Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பெண்குரங்குத் திருமணம்

  • PDF

பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி

`பெண்வேண்டும் மகனுக்' கெனப்
`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டு
பேச்செல்லாம் கீச்'சென் றனன்.
`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண்

`இரட்டைவால் அல்ல' என்றான்.
ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன்.

`என்றன்பெண் கால்வ ரைக்கும்
கருங்கூந்தல் உண்'டென்ன, ஏழையண் ணாசாமி
கடிதுமண நாள்கு றித்தான்.
கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண்
கழுதையா? அல்ல, அதுதான்
பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவால்
பெட்டைக் கருங் குரங்கு!
பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும்
பெரியஎன் அன்னை நாடே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt254