Language Selection

ஆளும் அரசுகள்:கொடியவர்தம் கூடாரம்!

பெருவங்கிக் கள்ளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்ட இன்றையபொழுதில்ஜேர்மனியப் பங்குச் சந்தை 11வீதம் தலைதெறிக்க உயர்ந்து, பங்குச் சந்தைச் சூதாடிகளையும் அவர்களது மனேச்சர்களையும் பெருமிதப்பில் ஆழ்த்தி மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு அரச அங்கீகாரத்தையே பெற்றுவிட்டனர்.

 


 

சமூக நலத்திட்டங்களுக்கு எந்தவொரு மானியமும் வழங்கமுடியாத ஜேர்மனிய அரசு,இன்று 50.000.கோடி யூரோவை(500 பில்லியன்கள் யுரோ) "வங்கிகளைக்காப்பாற்ற"வழங்குவதாக முடிவெடுத்து(The German government unveiled a €500 billion ($679 billion) rescue plan to shore up the banking system after Sunday's emergency summit of euro zones nations at which leaders agreed to guarantee new bank debt and inject capital to unfreeze money markets and restore confidence in the financial system.-Spiegelonline)

 

வெற்றுச் செக்குகளைக்கொடுத்த அடுத்த சில மணிநேரத்தில், பங்குச் சந்தைப் பெறுமதி வானைத்தொட்டு விட்டது. டக்ஸ் இன்டக்ஸ் வானை நோக்கி நகர்கிறது!ஆனாலும்,அது சில வாரங்களில் தகர்ந்து போகும்.புதிய பண உதவி பழைய விளையாட்டிற்கு!இது,சுவரை நோக்கி வாகனத்தைச் செலுத்துவதற்கு ஒப்பானது.ஆனால், முதலாளியத்துக்கு இதைவிட வேறு வழியில்லை-அதன் விதி இது!

 

"பாடாசாலைகளுக்கு மானியமில்லை-30 குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு,அதற்கு ஒரு ஆசிரியை".

 

"வேலையிழந்தவர்களுக்கான உதவிகளை நீண்ட நாட்களுக்கு வழங்க முடியாது.ஓடு, என்ன கல்வி கற்றாலும் தெருக்கூட்டவாவது!"

 

"வேலையிழந்தவர்கள் மணித்தியாலம் ஒரு யுரோவுக்கு வேலைக்குக் கண்டிப்பாகச் செல்லவேண்டும்." அரசு இத்தகைய அவலதுள் மக்களைத் தள்ளியபடி...

 

இன்று, உழைப்பவர்களுக்கு எதிரான கொடிய சட்டங்களை இயற்றிய இந்த நவ லிபரால்கள், கொள்ளை இலாபம் அடையும் பெருவங்கி மனேச்சர்களைக் காப்பதற்கு இப்போது எங்கிருந்தோ பல்லாயிரம் கோடிகளைக் கொடுக்கிறார்கள்?

 

அப்பாவி மக்களை அறா வரிக்குள் தள்ளி,அவர்களின் குருதியை உறிஞ்சும் வரிவிதிப்பின்மூலம் அவர்தம் சில்லறைகளைப் பறித்துப் பணக்காரர்களைக் காக்கும் இந்தப் பொருளாதாரப் பொறி முறை எவ்வளவுதூரந்தாம் மக்களைக் கருவறுக்கும்?

நாம் வாழும் உலகம் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலுக்குள் வீழ்ந்திருக்கிறது.

 

இந்தப் பொருளாதரத்தின் "சுதந்திரச் சந்தை வர்த்தகம்" இன்றைக்கு-இத்தகைய சூழலிலும், மக்களைக் கொள்ளையடிக்கும் அரசுகளால் காப்பாற்றப்பட்டுவரினும் இதன் ஆயுள் நீண்டதில்லை.உலகத்தின் பொருளாதாரச் சுழற்சியானது எந்தப் பெருவணிகத்திலும் செல்வத்தைக் குவிக்கவில்லை!மாறாக, உலகத்தின் கனிவளங்களையும்,உழைப்பவர்களையும் கொள்ளையடித்தே இன்றுவரை உயிர்வாழ்கிறது.இதன் உச்சக்கட்டமானது ஊக வணிகத்தில் சூதாடிகளால் ஊதிப்பெருபிக்கப்பட்டு, ஏழைகளின் தலையில் சுமைகளை ஏற்றியே பெருந்தொகையான செல்வத்தைச் சேர்த்துவருகிறார்கள்.இதன் தாக்கம் இன்னுஞ் சில மாதங்களில் அடுத்தகட்டப் பங்குச் சந்தைச் சிதைவில் தேசங்கள் பலதைத் திவாலாக்கி வரும்போது மக்களைப் பட்டுணிச் சாவுக்கும்-கடும் உழைப்புக்கும் தள்ளும்.

 

மக்களினது நலன்களை வேட்டையாடும் கொடிய அரசுகள் இன்றையப் பொருளாதாரச் சிக்கலை மக்களின் தலைகளில் கொட்டிவிட்டுத் தனது எஜமானர்களைக் காப்பதற்கெடுக்கும் இந்த முயற்சியை மக்களின் பெயரால்"வேலை வாய்பைக் காத்தல்"எனும் போர்வையில் கீழிருந்து மேல் நோக்கிச் செல்வத்தைப் பங்கீடு செய்வது உண்மையில் கொடிய நிகழ்வு.

 

அடிமுட்டாள் தனதுமான சந்தைப் பொருளாதாரத்தின் உற்பத்திப்பொறிமுறை மற்றும் நிதிமுதலீட்டுப் பங்குச் சந்தைச் சூதாட்டம், இன்று உலகப் பாட்டாளிகள் அனைவரையுமே புதிய பாணியில் மேய்ந்து வருவதற்குப் பெயர்"வேலை வாய்பைக் காத்தல்".நமது காலத்தில் இத்தகைய கொடிய பொருளாதாரச் சுரண்டலை இதற்கு முன் பார்த்தே இருக்கமுடியாது.

 

மக்களை மறைமுகமாகவும்,நேர்முகமாகவும் வரிவிதித்துக் கொள்ளையடிக்கும் இந்தக் கொடி அரசுகள் ஏலவே பலகோடி யூரோக்களை தொழிற்சாலைகளுக்கான மானியமாகவே கொட்டி வருவது வழக்கம்.இதைப் பயன்படுத்திப் புதிய முதலீட்டாளர்கள் குறுகிய காலத்துக்குக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து அரச மானியத்தைப் பெற்ற அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் "திவால்"எனும் முகமூடியினூடாக மீளவும் அரசைத் தமது கடன்களைப் பொறுப்பேற்கச் செய்து, கருப்புப் பணத்தை லிக்றன் ஸ்டையின்,மொனக்கோ,சுவிஸ் வங்கிகளில் பதுக்கியபடி இந்தப் பொருளாதாரம் நகர,இப்போது பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் பங்குகொண்ட பெருவங்கிகளும் அதன் நிர்வாகிகளும் இந்தக் கொள்ளையை மேலும் வளர்க்கின்றனர்!

 

எந்தக் காலத்துக்கும் இத்தகைய ஏமாற்றங்களைச் செய்துவரத்தக்கபடி மக்கள் மனங்களை இவர்கள் தொடர்ந்து தயார்ப்படுத்தி வருவதற்கான அனைத்து வளங்களையும் பல்வேறு அரசியலூடாகச் செய்வதில் இத்தகைய நவலிபரல் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள்.

 

சுதந்திரச் சந்தையின் கோர முகத்தைச் பங்குச் சந்தைச் சூதாட்டத்துள் நாம் தரிசிக்கின்றோம்.

 

இந்தச் சந்தை, மூலவளங்கள் கொட்டிக்கிடக்கும் தேசங்களை வேட்டையாடக் கொடிய யுத்தங்களை ஜனநாயகத்தின் போர்வையில் செய்து, அப்பாவிகளைக் கொன்று குவிப்பதும் மறுபுறும் தமது தேசத்தில் கொடிய வரிகளை விதித்துத் தம் சொந்த மக்களைச் சுரண்டுவதும் இருவேறு முகங்களாக விரிகிறது.இதன் உள்ளடக்கம் மேலும்,மேலும் ஒரு வடிவத்தையே எடுக்கிறது.அது: கீழிருந்து மேல் நோக்கிக் கூம்பு வடிவமாகச் செல்வதைத் தள்ளுவது.இது,எந்தப் பொழுதிலும் மனித சமுதாயத்தை மகத்தான முறையில் வளர்ச்சிப்பாதைக்கு நகர்தமுடியாது.தொடர்ந்து பல சிக்கல்களையும் ஒருமுகப்படுத்தி உலகை யுத்த அபாயத்துள் வைத்தபடி, மக்களையும்,இயற்கையையும் கொள்ளையிடுகிறது.

 

நமது மொழிகள் பலம் இழப்பதற்கான ஊடக யுத்தமானது,இந்தப் பொருளாதாரத்தின் கொடிய முகத்தை மக்களின் நல்வாழ்வுக்கான இறுதி வடிவமாகச் சொல்லி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசை நியாயப்படுத்துகிறது.கொள்ளையில் பங்குகள் நன்றாக பிரிகப்படுகின்றன.இவற்றைப் பெறுவதில் ஆர்வங்கொண்டவர்கள் துள்ளிக் குதிக்கும் பொதுவிடம் இன்றைய நிலையில் பாராளுமன்றச் சாக்கடையாகவே இருக்கிறது.

 

இத்தகைய தருணத்தில் இவர்களை இனியும் நம்பி,"இந்தக் கட்சிக்குப் பதில் அந்தக் கட்சி"என்று தொடர்ந்து தூங்கி ஏமாறும் கூட்டமாக உழைப்பவர்கள் இருப்பதற்கு என்னதாம் காரணம்?

 

இந்தக் கேள்விக்கு மிக இலகுவாகப் பதிலளிப்பதைவிடுத்து, நீண்ட ஆய்வு முறையில் சிந்திக்க வேண்டிய காலம் இது.

 

கொடியவர்கள்,கும்மாளம் அடித்துக் கொண்டாட்டங்கள் செய்து, தமது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.இதற்காக அப்பாவி மக்களின் குருதி பிழிந்தெடுக்கப்படுகிறது.இத்தகைய குருதியை உறிஞ்சும் அட்டைகளை மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக முதலாளித்துவ ஊடகங்கள் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.இத்தகைய ஊடகங்களின்வழி அரசியல் புரியும் மனிதர்களைக்கொண்ட தேசங்கள் தொடர்ந்து உழைப்பவரை வேட்டையாட இன்றைய சமூக ஜனநாயக வாதிகள் மக்களின் மடியில் தவழ்ந்து, தமது அரசியலை முன்னெடுக்க இந்தக் கேடுகெட்ட கொடிய முதலாளியம் தொடர்ந்து குற்றுயிரோடு உலகத்தில் யுத்தத்தை முன்னெடுக்கிறது.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

13.10.2008


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது