Language Selection

அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்: யாரும் பொதுப்படையான அதிகாரங்களை, ஆதிக்கத்தை, இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை. மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள். இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய "புலியெதிர்ப்பு, புலி ஆதரவு-சிங்களப்பாசிச அரச எதிர்ப்பு, ஆதரவு" என்ற நிலையிலுள்ளது.

நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென. இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும். நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை. அது தேசங்களின் தேர்வுகள், தெரிவுகள், திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.

 

இங்கே நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது. புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது. இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

 

இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது. அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள். இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.

 

இத்தகைய சமூகச் சூழலில்; புலம்பெயர் மக்களில் பலர் தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களில் "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள். இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.

 

இந்த இழி நிலையில் மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு, இயக்கங்களின் அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?இதற்குத் துணையாக மக்களை அணிதிரட்டி அவர்களின் நலனை முதன்மைப் படுத்தும் புதிய ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்புமில்லை. இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம் எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது. எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.

 

மாற்றுக் கருத்தாளர்களும், அவர்களின் குழி பறிப்பும்:

மேற்குலகுக்கு வரும் தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளானலும் சரி, அல்லது மாற்றுக் கருத்தாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பழைய பெரிச்சாளிகளும்சரி தமது அரசியல் இலாபங்களுக்காகப் பதவிகளுக்காக மக்களை ஏமாற்றும் புதிய புதிய கூட்டுகளுடன் அணிசேர்ந்து தமிழரின் சுயநிர்ணயவுரிமைப் போராட்டத்தை(இதைப் புலியிடமிருந்து புரிந்து கொண்ட மூளையால் பார்க்கவேண்டாம்!புலிகளுக்கும் இதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது)நசுக்கித் தமது வாழ்வை மேம்படுத்தத் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். இதைக் கவனிக்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழர்கள் "இயக்க வாத மாயையுடன்"எதிர்த்துக் கருத்திட்டு, அறிவால் வெல்ல முடியாது- அறிவின்றித் தவிக்கிறார்கள். இவர்களிடம் இறுதியில் உணர்ச்சி வசப்பட்ட தூஷண வார்த்தையே ஆயுதமாகிறது. அப்பாவி மக்களை வழிப்படுத்தி, அவர்களிடமிருக்கும் போராட்டவுணர்வை, இயக்கவாத மாயையிடமிருந்து காத்து இந்த மக்கள் விரோத அரசியலை வென்றாக வேண்டும்.

 

ஆனால், இங்கு நடப்பதோ வேறான நிலை. நம்மில் பலரிடமுள்ள"Tamil mind"செயற்படாமல் இருக்கிறது. இது உயிருக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கிப்போயுள்ளது. இவர்கள் "We are the Free"என்று தப்பித்துக்கொள்வதற்குப் புலிகளின் மக்கள் விரோத அரசியலே காரணமாகிறது. இதனால் பதவிக்காக இனத்தையே பலியிடும் மூன்றாம்தர அரசியலை ரீ. பீ. சி. வானொலிக் குழு முன்னெடுக்கிறது. இத்தகைய சூழலில் மக்கள் சார்ந்த நலன்களைத் தமது பதவிக்காகப் பொருள்தேடும் நோக்குக்காக இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் பயன் படுத்தி வெற்றி பெறுவதை இனியும் பார்த்திருக்க முடியாது.

 

பண்பாட்டு மௌனமும், பண்பாட்டு இடைவெளியும்:

ஈழத்தை ஆதரிப் போரும், ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(;Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள். இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைக்கின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிறது. இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது. இங்கே இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை. இன்றைய வர்க்க அரசியலில் வர்க்கத்தைத் தாண்டிய எந்த மக்கள் நலனும் கிடையாதென்ற அடிப்படை அரசியல் அரிவரிப் பாடம்கூடப் புரியாது தம்மை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர்களாகவும் மற்றவர்களைச் சாடவும் உரிமையை எடுத்துவிடுகிறார்கள். ". Microphysics is feeling its way into the unknown side of matter, just as complex psychology is pushing forward into the unknown side of matter, just as complex psychology is pushing forward into the unknown side of the Psyche!"-G. G. Jung இதுதாம் யுங்கின் கூற்றிலிருந்து இவர்களைப் பற்றி நான் புரிவது. இந்தப் புள்ளியே மிக மோசமானது. இது புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறதென்பதை மறந்துவிட்டுப் புது பாக்களைத் தொகுத்துவிடுகிறது. இல்லாதுபோனால் மற்றவர்களுக்குப் புதுப் புதுத் தொப்பியைத் தைத்து அழகு பார்க்கிறது.

 

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற உலக ஏகாதிபத்தியத்துக் ஆதரவான கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும், கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.

 

இதனால் சிங்கள அரசு இந்தியாவோடு சேர்ந்து காய் நகர்த்தும் அரசியல்-ஆதிக்கப் போரை எதிர் கொண்டு தோற்கடிக்க முடியாத வெறும் கையாலாகாத இனமாகத் தமிழ் மக்கள் சீரழிந்துள்ளார்கள். இந்த நிலையில் ஆயுதக் குழுக்களின் தோற்றத்தின் பின் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பறிக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை கொலைகளும், பாலியல் வல்லுறவும் எமது மக்களின் ஆன்ம பலத்தையே காவு கொண்டுவருகிறது.

 

இங்கே நேர்ந்தது என்னவென்றால்"ஆரு குத்தியும் அரிசியானால் சரி" என்ற தனிமனிதத் திருப்தியுறும் மனதின் பண்பாடே!இதுவேதாம் பண்பாட்டு மௌனத்தின் ஊற்றுமூலமாகும். இதன் தொடர்ச்சியானது ஆயுதக் குழுக்களால் வன்முறை சார்ந்த சமூக ஒடுக்குமுறையாக விரிந்தபோது அதுவே பண்பாட்டு இடைவெளியை இன்னும் அதிகமாக்கியது. இதனால் நாம் உயிர் தப்பிவிடுவதே தனிமனித விருப்பாக நமது சமூகத்துள் முகிழ்த்தது. இந்த விருப்புறுதியின் தேர்வே இன்றைய படுகொலைகளின் நீட்சியாகும். இதுதாம் நமது பண்பாட்டு மௌனம் தந்த அரசியலாகும்.

 

பண்பாட்டு இடைவெளியை, மௌனத்தை உடைக்கும் எழுத்து இயக்கம்:


இந்தச் சமூக அவலத்தின் காரணமாக எழுந்த எதிர்ப்பியக்கமாக நமது கல்வியாளர்களில் அற்பமான பகுதியினர் செயற்பட்டபோது அவர்கள் அழிக்கப்பட்டார்கள். எங்கள் கவிஞர்கள் சிவரமணி தன்னையே அழித்தாள் இதைக் கண்ணுற்று, கவிஞர் செல்வியோ கடத்தப்பட்டுக் காணாதுபோனாள். இருளின் தூதர்களான ஆயுதக் குழுக்கள் இந்த் தமிழினத்தின் ஆன்ம பலத்தையே உடைத்தெறிந்து அவர்களின் போராட்ட மனதைத் தகர்த்தபோது இதை எதிர்த்துக் கவிதை எழுதிய ஜெயபாலன், சேரன் போன்றவர்கள் இறுதியல் ஆயுத தாரிகளின் அற்ப சலுகைகளுக்காகப் பண்பாட்டு மௌனத்தைக் கடைப்பிடித்து, அந்தவகை அரசியலுக்குள் அமிழ்ந்துபோயினர். செழியனின் அற்புத மான கவிதை வரிகள் இந்த மௌனத்தை உடைக்கப் போரிட்டுக் கொண்டது.

 

"யேசுவே! நீர் தேடப்படுகிறீர். யேசுவே எங்கள் தேசத்தில் நீர் தேடப் படுகிறீர். கிறிஸ்த்துவ தேவாலயமொன்றில்உமது சீடர்களுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கவோ, மாட்டுக் கொட்டிலொன்றில் வைத்தோ, மரித்துப் போன மனிதன் எவனாவது மரண ஊர்வலத்திலோ நீர் காணப்படுவீராயின் கைது செய்யப்படுவீர். . . "என்றும்,

 

"விசாரணையின் முடிவில் சிலுவையிலல்ல தேசத் துரோகியாக மின் கம்பத்தில் அறையப் படுவீர்" என்றும் செழியனின் எழுத்துக்கள் இந்த மௌனத்தை உடைக்கப்பாடுபட்டது.

 

அந்தச் செழியன் கனடாவில் இன்று மௌனமானார்!

வனத்தின் அழைப்பை எழுதி என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரமணீஸ் என்ற இயற் பெயருடைய அஸ்வக் கோஸ்இன்று தினக்குரலில் பனுவல் பக்கத்தின் பொறுப்பைக் கவ்விக்கொண்டு மௌனமானார். எங்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பி, சிவசேகரம், கணேசலிங்கம். . . இத்தகைய சூரர்களுக்கும் மத்தியல் தொடர்ந்து குரல் எறிந்து இந்த மௌனத்தை உடைப்பதிலும் மக்கள் நலன் அரசியலுக்குமாக நாம் போரிட்டு வருகிறோம்.

 

உதிரிப் புலி எதிர்ப்பு:

இப்போது நடைபெறும் வானொலி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம், அரசியல், சுயநிர்ணயவுரிமை, தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை, தமிழ்ப் பண்பாட்டை, வரலாற்றை அனைத்தையும் எதிரானவோர் அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது. இந்தத் தமிழ் உதிரிப் பதிப்புகள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது. இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும், திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது. திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகள் முடங்கியுள்ளார்கள்.

 

பிராமணர்கள்போலதாம் இன்றைய புலி எதிர்ப்புக் குழுக்களுக்குள் உள்ள இலங்கையரச சார்பாளர்கள் தமது நலனுக்காக மேற்கூறிய தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வுக் கூறுகளையே அந்நியர்களுக்கு விற்கிறார்கள். இந்த நிலையிலும் இலங்கைத் தமிழினம் தனது அரிசியல் அபிலாசைகளை இன்னும் நம்பிக்கையோடு கனவு காணுகிறது.

 

சங்க காலத்திற்குப் பின் தொடர்ந்து பல அந்நிய ஆட்சிகளின் கீழ் தனது அடிமை விலங்கைப் புதுபித்துவரும் தமிழினம் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்று முழங்கிய ஆயுதக் குழுக்களாலும், அரசுகளாலும் ஏமாற்றப்படுவது நிசமாகி வருகிறது.

  

ப. வி. ஸ்ரீரங்கன் 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது