Language Selection

உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.

 

இருஷ்சியாவுக்கும் ஜோர்ச்சியாவுக்குமான தற்போதைய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற்கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது.இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய பனிப்போரை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதற்கேதுவானவொரு வெளியை போலந்தில் நிறுவும் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டத்துள் வகுத்துள்ளது.போலந்தில் வரும் 2011 க்குள் பத்து ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை அது நிறுவவுள்ளது(Ground−Based Midcourse Defense System" (GMD) இதைக்கடந்து செக் குடியரசுள் நிறுவப்படும் ராடர் கருவியூடாகப் புதிய பனிப்போரை மிக இலகுவாக இருஷ்சிய ஆதிக்கத்தின்மீது திணிக்கும்போது, இருஷ்சியாவின் மக்கள் நலக்கட்டுமானங்கள் பலவீனம் அடையும்.தொடர்ச்சியான இரணுவவாதப் பொருளாதாரமானது மக்களை-மக்கள நலக் காப்புறுதிகளைக் கேள்விக்குட்படுத்தும் இதன் வருகையோடு மிக இலகுவான கொந்தளிப்பு-குழறுபடி அரசியல் போக்கை இருஷ்சியாவுக்குள் தொடர்ந்து நிலவச் செய்யும்போது,இத்தகைய தேசத்தால் அமெரிக்க ஆதிக்த்தை எதிர்க்கும் வலுவில்லாதுபோகிறது.


இன்றைய பொருட்குவிப்பின் தொடர்ச்சியில் உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.இதுன் மறு விளைவானது ஐரோப்பியக் கண்டத்துள் புலம் பெயர்ந்த மக்கள்மீதான இனவாத அரசியலாகவும் விரிந்து தொடர் இனவாதத்தை உற்பத்தி செய்கிறது.


இருஷ்சியாவுக்கும்,ஜோர்ச்சியாவுக்கும் இடையிலான முரண்பாடுகளின் விருத்தியானது ஐரோப்பிய எரிபொருட்கட்டுப்பாட்டை இருஷ்சியாவின் அரசியல் ஆதிகத்துள் கொணர்ந்திருப்பினும் போலந்துடனான நட்புறுவு ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவானது இருஷ்சியாவின் அரசியல் வியூகத்தை உடைப்பதற்கானவொரு மிக நுட்பமான போர்த்தந்திரோபாயத்தை உலகத்தின்மீது திணித்திருக்கிறது.இங்கே,எண்ணைவள நாடுகளுக்கிடையிலான எல்லாவகைத் தார்மீக உறவுகளும் சிதலமடைய அமெரிக்க பூகோள அரசியல் வியூகம் தூபமிடுகிறது.இதன்வாயிலாக இருஷ்சிய அரசியல் வியூகமானது தனது தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தொடர்ந்து நகர்த்தமுடியாது அந்நிய நிதிநிறுவனங்களை அல்லது உலக நாணயச் சபையை,உலக வங்கியை நாடவேண்டியதும்,தங்கியிருக்கவேண்டியதுமானவொரு சூழல் ஏலவே இருஷ்சியாவுக்கு வந்துவிட்டது.இது இறுதியில் போர்முனைப்படையவும் அதன் தொடர்பான அரசியலால் இருஷ்சிய மேலாதிக்கம் தன்னளவில் தகர்வதற்குமானவொரு யுத்தமாக முனைப்பெறும் உள்நாட்டு யுத்தம் ஒன்று இருஷ்சிய மக்களால் முன்னெடுக்கப்படும்.அப்போது பூட்டின்-மெட்வேடெவ் கூட்டு அரசியல் ஆளுமையை இழக்கும் ஒரு கனவை அமெரிக்க-நேட்டோக் கூட்டுக்கள் திட்டமிட்டபடி தரிசித்துவருகின்றன.


ஜோர்ச்சியாவென்பது கௌவ்கசுஸ் பிரதேசத்தின் எண்ணைவள அரசியலில் மிகப்பிரதானமானவொரு பாத்திரத்தை வகிக்கின்றது.இது இருஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலானவொரு பாரிய கேந்திர முக்கியத்துவத்துக்கான சதுரங்க அரசியலை விரித்துள்ளது.இந்தக் கேந்திர முக்கியத்துவமே அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளின் இருஷ்சியாமீதான ஆட்சேபமாகவும்,யுத்த எதிர்ப்பாகவும் இன்னொரு கட்டத்தில் ஜோர்ச்சியாவின் இறைமையாகவும் இவர்களின் வாயிலிருந்து வருகிறது.இது எப்பவும் தமது வளத்தையும்,அதன் வாயிலாகத் தமது நிதி முதலீட்டையும் முன்வைத்த அரசியலாக இருக்கும் என்பதை இவர்கள் மறைத்தபடி உலகுக்கு ஜனநாயகம் பேசுகிறார்கள்-ஜோர்ச்சிய அப்பாவி மக்களை காப்பதாகவும் நாடகம் போடுகின்றனர்.இங்கே,நமது கண்முன்னால் நடந்தேறும் ஈராக் யுத்த அழிப்பு-அராஜக யுத்தம் நமக்குக் கற்பிப்பது ஈராக்கு ஜனநாயகம் என்பதையே.ஆனால்,அமெரிக் அட்டூழியம் ஈராக்கை தாக்கும் எந்த இறையாண்மைத் தனக்குள் கொண்டிருந்ததென்பதை இதுவரை இவர்கள் கேள்விக் குட்படுத்தவில்லை.


ஜோர்ச்சியாவுக்கூடாக கட்டப்படும் நபுக்கோ புரஜெட்(Nabucco Projekt und das Projekt Kaspisches Erdoel Pipeline Odessa-Brody und auch der BTC Pipeline)(எரிவாயு மற்றும் எண்ணைக் குழாய்கள்)இந்த இருஷ்சிய யுத்தத்தால் மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது.கஸ்பிஸ் எண்ணையூற்றைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்குக் காவிவரும் மேற்காணும் குழாய்கள் யாவும் ஜோர்ச்சியாவினூடாகவே அதன் நிலத்தைப் பிளந்தபடி துருக்கியின் செய்கான்;(Ceyhan) துறைமுகத்தை வந்தடைகின்றன.இதைக்கடந்து நபுக்கோ குழாய்கள் துருக்கியை ஊடறுத்து பல்கேரியா மற்றும் போலந்துவரை நீண்டுவரும் ஒரு திட்டம் இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தால் கேள்விக்குறியாக மாறியது மேற்குலக ஆளும் வர்க்கங்களின் மனதில் யுத்த வெறியாகவும் அதை இருஷ்சியாவோடு செய்வதிலுள்ள அழிவுச் சிக்கலாலும் ஆறு அம்ச ஒப்பந்தமாக இன்று வருகிறது.இதன்படி இருஷ்சியா தனது படைகளை ஜோர்ச்சியாவிலிருந்து விலக்குவாதாக வாக்களித்தாலும் இந்தப் பிரதேசம் இருஷ்சிய மற்றும் அமெரிக்க வல்லூறுகளின் வேட்டைக்காடாகவே இருக்கும்! இதுவே, அமெரிக்க அரசின் உலக ஆதிகத்துக்கானவொரு அரசியல் சூழலை மிகவும் அர்த்தபுஷ்டியாக ஆக்கித் தருகிறது.அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த அமெரிக்காவுக்கும் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.இது தற்காலிகமானதுதாம்.எனினும்,இன்றைய எண்ணைவளத் தேசங்களின் கையாலாகாத அரசியற்றலைமைகளால் யுத்தமென்பது தவிர்க்கமுடியாதபடி உலகத்தில் பலகோடி மக்களை அழித்துவருகிறது.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
17.08.2008

தொடரும்.


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது