Language Selection

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.

 

 

புலிகளின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதவர்கள் கூட, இது நடந்துவிடும் என்று இன்று நம்பத் தொடங்கியுள்ளனர். புலிப் பினாமிகளான கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட, புலிகளை தோற்கடித்தாலும் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்று பேசுமளவுக்கு நிலைமை வேகமாக மாறிச்செல்கின்றது.

 

தொடர்ந்தும் தொடரும் போராட்டம் பற்றி வேடிக்கை காட்டுகின்றனர். புலிகளின் இந்த பொம்;மைகள், வாய்வீச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய லாயக்கற்ற பினாமிகளின் உளறல்கள் இவை. சுயநிர்ணயம் என்றால் என்ன என்ற தெரியாத மலட்டுச்சமூகத்தை உருவாக்கியுள்ள புலிகள், அனைத்தையும் அழித்து விட்டு கதை சொல்கின்றனர். புலிகள் அழிந்தவுடன், பேரினவாதத்தின் கோமணத்தை எடுத்துக் கட்டும் முதல்தரமான பொறுக்கிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

 

புலிகளை தோற்கடிக்கும் புறநிலையான நெருக்கடிகள் எவை

 

அனைத்தையும் இராணுவ வடிவில் கட்டமைத்த புலிகள், சமூகத்தை தம் பாசிச கட்டமைக்குள் அடக்கியொடுக்கினர். இதன் விளைவால் இந்தப் பாசிச இராணுவ கட்டமைப்பே இன்று  மரணித்துக் கொண்டு இருக்கின்றது.

 

இந்த மரணம் அவர்கள் நம்பமுடியாத வழியில், தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாத வகையில், அவை அரங்கேறுகின்றது. கனவில் கூட அவர்கள் எண்ணிப் பார்க்க  முடியாதவையாக இவை உள்ளது. 

 

புலிகளிள் இராணுவ வழி பாசிச கட்டமைப்புகள் எப்படி சிதறுகின்றது என்று பாhப்போம்.

 

1. கடுமையான யுத்தம் நடக்கும், மையமான பல யுத்த முனைகள். இங்கு புலிகள் ஈடுகொடுக்க முடியாது தோற்கடிக்கப்படுகின்றனர். 

 

2. குவிந்த இராணுவ தாக்குதலுக்கு பதில் பரவிய இராணுவத் தாக்குதல்கள்;. இராணுவத்தை ஒரு இடத்தில் குவிக்காது பரப்பி வைத்துள்ள யுத்ததந்திரம். இது எந்த ஒரு பாரிய எதிர் தாக்குதலையும் செயலற்றதாக்குகின்றது. சிறிய இழப்புடன் இராணுவம் மீள முன்னேறுகின்றது.


 
3. யுத்தப் பிரதேசங்கள் நம்ப முடியாத அடர் காடுகளில் கூட நடக்கின்றது. பிரதான வீதிகளை அண்டியல்ல, அடர்காடுகள் ஊடாகவும் இராணுவம் பல முனையில் முன்னேறுகின்றது.

 

4. புலிகளின் கட்டுப்பாட்டு அல்லாத பிரதேசங்களில், புலிகளின் இருப்பையே புலிகளின் அழித்தொழிப்பு பாணியில் அதை ஒழித்துக் கட்டியுள்ளது. புலிகள் தாம் அல்லாதவர்களை எப்படி தேடி அழித்தனரோ, அதே பாணியில் புலிகளை பேரினவாதம் தேடி அழிக்கின்றது. நாடு முழுக்க கடந்து ஒரிரு வருடங்களில் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மை, புலிகள் அல்லது புலிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இப்படி புலிகளின் செயற்பாட்டை முடமாக்கியுள்ளனர்.

 

5. நடுநிலை வேசம் போட்டுக்கொண்டு புலிக்குள் தலையையும், வாலை அரசுக்கும் காட்டிக் கொண்டிருந்த பத்திரிகைத்துறை, அறிவுத்துறையின், புலிக்கு சார்பாக இயங்கிய தன்மை முடக்கப்பட்டுள்ளது. கைது, கடத்தல் தொடங்கி, இறுதியில் அவர்களில் பலரை புலம் பெயர வைத்துள்ளது. இப்படி புலம்பெயர்ந்த பலர், தம் வேஷத்தை கலைத்தும் மறைத்தும்  புலிக்காக இங்கு மீளவும் முக்குவதன் மூலம் அம்பலமாகின்றனர். இவர்களால் தமிழ் மக்களுக்காக நேர்மையாக நிற்க முடியவில்லை. இப்படி பினாமித்தனம், எல்லாவற்றையும் அடித்துச் செல்லுகின்றது.

 

6. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் எங்கும் ஊடுருவித் தாக்கும் திறனை இன்று இராணுவம் பெற்றுள்ளது. இதன் மூலம் புலிகளின் தலைமை சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையும், யுத்தத்தை வழி நடத்த முடியாத நிலைமையும் உருவாகியுள்ளது.

 

7. புலிகளின் தலைமையை தேடியழிக்கும் வகையில், உடனுக்குடன் வான்வழித் தாக்குதலையும் இலக்குத் தவறாத தாக்குதலையும் நடத்துகின்றது. தலைமையின் நடமாட்டங்கள், புலிகள் கூடுமிடங்கள் பற்றிய தகவல்களை உள்ளிருந்து துல்லியமாக இராணுவம் பெறுகின்றது.

 

8. கடல் வழி தாக்குதல் படிப்படியாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கடலோரம் முற்றாக புலிகளின் நடமாட்டமற்ற ஒரு பிரதேசமாக மிக விரைவில் மாறவுள்ளது. இதன் மூலம் தமிழக மீனவர் ஊடான இந்திய நெருக்கடி இல்லாது போக உள்ளது. இந்தியா நோக்கிச் சென்ற அகதிகள் வெளியேற்றம் நின்று போகும். இந்திய அழுத்தம் சிதைந்து போகவுள்ளது. 

 

9. இந்திய - இலங்கை – ஏகாதிபத்திய கூட்டு முயற்சியால், கடல் வழியாக இராணுவ உபகரணங்கள் கடத்தல் என்பது முடக்கப்பட்டுள்ளது.

 

10. புலிகள் மக்களை தம்முடன் வைத்திருக்க நடத்தும் கட்டாய வெளியேற்றம், இராணுவத்துக்கு சாதகமானது. யுத்த பிரதேசத்தையும், யுத்தத்தில் புலிகள் இழந்த பிரதேசத்தையும் மக்களற்ற சூனிய பிரதேசமாகின்றது. இது இராணுவத்துக்கு புலிகளற்ற பாதுகாப்பு பிரதேசமாகின்றது. இதன் மூலம் ஆக்கிரமித்த பிரதேசத்தை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, யுத்தத்தை இலகுவாக தொடர்ந்து நடத்தமுடிகின்றது. பின்னணி பிரதேசத்தை பாதுகாக்காக வேண்டிய அவசியமற்றதாகியுள்ளது.

 

11. புலிகளின் பாசிச நடத்தைகள், பல எதிரிகளை உற்பத்தி செய்தது. அவர்களை வலிந்து பேரினவாதத்துடன் சேர்ந்து நிற்க வைத்ததன் மூலம், தம் கண்ணையே தாம் குத்திக் கொண்டனர். தாம் அல்லாதவர்களை அரவணைக்கத் தவறிய புலிப் போராட்டம், எதிரி அவர்களை அரவணைத்துக் கொள்ள உதவியது. இப்படி எதிரி, புலிகள் மூலமும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். 

   

12. புலிப் பாசிசம் தமிழ் நாட்டு மக்களை அரவணைக்கத் தவறி, அந்த நாட்டில் தாக்குதலை நடத்தியன் மூலம், தம்மைத் தாம் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

 

13. சர்வதேச ரீதியாக தம் பாசிச நடத்தைகள் மூலம், தனிமைப்பட்டுப் போனார்கள். 

 

14. தம் மீதான யுத்த நெருக்கடியில் இருந்து தப்ப, மக்களை தம்முடன் வலுக்கட்டாயமாக வைத்துள்ள புலிகள், மக்களை தம் எதிரியாகவே அணுகுகின்றனர். தம் பாசிச வழிமுறைகளில் மக்களை தம்முடன் வைத்திருக்க முனையும் போராட்டம், மக்களுக்கு எதிரான ஒரு யுத்த முனையை உருவாக்கியுள்ளது.  
 
இப்படி பல முனையில் சந்திக்கின்ற நெருக்கடிகளில் இருந்து மீளமுடியாத வகையில், புலிகளின் பாசிசமே அவர்களை அழிக்கின்றது.

 

தமிழ்மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை மறுத்த புலிகள், புலிப் பாசிசத்தையே தேசியமாக்கியதன் விளைவு இது. மக்களை தோற்கடித்த புலிகள், இன்று மக்களால் தோற்கடிக்கப்படுகின்றனர். எதிரி எந்த தடையுமின்றி சுதந்திரமாக முன்னேறுகின்றான்.

 

இன்று பல திடீர் திருப்பங்கள் நிகழும் வாய்ப்புகள் உண்டு.

 

1.  புலிகள் பெரும்பகுதி திடீரென முற்றாக செயலிழக்கும் வாய்ப்பு.


2.  புலிகளி;ன் ஒருபகுதி இராணுவத்துக்கு சார்பாக மாறும் வாய்ப்பு
3. இராணுவம் மக்களுக்குள் படையை இறக்கி, புலியிடமிருந்து மக்களை மீட்கும் திடீர்  சம்பவங்கள்


4.  புலிக்குள் ஒரு உள் மோதல்

 

பாசிச அமைப்பின் அழிவில் இவை எதுவும் நடக்கலாம். எதுவும் நடக்காது என்று சொல்ல, அதனிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது.

 

இது இன்றைய நிலைமை. இன்று புலியை நாம் ஆதரிப்பதனால், எதுவும் மாறிவிடாது. இந்த நிலமையை அரசியல் ரீதியாக புரிந்து எதிர்வினையாற்றுவது தான், எதிர்கால சந்ததிக்கு குறைந்தபட்சம் வழிகாட்ட உதவும்.

 

பி.இரயாகரன்
15.11.2008


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ