Language Selection

இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின்> நமது வாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் குறுகிய மதிப்பீடுகளால்(இன்றைய வாழ்வியல் மதிப்பீடுகள்)அன்நியப்டுத்தியபோது,நமது வாழ்வு விலங்கிடப்பட்டு ' இருப்பழிந்த-உளமிழந்த' நிலையாகிப் போனதால் ஜந்திரத்தனமானோம். இப்போதெல்லாம் வாழ்வினது பெறுமானம் நிம்மதியான வேலையும்,அதைத்தக்கவைப்பதற்கான விடாமுயற்சியுமே மனித வாழ்வினது பெருநோக்கில் முக்கியமான பெறுமானம்! எந்தவொரு சூழலிலும் இந்த வகைப் புரிதலோடுதாம் நமது உயிர்வாழ்வு இருப்பை உறுதிப் படுத்துகிறது.இதன்போக்கு தொழில்சார் கல்வியின் தேவையை உந்தித் தள்ளி,அறிவுப்பரப்பை ஊனப்படுத்தியதாக மாற்றியுள்ளது.

 

பண்டுதொட்டு ஆத்மீகத்தேவையைச் சிதைத்து மலினப்படுத்திய மதங்கள்-பொருளியல் நலன்கள் மனிதர்களின் மனித முகத்தைப் பறித்தெடுத்துவிட்டு,ஜந்திரத்தின் உதிரிப்பாகமாக மனிதர்களை அத்துடன் இணைத்துவிட்டுள்ளது.இதுதாம் நமதான இன்றைய வாழ்வும்,அதன் பெறுமானமும்!இதிலிருந்து விடுபடக்கூடிய வழிவகைகளைக் கல்வியிலிருந்து தொடக்கி வைக்கக் கல்வியும் மானுடர்சார்ந்த நோக்குநிலையிலிருந்து பயிற்றுவிப்பதாகவுமில்லை.அதைக் கட்டுப்படுத்தும் பெருமூலதனம் தனது இருப்கேற்றவாறு கல்வியைத் தயார்படுத்தி,ஒழுங்கமைந்த தொழில்சார் முறைமைகளுக்கே முன்னுரிமை கொடுப்பதால் நமது எதிர்காலம் இன்னும் அமைதியிழந்தும்,ஆறுதலின்றியும் போகப்போகின்றது.மனித முகமிழந்த வெறும் ஜந்திரத்தனமான உணர்வுகளோடு மனிதர்கள் சமூகக்கடமையிலீடுபடுவது எதைநோக்கி? உற்பத்தியிலீடுபடுவதும்,பெருமூலதனம் உபரியீட்டுதலுக்காகக் காரியஞ் செய்வதுதாம் வாழ்வின் பெறுமானமா?

 

நேற்று ஊரோடு வாழ்ந்த வாழ்வு பறிபோனது.

 

இன்று உடலோடு உயிர்த்திருப்பதுகூட முடியாதவொரு சூழலைத் தந்துள்ள நமது பொருளாதாரப் பொறிமுறை,இனிப் பெரும்பாலும் பூமியில் மானுட வாழ்வுக்கேற்ற பகுதிகளை இல்லாதாக்கிவிடும்.நர்மதா அணைக்கட்டு,மின் திட்டங்கள்-எண்ணையூற்று வயல்கள்,இன்னும் எத்தனையோ கனிவளச் சுரண்டல்களுக்காக மானுடமற்ற திட்டங்கள் நம் வாழ்வைச் சிறப்புறச் செய்யப்போவதில்லை.இந்த இருள்சூழ்ந்த வாழ்வில் எப்படியொரு நம்பிக்கை முகிழ்த்து, எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும்?பிரிடிஷ் பெற்றோலியம் நையீரியாவில் செய்யும் அனியாயக் காரியம் அந்தப் பகுதி மானுடர்களின் வாழ் நிலங்களை நஞ்சாக்கி மக்களின் இருப்பையே அழித்துக் கொண்டிருக்கிறது.

 

இந்தியாவிலோ பாரிய ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்கள் தமது வேட்டையைத் தொடங்கி நமது பக்க வாழ்சூழலைக் கெடுத்து வருவது தொடர்கிறது.மனித இனம் வாழ்வதற்காக இடம் பெயர்ந்த காலங்கள் போய்,இப்போது தொழிற்கழகங்கள் தாம் உயிர்த்திருப்பதற்காக இடம் பெயரும் காலம் இன்றைய காலம்.இங்கே அனைத்து மனிதவிழுமியங்களும் சிதைக்கப்பட்டு உருத்தெரியாது அழிக்கப்படுகிறது!நமது அறிவுஜீவுகளும் தமது பொன்னான அறிவை இந்தக் காட்டுமிராண்டித் தொழில் கழகங்களுக்கே வழங்கி நமது வாழ்வையின்னும் மோசாமாக்கிவிட்டார்கள்.

 

1993 இல் தொடங்கி இன்றுவரை தென்கிழக்காசிப் பிராந்தியம் அன்நியக் கம்பனிகளால் வேட்டையாடப்பட்டு வருகிறது.


இந்தியத் துணைக்கண்டம் தனது வாழ்சூழலைத் தொழிற்கழகங்களுக்காக ஏலம்விட்டு மனிதவதையைச் செய்தத் தொடங்கியுள்ளது.


இதனால் யுத்தங்கள்,அரசியற்கொலைகள்,அமைதியின்மை,சமூகப்பதட்டம்,இராணுவமயப்படுத்தலாகக் குடிசார் வாழ்வு அழிந்துபோகிறது.நாமெல்லாம் வாழ்விழந்தோம் வாழ்வதற்காய்!வாழ்வுதாம் கிட்டவில்லை,வதைபடுகிறோம்.எதிலுமே ஆதாயம்தேடும் ஐரோப்பிய மனம் எமது காலத்தை தொழில் கழகங்களின் உயிர்ப்புக்கான காலமாகமாற்றியுள்ளது.இங்கே மனிதர்கள் வெறும் கச்சாப்பொருளே.இதனால் வதைபடுகிறோம்.வார்த்தையிற் சொல்லமுடியாத வேதனைகளை அகதி வாழ்வு தந்துவிடுகிறது.உற்றார்களில்லை,உறவில்லை,சுற்றமில்லை,சூழலில்லை.எங்கே போய் வாழ்வின் சுகத்தைத்தேடுவது?யாரோடுபோய் எதைநோக?நமக்கான குறியீடென்ன? அகதி! அற்புதமான காலம் அவதியோடும்,அழுகையோடும்போவதா?

 

எதைநோக்கி?...

 

மனித்தைநோக்கி மதங்கள் காட்டிய பாதை அடிமைத்தளையைத் தந்தது.முன்னேற்றம் காட்டிய பொருளாதாரமோ உயிர்ப்பலியைத் தந்தது.


ஆன்மாவின்றி அவதிப்படும் உலக மனிதர்கள் அங்கங்கம் வகிக்கம் பொருளாதாரப் பொறிமுறை அழிவைநோக்கித்தாம் செல்லுமேயொழிய அற்புதங்களைச் செய்யமுடியாது. வர்த்தக ஒப்பந்தங்கள் வதைகளையே தந்துவிடுகின்றன,வரும் காலமெல்லாம் மனித அழிவின்றி வளமான வாழ்வு வரப்போவதில்லை.

 

அழிந்துதாம் ஆக்கமானல்,மனிதத்தோடு வாழ்வதற்கு-எல்லோரும் சமமுற ஏதுசெய்வோம்?...

 

ப.வி.ஸ்ரீரங்கன்

13.05.05


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது