Language Selection

இன்று ஒரு பக்கச் சார்வான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களை அறைகூவி அழைக்கிறார்.தனது தேசத்தின் தலை நகரான Tiflis நோக்கி நகரும் இருஷ்சியப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு அரசியல் நாடகத்தில் அமிழ்ந்துபோகிறார்.இவர் ஒரு "அப்பாவி-தனது அரசியல் கணிப்பின் தவறினால்" தனித்துப்போன அரசியல் வாதியாகவும்,அந்தக் காரணத்தால் தவறான மதிப்பீடுகளால் பிரிந்துபோன தென் ஒசாத்தியாவை மற்றும் அப்சாசியன் மாகாணங்களை ஜோர்ச்சியவோடு இணைக்கும் இராணுவ நடவடிக்கையில் இறங்கியதாகவும் மேற்குலக ஊடகங்கள் காதினில் பூ வைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளன.நாமும் போதாதற்கு

 இவ் நிகழ்வுகளின் பின்னே அலைகிறோம்.இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் துவக்கி வைத்தவர்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிப்பதாக நாடகம் போடுகின்றனர்.தமக்கும் ஜோர்ச்சிய இராணுவ நடவடிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்பதாகவும்,தாம் இருஷ்சியாவைக் கண்டிப்பதாகவும் ஓலமிடுகிறார்கள்.இதுவொரு பரீட்சார்த்த யுத்தம்.இங்கே,இருஷ்சியா தனது இறையாண்மையைக் காப்பதற்கானவொரு போராட்டத்தில் தன் இருப்பை நிலைநாட்டுகிறது.

 

நாம் இது குறித்துக் கருத்துச் சொல்வதைவிட இந்த யுத்தத்துள் நிலவும் கேந்திர-புவிகோள நலன்கள் குறித்துக் கருத்துகள் முன்வைப்பதில் கவனத்தைக் குவிக்கிறோம்.எங்கள் வாழ்வும்,சாவும் ஏன்-எதற்கு என்றே அறியாதவொரு நிலையில் நமது தேசம் உருக்குலைகிறது.இந்தச் சூழலில் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இருஷ்சியப் பொருளாதார நலன்களின்வழி நகரும் அரசியல்-பூகோள வியூகங்கள் உலகை யுத்த நெருக்கடிக்குள் தள்ளித் தத்தமது நலன்களை அடைய முற்படும் தருணங்களில் அப்பாவிச் சிறுபான்மை இனங்கள் அழிந்துபோகிறார்கள்.இதன் தொடர்ச்சியில் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய எழிச்சிகள் யாவும் வல்லரசுகளின் அரசியல் இலாபங்களுக்காகப் பலிகொள்ளப்படும் இந்த நூற்றாண்டில்,நாம் வந்தடையும் அரசியல் என்னவென்பதும்,எம்மிடம் எஞ்சம் விடுதலை எதுவென்பதும் கேள்வி.


இதைக்கடந்து,கடந்த சில தினங்களாக நடைபெறும் யுத்தத்தின் மூலம் என்ன?இவ் யுத்தத்தைக் கொண்டு நடாத்த முனைந்த சக்தி எது? சாகஸ்வல்லி என்பவர் உண்மையில் தனது அப்பாவித்தனமான கணிப்பினால் இவ் யுத்தத்தை ஆரம்பித்தாரா? என்பதற்கு ஓரளவு விடை தேடுவதில் கவனத்தைக் குவிப்போம்!

"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று ஓலமிடுவதிலும் மத்திய ஆசியாவிலும்,ஐரோசியவிலும் நிகழும் அமெரிக்க நலன்கள் நமக்குப் புலப்படுகிறது.

 

"ஜோர்ச்சியாவின் சுயாதிபத்தியத்தை மதிக்க வேண்டும்"என்றும் "உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்கு வரவும்"என்று ஜேர்மனிய அதிபரான அம்மணி மேர்க்கல் அங்கேலா அழுது வடிகிறார்.

 

ஐயா சார்க்கோசி ஆடிப்போய் உடனடியாக ஜோர்ச்சிய விரைகிறார்.

 

உலகத்துக் கிறித்தவர்களின் தேவ தூதன் போப்(பு)பாண்டையர் இந்த நூற்றாண்டின் ஈராக் அவலத்தைத் தன் அங்கிக்குள் மறைத்தபடி இருஷ்சியாவுக்குக் கட்டளையிடுகிறார்:"கிறிஸ்தவத்தின் பெயரால் யுத்தத்தை நிறுத்தி முடிவுகாணவேண்டுவது உலகக் கிறித்துக்களின் பெரு விருப்பம்"என்று கிறித்துவம் அகிம்சையைப் பேணுகிறது.

 

ஜேர்மனிய வெளிநாடடமைச்சர் ஸ்ரையின் மாயர் தனது உலகக் கூட்டாளிகளான அனைத்து நாடுகளினதும் வெளித்துறைமந்திரிகளுக்கும் ஓய்வின்றித் தொலைபேசுகிறார்.ஜோர்ச்சிய யுத்தத்தால் அழியும் மக்களைக் காப்பதற்காகக் கடும் பிரயத்தனஞ் செய்கிறார்களாம்.நல்லது!

 

இந்தக் கௌகசுஸ் யுத்தம் (KaukasusKrieg) அண்மித்துவரும் அணுவாயுதத் தாக்குதலுக்குக் கட்டியம் கூறுகிறது.இது,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து பூகோள அரசியல் வியூகத்தினது மிகப் பெரியவொரு வெளியைத் தாங்கியுள்ளது.ஈரானைச் சாட்டுவைத்து,போலந்து மற்றும் செக் குடியரசுள் நிறுத்தப்படப்போகும் அமெரிக்க ஏவுகணைத் தடுப்புப் பாதுகாப்புத் திட்டத்துக்கும் இவ் வலயத்துக்கும் அதிகம் தொடர்புகளுண்டு.இதன் தொடராக இருஷ்சியாவின் முதுகெலும்பை உடைக்க முனையும் அnமிரிக்கக் கூட்டணிக்கு-நேட்டோக்கூட்டணிக்கு மிக அவசியமானவொரு அரசியல் சதுரங்கக்காயாக ஜோர்ச்சிய இருக்கிறது.கௌகசுஸ் வலயமானது புவியற்படி 1100 கிலோமீட்டர் நீளமான மடிப்பு மலைத்தொடர்களைக்கொண்டு கருங்கடலிலிருந்து கஸ்பிஸ்சன் கடல்வரை விரிந்து கிடக்கிறது.இவ் மலைத்தொடரின் உச்சியானது 5642 மீட்டர் உயரத்தில் கம்பீரமாகக் கொலுவற்றுள்ளது.இந்த மலைத்தொடர்களினது பிராந்தியம்(Territorium)இருஷ்சியா,ஜோர்ச்சியா,ஆர்மேனியன்,அசர்பைட்சான் வரை விரிந்து மேவிச் சிறியவொரு பகுதி துருக்கிவரை நீண்டுகிடக்கிறது.இங்கே,(ஐம்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்வதால் அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பல்மொழி-பண்பாடுகளுடையவர்களாகவும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்களுமாக இருக்கிறார்கள்.இங்கே,புவிப்பரப்புள் நிலைபெற்றுக்கிடக்கும் கனிவளங்களே இவ்பிரதேசத்தின் கேந்திர அரசியலைத் தீர்மானிக்கிறது.அமெரிக்காவுக்கோ அன்றி மேற்கு ஐரோப்பாவுக்கோ இப்பிரதேசம் ஒரு முக்கியமானவொரு அரிய உயிர்வாழ்விக்கும் வலயமாக இருக்கிறது.400.000.ஆயிரம்(நான்கு இலட்சம்)சதுரக்கிலோமீட்டர் உடைய இந்தப்பிரதேசத்தில் நடந்தேறும் அரசியல் முழு உலகத்தையும் வேட்டையாடும் அரசியலாக விரியும் பொருளாதார இலக்குகளைக்கொண்டியங்குகிறது.

 

இந்த இலக்குகளை அறியாதவர்கள் ஜோர்ச்சியவென்பது அமெரிக்காவுக்கும் இருஷ்சியாவுக்குமிடையிலான பனிப்போரை ஆரம்பித்து வைத்ததாகச் சொல்வதில் இப்பிரதேசத்தில் ஜோர்ச்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார-நிதியீடுகளையும் அதன் கேந்திர ஸ்த்தானத்தில் தொடர்ந்து புதைத்துத் துருக்கிவரை வரும் எண்ணைக் குழாய்க்குமான இருப்புக்குறித்து மௌனித்தல் புரிந்துகொள்ளத் தக்கதல்ல.

 

தொடர் யுத்தம் நிச்சியமாகக் கடைப்பிடிக்கப்படும் தருணத்தில் இருஷ்சியா தான் விரும்பியவொரு இலக்கை அடைவதென்ற வியூகத்தின்வழி போராடுவதென்பதில் எனது கணிப்புத் தவறாகாது.இவ்யுத்தத்தின்மூலமாகத் தொடர்ந்து பற்றியெரியும் காடுகள்,நிலங்கள்-கட்டிடங்கள் இன்னொரு இலக்கைக் குறிவைக்கும்.அதுவேதாம் அமெரிக்க-ஐரோப்பிய உயிர்வாழ்வோடு அரசியல் செய்வதாக இருக்கும்.

 

உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரும் எண்ணைக் குழாய்"Baku-Tabilisi-Ceyhan-Pipeline(BTC)"என்பது அசைர்பைட்சான்,ஜோர்ச்சியா ஊடாகக் கருங்கடல் ஆழ்ந்து துருக்கிவரை மத்தியகடலூடாக ஐரோப்பாவை அண்மிக்கக் காத்திருக்கிறது.இதை நெருப்பிலிடும் அவலத்தை எதிர்கொள்ளும் தகமை யாருக்குண்டு?


இக் குழாயின்வழியாக அரேபிய மற்றும் இருஷ்சிய எரிபொருள் ஆதிகத்தில் ஐரோப்பா தங்கியிருப்பதைத் தவிர்க்க முடியும்.இதன் மிகப்பெரும் நன்மையாகவும் இருஷ்சியாவின் பொருளாதார ஆதிகத்தை முறியடிப்பதுமாக இருக்கும் இவ்வலயத்தின் மதிப்பு உலகத்தின் முன் மிக அதிகம்.


"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று அமெரிக்கா கத்துவதில் அதன் அரசியல் புரியத் தக்கது.1998 ஆம் ஆண்டு ஜேர்மனியச் சைற் பத்திரிகை ஈராக் யுத்த முன்னெடுப்பின் அடவாடித்தனமானது ஐ.நா.எல்லைகளை-சட்டத்தை மீறுவதாகவும்,ஐ.நா.ஒப்புதல் தரவில்லையென்றும் வாதாடியபோது -அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர் திருவாளர் Brzezinski யிடம் கேட்கப்பட்ட நேர்முகத்தில் அவர் உதித்த முத்துக்கள் மிக அலாதியானது:

 

//zeit: Es gab dennoch keine offizielle Zustimmung der Vereinten Nationen zu Luftangriffen ...


Brzezinski: Es gab keine offizielle Ablehnung. Und es herrschte viel schweigende Zustimmung.//-
http://www.zeit.de/1998/48/ein_ende_finden

 


>>>சைற் பத்திரிகை: ஈராக்மீதான அமெரிக்காவின் விமானக் குண்டு வீச்சுக்கான அனுமதியை ஐ.நா.சட்டபூர்வமாக-உத்தியோக பூர்வமாக அனுமதிக்கவில்லை...

ப்பிறசின்ஸ்கீ: ஐ.நா.உத்தியோக பூர்வமாக விமானத்தாக்குதலை நிராகரிக்கவில்லை.அதாவது,மௌனமாக நமது திட்டத்தை-தாக்குதலை அனுமதித்துவிடுகிறது... <<<


இத்தகைய சூதாட்டத்தில் பூட்டின் கூறும் சதாம் இன்றைய ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி.அடிப்படையில் வல்லாதிக்கம் வைத்த சட்டத்தை கையிலெடுக்கும் பூட்டின் தரப்புக்கு அரசியல் பாடம் நன்றாகவே புரிகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.2008.


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது