Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

யானையும் குட்டி குழந்தைகளும்

  • PDF

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது

அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது

பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது

அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது

டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/46.html