Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சந்தைப் பொருளாதாரத்தை மரணப் படுக்கைக்கு  அனுப்பும் பங்குச் சந்தை.

பாதாளத்தை நோக்கிப் பங்குச் சந்தை வீழ்ந்து போகிறது.அரசுகள் மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளை-நிதிமுதலீட்டாளர்களைக் காப்பதற்கெடுக்கும் முயற்சி சமூகவிரோதமானது!பங்குச் சந்தைகுறித்துக் கட்டுரை புனைந்தவர்கள் கள்ளமௌனத்துள்.

 


 

வர்களின் கடவுளான அமெரிக்காவோ அடுத்த அடியெடுக்க அச்சப்படும் காலம் இது.யாருடைய கழுத்தை நெரித்தாவது தமது முகங்களைத் தியாக தீபங்களாகக் காட்டவெடுத்துவரும் முயற்சிக்கு உழைப்பவர்கள் பலியாக முடியுமா?

 

ஆமா,முடியும் என்கிறார்கள் அரசியல் வாதிகள்!அவர்களுக்கென்ன?இந்த ஊக வணிகத்துறையின் துணிகரமான கொன்சேர்ன்கள் கொட்டிய பெருந்தொகைப் பணத்துக்கு அவர்கள் கத்துகிறார்கள்;நாம் கொதிப்படைகிறோம்!

 

உலகைக் காட்டமாகக் காவுகொள்ளப்போகும் பங்குச் சந்தைச் சூதாட்டமானது பொறிந்துவரும் இன்றைய சூழலை, கடந்த ஆண்டுமட்டில் நொருங்கி விழும் என்றே சொன்னேன்.எத்தனையோ நண்பர்கள்-குறிப்பாகப் பத்திரி- எள்ளி நகையாடினார்கள்.இன்று, அமெரிக்கதாசர்கள் எவ்வளவு முயன்றும் பொறிந்துவரும் ஊக வணிகம், உலக அரசுகளையே பொறியவைக்கப் போகிறது!

 

முதற்கட்டமாகப் பொறிந்துபோகும் வங்கிகளைத் தூக்கி நிறுத்த முனையும் அரசுகள், பொதுசனத்தின் வரிப்பணத்தைக்கொட்டித் திவாலாகும் வங்கிகளைக் காவுகிறார்கள்.இதுவும், புஷ்வாணமாகும்.அடுத்தடுத்துச் சரியும் பங்குச் சந்தையை எண்ணிக்கொள்ளமுடியாதளவுக்குக் கதைவிடும் பொருளாதார மேதைகள் தொலைந்துபோக.

 

இருப்பவர்களின் கைகளுக்கு மேலும் கீழ்மட்டமக்களின் சில்லறைகளையே தட்டிப்பறித்துக் கொடுக்கும் இந்த அரசுகள், கீழிருந்து மேலே சமூகப்பங்கீடைச் செய்கிறார்கள்.இது, நவீன உலகம்.இங்கே,முதலாளித்துவம் என்பது "தோன்றும் போது சவக்குழியைத் தோண்டியபடியேதான் பிறந்ததாக"க் கார்ல் மார்க்ஸ் அன்றே குறிப்பட்டார்.சமூகத்துக்குத் தீங்கு செய்யும் சந்தைப் பொருளாதாரமானது ஐரோப்பிய நவலிபிரல்களால் நவீன அடிமைத்தனமாக மாற்றப்பட்டபின் உலகை யுத்தங்களால் பங்கீடு செய்ய எத்தனித்தார்கள்.இத்தகைய யுத்தங்களால் கோடி மனிதர் அழிந்தும் செல்வம் குவிந்தது இத்தகைய வல்லாதிக்க அரசுகளுக்கு.எனினும்,உலகை வேட்டையாடும் அதிபகாசூர மனேச்சர்கள் இந்தச் செல்வத்தையெல்லாம் தமது கரங்களுக்கு மாற்றியபடி, ஊக வணிகத்தில் கட்டப்பட்ட கணக்குப் புள்ளிகள் காலத்தால் நிலைக்க முடியவில்லை.

 

இது, தொடர்கதையாக மாறம்போது ஐரோப்பியப் பொது நாணயமான யூரோ நொருங்கிச் சின்னாபின்னமாகும்.கூடவே,ஐரோப்பியக்கூட்டமைப்பு ஏழை நாடுகளை அம்போவென நடாற்றில்தள்ளியபடி மேலும் இராணுவவாதத்தைத் தொடரும்.இத்தகைய தருணத்தில் பழைய ஐரோப்பா மீளவுருவாகிக் குருதியாற்றைத் திறக்கும்.

 

இன்றைய மதிப்பீட்டின்படி ஐரோப்பிய உற்பத்தி தன்னைக் கட்டுப்படுத்த முனைகிறது.ஜேர்மனிய முன்னணிக் கார்க் கம்பனிகள் எடுத்து வைக்கும் உற்பத்திக் குறைப்பு, அடுத்து நொருங்கும் நடுத்தர வர்க்க உற்பத்திச் சாலைகளைத் தெருவுக்குக் கொணர்ந்துவிடப் போகிறது.இத்தகைய நிலையில், இன்று உலகத்தின் முன் எந்தத் தீர்வும் கிடையாது.

 

மனிதர்களின் பொதுவான செல்வமெல்லாம் சிலமணி நேரத்தில் சாம்பலாகும் சந்தைப்பொருளாதார வர்த்தக முறைமையானது எப்போது பங்குச் சந்தைச் சூதாட்டமாக ஊக வணிகத்துக்கு மாற்றமாச்சோ, அன்றே வட்டிக்கு வட்டி என்ற மனிதமுகமற்ற மலட்டுப் பொருளாதாரப் பணச் சுற்றோட்டம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது!

 

நடுத்தர உற்பத்திச் சக்திகளோடு உறவாடிய உற்பத்தியுறவுகள் தெருவுக்குத் துரத்தப்பட்டது எதனால்?

 

எத்தனையோ நடுத்தரத் தொழிற்ச்சாலைகள் வங்கிகளிடம் வேண்டிய கடனுக்கு வட்டிகட்டியே திவாலாகிப் போயின.இதனால்,தொழிலாளர்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டுள்ளது.உழைப்பாளர்கள் உதிரிகளாகவும்,நாடோடிகளாகவும் மாற்றப்பட்டுவரும் இந்தச் சோதனையான காலம் திடீரெனத்தொடங்கியதல்ல.இது, சந்தைப்பொருளாதாரத்தின் படுதோல்வி.

 

இனிவரும் காலத்தில் இதை மாற்றியச் சமூகத்தன்மை மிக்கப் பொருளாதார உற்பத்தி பொறிமுறையைக் கைக்கொள்ளும் புதிய அணுகுமுறைகள் உலகத்துக்கும் உழைப்பவர்களுக்கும் அவசியமாகிறது.இது, தவிர்க்கமுடியாது மக்களைத் தெருவுக்கு இறங்கிப் போராடும் நிலைக்கு மாற்றும் என்பதை உணர்ந்த ஜேர்மனிய அரசு, இதுவரை தனது இராணுவத்தை உள்ளநாட்டுப் பிரச்சனைகளுக்கு உட்புகுத்தாத மறைமுக அரசியலைச் செய்து வந்ததைமாற்றி, இராணுவத்தைச் சட்டபூர்வமாகக் களமிறக்கக் காத்திருக்கிறது.இது, உழைப்பவர்களை வேட்டையாட எத்தனிக்கும் அரசியல்.

 

இனிவரும் காலங்கள் கலகத்துக்குரிய காலங்களாகவே இருக்கும்.கற்பனாவாதக் கதைக்காலங்கள் காற்றோடு பறக்கும்.தேசங்கள்பல திவாலாகிப்போகும்.அங்கே, உணவுக்கலகம் ஆரம்பமாகும்.இது, தற்காலிகமாக உயிர்ப்பலிகளோடு அடக்கியொடுக்கப்படும்.எனினும், மக்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படும் அவர்களது உழைப்பு மக்களையின்னும் தெருவுக்குக் கூட்டிவரும்.இழப்பதற்கரிய வேலையைப் பறிக்கும் வங்குறோத்துப் பொருளாதாரச் சூழல், மக்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத சூழலை உருவாக்கும்.அங்கே,வெடிக்கும் உயிர்த்திருப்பதற்கான போராட்டம் வெறும் தொழிற்சங்க வாதத்துக்குள் உள்வாங்கப்பட முடியாது திண்டாடும்.இத்தகைய தருணத்தில் மீண்டும் மார்க்ஸ் மிக எளிதாக உலகை வலம் வருவார்.இது, தொடரப்போகும் அடுத்த நூற்றாண்டின் கட்டியம்.

 

இன்றிருக்கும் இத்தகையவொரு சூழலை முன்வைத்துத் தமது மூளைகளைக் கசக்கும் பெரும் பொருளாதாரப் புலிகள், ஊக வணிகத்தைப் பற்றிக் கட்டியமைக்கப்பட்ட மேடையில் நிற்கவே அஞ்சுகிறார்கள்.அவர்கள் தனியார் வங்கிகளை அரசமயமாக்கும் மாய்மாலம் காட்டுகிறார்கள்.இன்று, மீள முடியாத கடனிலுள்ள வங்கிகளைத் தேசிய-அரசமயமாக்கல் என்பதன் உண்மை முகம் மக்களின் வரிப்பணத்தைத் தட்டிப்பறித்துத் தமது கையாலாக-மனித விரோத முகத்தை மறைப்பதே.

 

"உலகத்தின் மூலவளங்களை பொதுச் சொத்தாக்கு,

நிலத்துக்கான தனியுடமையை இல்லாதாக்கு,

அனைவருக்கும் அடிப்படை வருமானத்தைச் சட்டமாக்கு,

உழைப்பவர்களின் ஊதியத்தை வரியாக்கி வங்கிகளுக்குப் பங்கீடு செய்வதை நிறுத்து" எனும்,பொருளாதார வாதங்கள், மேலும் மக்களை முடமாக்கும்.

 

உண்மையில் புரட்சிக்குரிய காலத்தில் அதை நீற்றுப்போக வைக்கும் இந்த மாய்மாலங்களை உழைப்பவர்கள் நம்ப முடியாது.

 

 

இனிவரும் காலத்தில் சந்தைப் பொருளாதாரம் தவிடுபொடியாகும் என்பதே பொருளாதாரச் சூழல் சொல்லுகிறது.

 

உபரிச் செல்வத்தைப் பெருக்க முனையும் இந்தச் சூதாட்டம் இதுவரை மக்களைப் பலியெடுத்து யுத்தங்களை ஊக்குவித்தது.இது, வளர்ந்துவரும் உலகத்தின் விஞ்ஞானப் பொறிமுறைகளால் இதுவரை உயிர்வாழ்ந்துவந்தது.இனி,இத்தகைய விஞ்ஞான வேடிக்கையெல்லாம் இவர்களைக் காக்க முடியாது.

 

உலகம் மிக விரைவாக இன்னொரு தளத்துக்கு மாறித்தான் போகும்:அது,புரட்சி அல்லது சர்வதிகாரச் சரணாகதியாவென்பதை தீர்மானிப்பது அரசுகள் அல்ல.உழைப்பவரே.

 

இதற்கான தளம் ஒன்று புரட்சிகரமாக உருவாகிவருவதை இத்தகைய அரசுகள் அனுமதிப்பது திவிர்க்க முடியாது நிகழும்.மக்களின் எழிச்சிகள் எப்பவும் வெடிக்கலாம்.அதுவரை மக்களை வேட்டையாடுதல் பல முறைமைகளில் தொடரும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்.

07.10.2008

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது