Language Selection

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

 

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

 

1. புலிகள் இதை மறுக்கின்றனர். புலிகள் இன்னமும் கொண்டுள்ள இராணுவபலம், உளவு அமைப்பின் திறன், உதிரியான பாசிச லும்பன்களை இன்னமும் ஒருங்கிணைத்துள்ள ஸ்தாபன வடிவம், புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நம்பிகையை இன்னமும் புலிக்கு கொடுக்கின்றது. இப்படி புலிக்கு எதிரியாக உள்ள பெரும்பான்மை நம்புகின்றது.

 

2. புலியெதிர்ப்பு, அரசு தான் புலிகளை தோற்கடிப்பதாக நம்புகின்றது. ஆனால் இது எப்படி சாத்தியமானது என்பதும், புலிகள் என்ன செய்கின்றனர் என்ற அங்கலாய்ப்பில் உளறுகின்றனர்.

 

புலிகள் பதுங்கின்றனரா, புலி பதுங்குவது பாய்வதற்குத் தான், என்று எப்படி எந்தக் கதை சொன்னாலும், விளைவு ஒன்று உண்டு. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இவர்களால் சீரணிக்க முடிவதில்லை. இது அவர்களின் அரசியலுக்கு அஸ்தமனமாகின்றது.

 

புலி சரி, புலியெதிர்ப்பு சரி, மக்களை தமது சொந்த எதிரியாகவே பார்த்தனர், பார்க்கின்றனர். இதனால் மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் என்ற உண்மை, புலிக்கும் சரி புலியெதிர்ப்புக்கும் சரி, அங்குமிங்குமாக வாலை காட்டுபவர்களுக்கும் சரி கசப்பானதாக உள்ளது. தேசியத்துக்காகவோ, ஜனநாயகத்துக்காவோ மக்கள் தமக்காக போராட முடியாதவர்கள் என்று கூறிக்கொண்டு, அந்த மக்களை தமக்கு எதிரியாக நிறுத்தியவர்கள் தான், இன்று ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் விரோதிகளை, மக்கள் வரலாறு என்றும் மன்னிக்காது.

 

(புலி) தேசியத்துக்கான போராட்டம் சரி, புலி பாசிசத்துக்கு எதிரான (புலியெதிர்ப்பு) போராட்டம் சரி, இவை இரண்டுமே மக்களை தமக்கு எதிராக நிறுத்தினர். இப்படி மக்களின் எதிரிகளின் போராட்டம் என்பது, மக்களை ஒடுக்குவதாக இருந்தது. மக்களை ஒடுக்குவதன் மூலம், தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பெறமுடியும் என்றனர். இப்படி இவர்கள் மக்களுக்கு எதிராக கட்டமைத்த புலிப் பாசிசமும், அரச பாசிசமும் மக்களை அடக்கியொடுக்கி அடிமைப்படுத்தின. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, ஒரு வரலாறு இது.

 

இவ் இரண்டையும் எதிர்த்து நாம் நடத்தி வருகின்ற போராட்டம் இழிவாடப்பட்டது, கண்டு கொள்ளாது புறக்கணிக்கப்பட்டது. இன்று அந்த மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையும், புலியெதிர்பையும் தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையும் கூட, ஏற்றுக்கொள்ளப்படாமல் தான் உள்ளது.

 

இப்படியிருக்க மார்க்சியம், மக்கள் விடுதலை என்று, சிலர் புது வேஷம் போட்டு பினாற்றுகின்றனர். இது போல்தான், கடந்த காலத்திலும் புலி சரி, புலியெதிர்ப்பும் சரி மக்களை ஏமாற்ற, தாம் மக்களுக்காக போராடுவதாக காட்ட முனைந்தனர். மக்களை அணிதிரட்டி அவர்களை போராட்டத்துக்கு இட்டுச்செல்லாத வடிவங்களில், மக்களை ரசிகர் கூட்டமாக தம் பின்னால் வைத்திருக்க, அரசியல் மோசடிகளையும் கவர்ச்சிகளையும் காட்டி இட்டுக்கட்டினர்.

 

மக்கள் தம்மை ஆதரிப்பதாக காட்டமுனைந்தனர். மக்களுக்காக சில கதாநாயகர்கள் மட்டும் போராடமுடியும் என்று, சினிமா அரசியலை நடத்தினர். இப்படி போராட்டத்தை திரித்தனர். மக்களை மந்தைக் கூட்டமாக, அங்குமிங்குமாக வளைத்து, அவர்களை வைத்துச் சவாரி விடமுனைந்தனர். ஒருபுறம் தேசியம், மறுபக்கம் ஜனநாயகம் என்ற இரண்டு எதிர்ப்புரட்சிக் கும்பல், மக்களின் பெயரில் மக்களை அடிமைப்படுத்தினர். இவர்களில் பிழைக்கத் தெரிந்த சிலர், இன்றும் மக்கள் போராட்டம், மார்க்சியம் என்ற புது வேஷம் போடுகின்றனர்.

 

மக்கள் தமக்காக தாம் அணிதிரண்டு போராடாத வரை, அந்த அரசியலை முன்னிறுத்தாத வரை, தாம் மக்களுக்காக போராடுவதாக கூறுவது எல்லாம் தோற்கடிக்கப்படும். இந்த எதிர்ப்புரட்சி அரசியல் தோற்கடிக்கப்படும் என்ற உண்மை, புலி மற்றும் புலியெதிர்ப்பு தளத்தில் நிதர்சனமாகி வருகின்றது.

 

புலி மற்றும் புலியெதிர்ப்பு பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், அரசியல் லும்பன்களும், அரசியல் தளத்தில் இன்றும் தமது இறுதி ஆட்டத்தை நடத்துகின்றனர். ஏதோ தாம் மக்களுக்காக இருப்பதாக, காட்ட முனைகின்றனர். தமது 30 வருட வரலாற்று பின்னணியை மூடிமறைத்துக் கொண்டு, நிலைமைக்கு ஏற்பத் பிழைக்கத் தெரிந்த சிலர் புதுவேஷம் போடுகின்றனர்.

 

இவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம் எல்லாம், மக்களுக்கு எதிரான அவர்களின் சொந்த நடத்தைகளுடன் சங்கமமாகி வெளுறிக்கிடக்கின்றது. வேஷம் போட்டு மக்கள் புரட்சியை யாராலும் நடத்த முடியாது. மக்கள் தான், தமது வரலாற்றை தீர்மானிக்கின்றனர்.

 

பி.இரயாகரன்
18.08.2008

 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ