன் விலை அந்த அளவு ஏறவில்லை. 



இதன் பின்னனியை புரிந்து கொள்ள கடந்த சில வருடங்களாக கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை பார்க்க வேண்டும்.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு இருபது டாலருக்கும் குறைவாக்த்தான் இருந்தது. ஆனால் அதன் பின் ஈராக் போர் காரணமாகவும், உலக பொருளாதாரத்தில், குறிப்பாக இந்தியா சீனா போன்ற முன்னேறும் நாடுகளின் வளர்ச்சி காரணமாகவும், டாலரின் மதிப்பு சர்வ தேச சந்தையில் குறைய தொடங்கிய காரணத்தாலும் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வரலாறு காண முடியாத அளவு ஏற தொடங்கியது.

தற்போதைய சூழ்நிலையில் கச்சா எண்ணையின் உபயோகம் ஒவ்வொரு நாட்டிலும் மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.பெரும்பான்மையான நாடுகள் அதன் எண்ணை தேவைக்கு இறக்குமதியையே நம்பி உள்ளனர். நாடுகளின் இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்றுமதி-இறக்குமதி சமசீரின்மை ஏற்பட்டு balance of payment பிரச்சனை ஏற்படுகிறது.உலக பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தால், வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவை அதிகரிக்கும். வளரும் நாடுகள் தங்கள் உற்பத்தியை பெருக்கி வளர்ந்த நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியை பெருக்கி ஒரளவிற்கு இந்த பிரச்சனையை சமாளிப்பார்கள். சில கனிம வளம் மிகுந்த ஏழை நாடுகள் சைனா போன்ற அதிக உற்பத்தி சாலை நிறைந்த நாடுகளுக்கு நல்ல விளைக்கு இந்த கனிம வளங்களை ஏற்றுமதி செய்து சமாளித்தனர்.மேலை நாட்டு நிறுவனங்களிடம் அதிக பண புழக்கம் இருந்ததால், பல நாடுகள் தங்கள் தொழில் துறையை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்து விட்டு அது முதலீடு செய்யும் டாலரை கொண்டு இப்பிரச்சனையை ஒரளவிற்கு சமாளித்தனர் 



பொருளாதாரம் நன்றாக இருந்த காலத்திலேயே பெரும்பாலான நாடுகளின் balance of payment negative ஆகவே இருந்தது.உதாரணமாக இந்தியாவின் BOP சுமாராக $10 பில்லியன் அளவுக்கு உள்ளது.தற்போது உலக பொருளாதாரம் சரிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. முக்கியமாக உலக நாடுகளின் முக்கிய சந்தையான அமெரிக்க பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.எனவே வளரும் நாடுகளின் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்து கொண்டுள்ளது.மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் மற்ற தொழில் நிறுவனங்கள் திவாலை சந்திப்பதும், தங்களின் Survivalக்கே பிரம்ம பிரயத்தினம் செய்து கொண்டுள்ளனர். எனவே இனி வளரும் நாடுகளில் அவர்களால் நேரடி அன்னிய முதலீடு செய்வது கடினம்.


எனவே வளரும் நாடுகள் தங்களது இறக்குமதியை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் பெரும் பாலான நாடுகளின் இறக்குமதியில் கச்சா எண்ணையே பெரும் பங்கு வகிக்கிறது, அவற்றின் தேவையை உள் நாட்டில் குறைப்பதும் மிகவும் கடினம்.அரபு நாடுகள் கூறும் $70 விலை என்பது ஈராக் போர் மற்றும் speculative trading போன்ற செயற்கையான காரணிகளால் உயர்த்தபட்ட விலை.பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்திலேயே வளரும் நாடுகள் அதை சமாளிக்க பெரும் பாடு பட்டனர்.



அரபு நாடுகள் எதிர்பார்க்கும் கச்சா எண்ணையின் விலை($70-90) எண்ணெய் உற்பத்தி குறைப்பின் மூலம் நிர்ணயிக்க பட்டால்,பின் வரும் விளைவுகள் ஏற்ப்டலாம்

1. இந்த வளரும் நாடுகளின் trade balance அதல பாதாளத்தை அடையும்.


2. இந்நாடுகளின் அன்னிய செலாவனி கையிருப்பு மிக வேகமாக குறையும்.


3.ஏற்கனவே IMF மற்றும் Worldbank போன்ற நிதி நிறுவங்களிடம் வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாமல் திவாலாகும் சூழ்நிலை ஏற்படலாம்.


4.உள்நாட்டு வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்க பட்டு மிக பெரிய பொருளாதார மந்த நிலை ஏற்படலாம்.


5.அதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி சமூக அமைதியின்மை ஏற்படலாம்.


6.இந்த சூழ்நிலையை உபயோகித்து IMF,Worldbank போன்ற நிறுவனங்கள் ஏழை நாடுகளில் வறுமையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு செய்யும் உதவியை குறைக்க நிர்பந்திக்கலாம்.


7.வளரும் நாடுகள் தங்களது நாணயத்தின் மதிப்பை பெருமளவு குறைக்க வேண்டி வரலாம்.


8.வளரும் நாடுகளும் அரிதாக கிடைக்கும் அன்னிய முதலீட்டை கவர நாட்டு மக்களின் நன்மைக்காக , அன்னிய முத்லீடுகளை மறுத்த துறைகளில் முதலீட்டை அனுமதிக்க தொடங்கும்.இது மோசமான நீண்ட கால விளைவை ஏற்படுத்தலாம்.

(Graph from BBC)

 

http://tamilfuser.blogspot.com/2008/12/blog-post_19.html&type=P&itemid=86792

Last Updated on Saturday, 20 December 2008 06:56