Sun05052024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...13

  • PDF

வன்முறை வெறியனுடைய வழக்கறிஞர்

நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு குஜராத் மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராக ஆஜராகும் அரவிந்த் பாண்ட்யா, "முஸ்லிம்களை முடமாக்குவது தான் அவர்களைக் கொல்வதை விட சிறந்தது" என தான் நம்புவதாகக் கூறினான்.

கோத்ரா சம்பவத்திறகுப் பின் குஜராத்தில் நிகழ்ந்த மனித இன படுகொலைகளில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் கொலைகார கும்பலின் காவல் தெய்வமாக இருந்து அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பி செல்ல உதவினான் என்பதை நாடு உறுதியாகவே நம்பியது. இந்நம்பிக்கையானது உறுதியான வலுவான உண்மையாக மாறுவதற்குக் காரணம், மோடியும் மற்றும் அவனுடைய கட்சியைச் சார்ந்தவர்களும் வெளிட்ட தெளிவான பேச்சுகள் மற்றும் அல்ல, மீடியாக்கள், மனித உரிமை குழுக்கள் மற்றும் தனியார் உண்மை கண்டறியும் அணிகள் என பல்வேறு தரப்பினர்கள் மோடி ஆட்சியின் மீது வைத்த பல்வேறு குற்றசாட்டுகளும் முக்கிய காரணமாகும்.


இம்மனித இனபடுகொலைகளைப் பற்றி அதிகாரபூர்வமாக விசாரணை நடத்தும் நானாவதி-ஷா ஆணையம், இப்போது சில ஆண்டுகளாக வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. நானாவதி-ஷா ஆணையம் முன்பாக அரசாங்கத்தின் செயல்பாடுகளை நியாயபடுத்துவதற்காக நியமனம் செய்யப்படடுள்ள விஷேட அரசு தரப்பு வழக்கறிஞரான பாண்ட்யாவும் மற்ற அனைவரும் (சங்பரிவார சண்டாளர்கள்) நம்புவதைப் போன்றே, "மோடி இல்லாது இருந்திருந்தால் கோத்ரா சம்பவத்திற்காக ஹிந்துக்களால் பழிவாங்கி இருக்கமுடியாது" என்று கூறினான். பாண்ட்யா அரசு தகவல்களை இரகசியமாக பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில் பங்கெடுப்பதில் மட்டுமல்லாது, இந்த விஷயத்தில் (கோத்ரா சம்பவம்) மோடியின் சொந்த அபிப்பிராயத்தையும் அறியக் கூடியவனாக இருந்தான். "மோடியும் அவனது அரசாங்கமும் 2002ல் நடைபெற்ற இனபடுகொலையை ஆதரித்ததோடு அப்பாதகர்களுக்கு பின்னணியில் இருந்து முழுஉதவியும் செய்தது" என்ற குற்றசாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கறிஞர்களின் படையை வழிநடத்தி செல்லும் பாண்ட்யா தெஹல்காவிடம் கூறியதாவது, "கலவரத்தின் போது மோடி காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் (உதவியாக) என வாய் மொழியாக உத்தரவிட்டான்."

பாண்ட்யா கூறினான், "(கோத்ரா) சம்பவம் நடைபெறும் போது ஹிந்து அடிப்படையிலான அரசு இருந்தது. எனவே மக்களும் (காவி வெறியர்கள்) தயாராக இருந்தனர். இன்னும் மாநில(அரசு)மும் தயாராக இருந்தது... இது ஒரு மகிழச்சியான ஒருமித்த நிகழ்வாக அமைந்தது."

 

இந்த நிருபர் ஜுன் 6 மற்றும் 8 தேதிகளில் இருமுறை பாண்ட்யாவை சந்தித்தார். "பாஜக அல்லாத அரசாங்கம் 2002ல் இருந்திருக்குமானால், கலவரங்கள் ஒருபோதும் நடந்திருக்கவே முடியாது" என்று இவ்விரு சந்திப்பின் போதும் பாண்ட்யா மிகவும் வலியுறுத்தி கூறினான். கோத்ரா சம்பவத்திறகுப் பின் மோடி மிகவும் மனஉளைச்சல் அடைந்திருந்தான், அவனே அஹ்மதாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான ஜேத்புராவில் வெடிகுண்டுகளை வீசியிருக்க வேண்டும் என்னும் அளவுக்கு மனம்பாதித்தது - ஆனால் முதலமைச்சர் என்னும் அவனுடைய பதவியே அவ்வாறு செய்யவிடாமல் கட்டுபடுத்தியதாகவும் அவன் (பாண்ட்யா) கூறினான். குஜராத்தில் முஸ்லிம்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது "வெற்றி நாள்" என ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படவேண்டும் என அவன் எண்ணியதாக பாண்ட்யா கூறினான். இன்னும் அவன் கூறியது என்னவென்றால், முஸ்லிம்களை முடமாக்குவது அவர்களை கொல்வதை விடவும் சிறந்ததாக இருந்திருக்கும். இன்னும் இது குறைந்த அளவுக்கு தண்டனையை (காவி வெறியர்களுக்கு) கொடுக்கக் கூடியது என்பதோடு மட்டுமல்லாமல், ஹிந்துக்களுக்கு எவ்வளவு வலிமையுள்ளது என்பதனை தெரியபடுத்தும் வாழும் விளம்பரமாக ஒவ்வொரு முடமான முஸ்லிமும் சேவையாற்றுவான். முஸ்லிம்களுக்கு பொருளாதாரத்தில் இழப்புகளை ஏற்படுத்தி கொடுமை செய்வதும் அவர்களை கொலை செய்வது போன்று முக்கியமானதே என்று கூறி முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளை பாண்ட்யா நியாயபடுத்தினான்.

 

இவை எல்லாம் மட்டுமல்ல, ஆணையம் முன்பு அரசாங்கத்தின் செயல்படுகளை நியாயபடுத்த முயற்சிப்பதோடு, வன்முறை குற்றவாளிகளுக்காக வழக்குகளையும் பாண்ட்யா வாதாடி வருகிறான். அநேகமான வழக்குகளில் நீதிபதிகள் அவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் இன்னும் வழிகாட்டுதல்களையும் தருவதாகவும் அவன் (பாண்ட்யா) தெஹல்காவிடம் கூறினான்.

 

"எல்லா நீதிபதிகளும் என்னை அவர்களுடைய ஆலோசனை மண்டபத்திற்கு அழைக்கிறார்கள். இன்னும் எனக்காக முழு அனுதாபம் காட்டுகிறார்கள்....... முழு ஒத்துழைப்பை எனக்கு தருகிறார்கள். ஆனால் சிறிது தூரத்தை என்னிடத்தில் கடைபிடிக்கிறார்கள்.... அவ்வப்போது தேவைபடும் வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் தருகிறார்கள்..... எப்படி வழக்கை போடுவது; இன்னும் எந்த தேதியில்.... ஏனென்றால் அவர்கள் எல்லாம் அடிப்படையில் ஹிந்துக்கள்...... எனவே எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் உதவிகள் முன்வந்து கிடைத்தது. .... மக்கள் (காவி வெறியர்கள்) ஒற்றுமையுடன் இருந்தார்கள். இன்னும் அவர்களின் ஒரே குறிகோள் ஹிந்து மதத்தை வாழ (?) வைக்க வேண்டும் என்பதாக இருந்தது" என வழக்கறிஞர் (பாண்ட்யா) கூறினான்.

 

குஜராத்தில் முஸ்லிம்களின் பாதிப்புகளுக்கும் தொடச்சியான துன்புறுத்தல்களுக்கும் அங்குள்ள நீதிதுறை மட்டும் தான் குற்றத்தில் கூட்டு வைத்தது என்றல்லாமல், நானாவதி-ஷா ஆணையம் கூட விட்டு கொடுத்தது. ஆணைத்திற்கு தலைமை தாங்கிய KG ஷாவும், நானாவதியுடன் சேர்ந்து பாஜக-விற்கு அனுதாபம் காட்டினார்கள். நானாவதி பணத்தின் மீது மடடுமே ஆர்வம் கொண்டிருந்ததாக கூறி பாண்ட்யா அவரை ஏளனம் செய்தான். ஜுன் 8 2007 அன்று பாண்ட்யா அஹ்மதாபாத்தில் உள்ள அவனது இல்லத்தில் வைத்து தெஹல்காவுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி இதோ வருகிறது