Language Selection

"மீள் சிந்தனைக்குப் பதில் சிந்திக்க விடுதல்".இது குறித்துச் சிந்திக்க முடியும்.இத்தகையது மிகச் சொகுசானதும் இலகுவானதாகவும் இருக்கிறதென்ற ஒரு புள்ளியில் பிறதொரு வெளி அகலத் திறந்திருக்கிறது.எந்தொவொரு அநுமானத்தையுங்கடந்த ஒரு மொழியின் வழியான கவனப்படுத்தல்-
குறிப்பிடுதலின் குறிப்பான்கள் மிகவும் மலினமான எண்ணத்தால் ஏதோவொரு அழுத்தத்தைச் சமந்தரமான முறையில் அண்மிப்பதற்குப் பதிலீடாக எந்த மாற்று வழியுமில்லை.அதுவொரு குறியீடாக இருக்கும்"சிந்தனை"என்ற பிரமையிலிருந்து முற்று முழுதுமாக விலகி நிற்பதன் தொடர் தோல்வியின் மையத்தைச் சொல்வதற்குச் "சிந்தனை"அவசியத்தோடானவொரு குறிப்பானாகக் கும்மியிடுவதிலிருந்து,மனிதச் சிந்தனை எந்த மகத்துவத்தையும் இதுவரை இட்டபாடில்லை.அறிவினது தொடர்வினையின் சூட்சமம் எந்தப் பொருள் சார்ந்தும் எழும் புறநிலைப் பொருட் பெறுமானத்தை உடைத்துப்போடுவதற்கும் அந்த தளத்திலிருந்துகொண்டே அகநிலை இருத்தலை அடிமனதாட்சிமையென்பதும், கற்பிதத்தைப் படிமத் தளத்தில் இருத்தி வைப்பதற்கான சொல் அலங்காரம் ஏதோவொரு முறைமையின் சிக்கலைப் பேசுவதாகவும் அது உலகத்தின் பருப் பொருள் நீக்கியப் புனைவின் தொடர்ச்சியை வற்புறுத்துவதாகவும் போடப்படும் வலைகளுக்குள்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என்ற பெளத்த தத்துவார்த்தத்தின் அடி நாதம் செப்பும் புதுமையானது பொருள் கொள்ளதக்கதாயினும் இன்றைய சிந்தனைத் தளத்தில் தீர்மானகரமானவொரு உறுதிப்பாடு நீங்கிய "உண்மையை நோக்கிய அண்மித்தல்"என்ற ஒரு உருவகச் சிந்தனையையின்பால் அபத்த வெளியகற்றும் அற்புதங்களை அண்மிக்கும் கருத்து வெளியின் திரட்சி,மேலும் வற்புறுத்தம் சமாந்தரச் "சிந்தனை"போதுமானவரை புற நிலையின் பொருள் இருப்பைச் சார்ந்தே பிரயாணிக்கும் ஒரு திரை மறைவில் சிக்கிய பின் அதுவாக மனித இருத்தலின் மறுப்பைக் கக்கி வைக்கும் சந்தர்ப்பம் மேலும் மெருக்கேறும் வெளியை புற நிலைபொருளற்ற உலககாகச் சித்தரிக்கும் இந்த முடிச்சில் பெளத்தம் வந்த எள்ளி நகையாடுகிறது.
காரியவாதம் என்பதன் தொடர் நிகழ்வில் குப்பர விழுந்து மோதும் மொழியாடலின் பின்னே விரிந்து மேவும்"கருத்துப் பரப்பு"என்பதன் வினை என்னவென்பதன் கேள்வியுள்; உறுதியிழந்த அசமந்தப் பேர்வழிகளின் பின்னே சிரித்து நிற்கும் பிரமாண்டம் புறநிலையின் பிம்பத்தைக் கற்பிதங்களால் எள்ளி நகையாடுவதும்,மொழி விளையாட்டின் பேருண்மையாக விரிக்க முனையும் வினைமறுப்பின் தொடர்ச்சின் மறுபக்கம் புனைவின் தொடர்ச்சி-நீட்சி என்ற இரு தளங்களில் எழிச்சியடையும்"உண்மை" உருவகப்படுத்தப்பட்ட அகநிலை இருப்பின் வெளியில் புதைக்கப்படுகிறது.இதை இன்னொரு சமாந்தரமான உணர்வு நிலையின் பெரு வெளிக்குள் சார்ந்தெழும் புறநிலைப் பொருள் சார் மதிப்பீடுகளால் புலன்பால் உண்மையாகும் ஒரு உலகைப்"புலன் ஆகும்"புறநிலைப் பொருளுலகம் என்றே வைத்துக்கொள்வதற்கு மொழிவைச் சிந்தனைப் புனைவின் தொடர்ச்சியை வற்புறுத்தி மயக்கமுற வைக்கிறது.
இந்த மயக்கதை உடைப்பதுள் சாத்தியமானவரை ஈடுபடுத்தப்படும் புவிப்பரப்பின் மீதான இடைச் செயலின் பிரதிபலனாக பிணைக்கப்பட்ட சமூக மிருகத்திடம் இருக்கும் ஒரே ஆயுதம்"உயிரின் தகுதியை-வளர்ச்சியை"க் குறிக்குமென்ற அத்வைத்தத்தின் ஆத்மீகத் தேடலையுந்தாண்டிய கருத்துமுதற்கட்டுகைகளை அகற்றுதன் தொடர்ச்சியில் பெரிய சர்ச்சைகளைச் சம்பாதித்த-சம்பாதிக்கும் பொருள்முதல்வாதத் தொடர்ச்சிகளின் எல்லையற்றவொரு சமாந்தரப் புரிதலென்பது பருப்பொருள் குறித்த புரிதப்பாட்டைச் செப்புவதற்கெடுத்த முறைமைக்கு "தத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பெளதிகப் பொருளாயுதப் பேராயுதத்தைக் கண்டதுபோன்று பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞான இயலில் தன் ஆன்மீகப் பேராயுதத்தைக் கண்டது"என்பதும் ஒரு விதத் தருக்கத்தைச் சொல்லிய போதும் அரிதான மதிப்பீடுகளையுந்தாண்டிய இந்த "உண்மையை அண்மித்தல்"அல்லது அதன் அருகினில் வந்திருப்பதென்பது உண்மையில்லை என்பதன் இன்னொரு குறியீடாய்க் கிடந்துழலும் சொற்பன வெளிகளுக்குள் சொற்காளால் நிறைக்கப்படும் எல்லா வகை நியாயவாதங்களும் புலன்பால் சுடப்பட்ட புனைவின் சிலம்பம்தாம்.
இங்கே உருப்போட முனையும் கணிதச் சமன்பாடுகளும் தூயகணித்தத்தின் தொடர்பியக்கக் கண்ணிகளும் ஒன்றின் பின்பான தொடர்வினைகளுக்கான பகுப்புகளில் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களுக்குள் மெல்ல விரட்டப்படும் எந்தப் புனைவும் ஊத்திக்கப்போகிற அடத்தின் மிகத்தொடர் வினையே முற்றும் அறிந்த வினையெ மூப்படையாக மனிதத் தரணம் மடை திறந்து ஒப்புவிக்கும்போதே அதன் பினாத்தல் மேலும் தெளிவுற்றுப் போகிறது.அதி நவீனச் சமூகங்களும் அதை; நிலைப்படுத்திய பொருள் விருத்தியும் குவித்து வைத்திருக்கும் பொல்லாத புனைவுகளுக்குள் போராடும் தரணத்தைத் தேர்ந்தெடுத்த இந்தப் பொருள்முதல்வாதப் புரிதப்பாடினது தொடர் வியாபகத் தன்னறிவு எந்தப் பேத்தல் புனைவுகளையும் தன்னகத்தே நெருடும் சிறப்பான சீரமைவுகள் என்பதில் கண்ணிகைகளைப் புதைத்து வைத்திருக்கும் புலமைத்தனப் போக்குகளை மெல்ல வருடியே வளவுறுந் தரணமே"விடுதலை"என்பதன் விழுமியத்தைப் பொருளுறுத்திச் சொல்லும் புனைவாகவும்-புறப்பொருள் யதார்த்தமாகவும் மனித்துவப் பெருவெளியின் இருத்தலைமையப்படுத்திக் கருத்தாடுவதற்கிசைவாக இருக்கிறது.இதை மறுப்பதன் தொடர்வினைகளை எந்த அரூபப் பேசு பொருளாலும் புகட்டப்படும் சந்தர்ப்பங்களை தனிநபர்-தனியுடமை மாட்சிமைகளுக்காகப் புறத்தேயொதுக்கிப் போட்டுத் தள்ள முடியாது.பேசுதல்-பறைதல்,விவாதித்தல்,சமூக விமர்சனம் எப்பவுமே அர்த்தம் பொதிந்திருங்கும் தரணங்களையுற்பத்தி செய்யும் இன்றைய காலவர்த்தமானுத்துள் மாற்றங்களைச் செய்வதற்கான அன்றைய முன்மொழிவுகள் செயற்பாடுகள் அந்தத்தத் தளத்தில் நிலவி இன்றுரையும் நிகழ்ந்து நெருங்கும் இருபதாம் நூற்றாண்டினதும் இருபத்தோராம் நூற்றதண்டினதும் பெரும் கொடும் அழிவைச் செப்பனிடவோ அல்லது தடுத்தாளவோ முடியவில்லை.இம்மானுவல் கன்டினதோ அன்றி மார்க்சினதோ புரிதப்பாடலிருந்தோ சமீபத்து சார்த்தார் வரையோ இந்தக் கோணத்தைச் செப்பனிடும் மொழிவுகளைக் கண்டடைந்து செப்பியபோதும் இன்றுவரையும் "சுழற்ச்சி இயக்க"முறைமையின் உள்ளார்ந்த நெளிவு சுளிவுகளைச் சொல்வதற்கு துணைபுரிவதிலிருந்து எந்தக் குறைபாட்டையும் செய்துவிடவில்லை.
சுழற்றி இயக்கத் தொடாச்சி இன்றைய விஞ்ஞானப் பெருஞ்சுற்றில் அநுபவத்தின் தொடர்வினையை மறுப்பதற்கில்லை.அது தன்போக்கில் நிலவும் மரபுசார்ந்த மயக்கத் தன்மையிலான எல்லா மடிப்புகளையும்(சமூகவியல்,பொருளியல்,அரசியல் விஞ்ஙானம்,கணிதம்,பெளதிகம்,வானியல்,உயரியல்,
வரலாற்றியல்,மானுடவியல்,இலக்கிய விஞ்ஞானம்,மொழியியல் இன்னபிற)குறித்தான சுயதேடலில் பேருண்மையாக வியாபித்திருக்கும்"ஒடுக்கு முறை"அதன் தேவையை வலியுறுத்தும் அடித்தளத்தையும்
(பொருளாதாரம்)இருப்பிக்கிட்டுச் செல்லும் சமூகத்தன்மையை மறுக்கும் தனியுடமைப் புதைசேற்றில் குவிக்க முனையும் அதிகாரத்தைப் பிரதியீடாக்க எந்த மக்கள் நலனும் இல்லை என்பதன் உண்மையின் அருகினில் நகர்த்தும்.இதுவே நவீனத்துக்குப் பின்பான பெருங்கதையாடல்களைச் இந்தச் சுழற்சி இயக்க வெளிக்குள் இரண்டாம் உலகமகாயுத்தத்துக்குப்பின்பு நகா;த்திக்காட்டியது.கிட்லரின் நாசியதுக்கு வருவோம்.தேசிய சோசலிசச் சகதிக்குள் மூழ்கிய ஆரியவாதத்தன்மையைத் துக்கிப்பிடித்த விஞ்ஞானக்கும்மியில் முதல் நின்று கும்மியடித்தவர் பிலிப் லேனார்ட்;(Phillip Lernard 1862-1947)இவர் பெளதிகத்துக்காக 1905 இல் நோபல் பரிசைப் பெறுகிறார்.1935 டொச்ச பெளதிகம் எனும் அறிவியல் அமைப்பைத் தோற்றிவிக்கும் மனிதன் ஆல்பேர்ட் ஐயன்ஸ்ரையினை மயிருக்கும் மதிக்கவில்லை.ஏன்-எதற்காக என்பதையும் தாண்டிச் சகதிக்குள்(ஆரியவாதம்)கிடந்துழலும் இந்த அன்னக்காவடி ஐயன் றிலேற்றிவிற்றேற்(Relativitätstheorie) தியரியைப் போட்டுக் குழப்பி,அது யூதனின் தத்துவம்,யூதனுக்கு மனதிலெழும் உண்மைகுறித்த அறிவு(...) குறைவென்றான்;(Dem Juden Fehlt auffalend das Verständnis für Wahrheit(...) Phillip Lenard,Deutsche Physik,Münschen 1936.Seite:ixf)இத்தகையக் கதையாடலின் பின்னே தொக்கி நின்ற உண்மையின்பால் வெறுப்பேற்றும் இனத்துய்மையெனும் பொய்மை பெரும் பெளதிகவியாளர்களையும் விட்டுவைக்காத மனவிருப்பின் விகாரங்களைக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக இங்கேயும் ஒரு சில மனிதர்கள் எடுத்துப்போடும் கார்ல் போப்பரும் அதே கதையின் சுழற்சித் தொடரில் எடுத்துப்போட்ட அருமையான(!?)Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft gebenஉலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein)உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை; நோக்கி நீ விரும்புறுந்தரணத்தில் (போராடினால்) நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்ஒ)" இனவாதக் கும்மியில் அன்று வழிகாட்டியவர் எவரென்ற உணர்வுக்கு வலுவூட்டியவர் ஓட்டோ கீர்க்கே(Otto v.Gierke 1841-1921யுத்தமும் பண்பாடும்" என்ற சொற்பொழிவில் சொல்லப்பட்ட:"யுத்தம் பண்பாட்டைச் சிதறடிப்பதும் உண்மை,எனினும் நியாயமான(கிட்லர் பாணி)து அது.நாங்கள் யுத்தத்தை வருவேற்போம்.அதுள் இறைவனின் நியாயத்தை நிலைநாட்டுவதற்காக" என்றான்.
இப்போதைய தமிழ்ச் சூழலுக்குள் வருவோம்.பெருந்தவப் பயன்களால் பெற்றெடுத்த பேராடும்-பெருமைக்குரிய பெருந்தகை பற்றிய பொழிப்புகளுக்கு நடுவில் கருத்தியற்றளத்தில் கட்டிப்போடும் வலுவற்ற மொழியாடலில் மெலினப்பட்ட அந்தப் பெருந்தகையின் சமூகஜீவிகளின் அன்றாட வாழ்வுப்பயணத்தில் கட்டப்பட்ட"சுதந்திர வேட்கை"சொல்லித்தரும் அறிவு"விடுதலை".உன்னை இழந்தும் விடுதலையைப் பெற்றெடு என்பதன் முன்னைய நாடகம் இதோ!சுசான நீடன் என்ற ஆய்வாளர் இரண்டாம் உலகப் போருக்குள் சிக்கிய பெண்கள் குறித்த ஆய்வைச் செய்திருக்கிறார்.இவரது நுலை வாசிப்பவருக்கு நிச்சியம் திடுக்கிடும் உண்மைகள் "தமீழீழத்து"பெண்களுக்குள் நின்றாடுவதைப் பார்க்க முடியும்.யுத்தத்தால் அனைத்தையும் இழந்த நிலை.மனப்பிறழ்வில் உச்சம் பெற்ற நிலையுள் கிட்லர் சேனைக்குள் மிகச் சரிவேற்பட்டிருந்துபோது,அந்த அநிலையிலும் பதினாங்கே வயதுள்ள கிட்லர் இளைஞி எழுதுகிறாள்:"டாக்டர் கொய்ப்பிள்ஸ்(Dr.Goebbels einen Aufruf ergehen lassen:"Totaler Krieg".Wir, unsere Schule, wird wohl auch noch eingesetzt werden für irgenwelche Arbeiten.Das wäre auch richtig.den wir müssen ja siegen!!!"(Susanne zur Nieden,Zur Theorie und Praxis von Alltagesgesichichte,Münster 1994.Seite:181) வெளிப்படுத்திய "முற்றுமுழுதான யுத்தம்"என்ற அழைப்பானது எங்களை,எங்கள் பாடசாலையை ஏதாவதொரு வேலைத்திட்டத்துக்குள் இணைப்பதற்கு முனையும்.இது சரியானது.ஏனெனில்,நாங்கள் நிச்சியமாக வெற்றியீட்டுவதற்காக" என்கிறாள்.இப்போது பார்ப்போம் நமது சூழலில் போராட்டம் குறித்தான நிலைமைகள்-மனோ நிலைகள்,வாழ்வியல் மதிப்பீடுகளும் யுத்தம் என்பதன் அர்த்தத்தால் நீட்டிமுடக்கப்பட்டு,வாழ்வே யுத்தத்துக்காகவென்பதாக இருக்கிறது.இந்தப் புனைவின் தொடர் சுழற்றி இயக்கம கடந்தகாலத்தின் நகலாக இருப்பதும் அதுவே சமூகத்தளத்தில் புநிலையான பொருள்சார் முறைமையின் தொடர்வினையின் உந்துதலாகவும் அதே இடத்தில் அகநிலை வெளியில் உறிதியான கருத்தியல் வலுவாகம்,இயற்கையாகவும் நிலைப்படும் தரணங்களை "உண்மையை அண்மித்தல்"என்ற பொதுமைப்படுத்திச் சமுதாயத்தை நோக்கிவிடுதலும் போராட்டத்தோடு,தமிழீழப் போருக்குள் உள்வாங்கப்படாத நண்பர்களை,உள்வாங்கும் முயற்சியோடு பூரணப்படுவதாக எந்தக் கார்ல் போப்பர் கதைவிட்டார்?அவரே மனித சமுதாயம் ஒருபோதும் அனைத்துமாக இணையமுடியாதென்றும்,அப்படி இணைக்க விரும்பும் செயல் ஜனநாயக விரோதம் என்றும் போட்டுடைக்க நாமே நமக்கு அரிவரிப்பாடம் போட்டுச் சோக்காட்டுகிறோம்!
சுழற்சியக்கத்தொடர் நிகழ்வுப் பரிணாமம் இன்னும் மேலே சென்று கட்டிப்போடும் இன்னொரு தளமாக விரிவுறும் பாரிய நிகழ்வு காட்சிப்படுத்தும் புனைவாகத் தொடர்கிறது.இதன் எல்லையின் பரிணாமங்கள் மிகப்பெரும் வெளியைச் சிந்தனைக்குள் திறப்பதற்குப்பதிலாக அதை மறுத்தொதுக்கிக் குறுக்கலான பாதையொன்றைத் திறந்துவிடுகிறது.இது கட்டமைக்கும் வெளிக்குள் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு என்ற கோட்பாட்டு நிலையைப்பொருத்திப்பார்ப்பதே சில வேளைகளில் பொருத்தப்பாடாக இருக்கும்.எனினும் அதுவல்ல இன்றைய பிரச்சனை.இங்கே நாம் பார்க்கும் இன்னொரு தத்துவவாதியிடம் போவோம் யுர்கன் கபர்மார்ஸ்JürgenHabermas)இன்னொரு வினையை கார்ல் போப்பரின் மூவுலகம் எனும் சிந்தனைக்குள் விரிவடைய மறுக்கும் "நியாயப்புடுத்துதல்;(Theorie der Rationalisierung)எனும் கோட்பாட்டை மீளமைப்பில் சமுதயாத்தின் அனைத்து தளத்திலும் இதைப்பொருத்திப்பார்க்கின்ற முறைமைகளோடு அதைக் குறுக்காது மேலும் அதை இன்றைய அறிவு(...)வாதக் கதையாடல் அனைத்துக்கும் பொருத்துகிறார்.இன்றையவரை காபர்மாசின் கருத்தூட்டங்கள் நிலைகொண்டிருக்கும் பருணாமங்களில் நாம் கால் வைப்பதற்கானவொரு வெளியைத் தரும் விவாதங்களோடு மேலும் நகர்தல(விவாதித்துக் கொண்டிருக்கிற முறைமையின் நிலை,எடுத்துரைப்பை அறிவினுடையமதிப்பீட்டுத்தன்மைக்குள் மீள் அறிமுகப்படுத்தலுக்குப் பதிலாக வேறொரு பரிணாமத்துக்குள் உருவகப்படுத்துதல்) சாத்திமென்பதால் இதை நிறுத்தித் தொடர்வது பஞ்சி முறிக்கும் ஒரு நிகழ்வதாம் இப்போதைக்கு-வேறு வழி?.
ப.வி.ஸ்ரீரங்கன்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது