Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பள்ளியை சதிகூடமாக்கிய ஆட்கொல்லி நோய் ஆர்.எஸ்.எஸ்-இன் கொலை வெறி தாக்குதல்

  • PDF

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் ஆர்எஸ்எஸ் சதிகூட்டம் நவம்பர் 9, 2008 அன்று நடந்தது. இதனை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, தமுமுக மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தடியால் அடித்து காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் ரவிடிகள்.

 

 

 

 

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்தக் கலவரத்தைப் பார்த்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்

.

நாட்டை சாதி, மத ரீதியாக துண்டாடும் கொலை வெறி நச்சு கருத்துக்களை பள்ளியில் இருத்து "சாகா" என்ற பெயரில் பரப்புகிறது ஆர்.எஸ்.எஸ். இதற்கு கல்வியை வணிகமாக்கும் மெட்ரிக் பள்ளிகளும் உடந்தையாக இருக்கின்றன. பார்ப்பனியத்தை எதிர்த்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் பெயரில் இயங்கும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்-இன் வெறியாட்டம்.

கொலைவெறி, கலவரம், குண்டு வெடிப்பு இவையே ஆர்.எஸ்.எஸ்-இன் ஆயுதம். தமிழக மக்கள் இந்த ஆட்கொல்லி நோய் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் காவி குண்டர் அமைப்புகளை தடை செய்ய போராடவேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாடும் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக மாறிவிடும்.

Related Links:

 

Last Updated on Monday, 10 November 2008 12:03