Language Selection

தியம் மணி இரண்டு.

வன்னிக் கிராமத்தின் எழில்கொஞ்சும் அழகிய வீதி வெறிச்சோடிக் கிடக்க, அந்த வீதியில் அவ்வப்போது தான்தாம் இராஜாவென்றெண்ணும் நன்றியுள்ள நாலுகால் பிராணியொன்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

"வொவ்,வொவ்..."

குரைத்தலுக்குக் குறைச்சலில்லை பசித்திருக்க முடியாதபோதெல்லாம்.

வீதியின் இடது புறமாக ஐந்தாவதாக அமைந்த ஒரு வீடு அதற்குச் சொந்தம்.

வீடென்று சொன்னாற் போதுமா?


இல்லை...

மாளிகை,குடிசை?

எதுவாக இருந்தலென்ன?,அது மனிதர்கள் வாழும் ஒரு இருப்பிடம்.

அங்கே...

"கவிதா,அம்மா கவிதா"பூபாள இராகத்தில் தொடங்கிய மீனாட்சியின் குரல் முகாரியில் முடிந்தது.

"என்னம்மா?,கொஞ்சம் பொறுங்கோ.கையில வேலையாய் இருக்கிறன்."கவிதாஞ்சலி,பதிற் குரலை அஞ்சலிட்டாள் அன்னையை நோக்கி.

காலையிலிருந்து நான்கு சுவருக்குள் முடங்கிக்கொண்டு,பேனையுடனும் வெற்றுத் தாள்களுடனும் போராடிய கவிதாஞ்சலிக்கு எந்தக் கற்பனையும் வடிவமுறாது வம்பு பண்ண,"சீ...இண்டைக்கு எதுவுமே எழுத வருகுதில்லை,என்ன இண்டைக்கு எனக்கு நடந்தது?"யோசித்தபடி அண்மித்தாள் அன்னையை.

"என்னடியம்மா?கூப்பிடக் கூப்பிட உள்ளயிருந்து என்ன செய்தனீ,பள்ளிக்கூடத்தால தம்பியவங்கள் பசியோட வருவாங்கள் தெரியுந்தானே?,இந்தா,இந்த அரிசியை கழுவி உலையில போடு.நான் தோட்டப் பக்கமாப் போய் கீரை புடுங்கிக்கொண்டு வாறன்."கூப்பன் கடையிலிருந்த அரிசி இடம் மாறியபடி மீனாட்சியைக் கீரைத் தோட்டப்பக்கம் அலையவிட்டது.


கவிதாஞ்சலிக்கோ காலையிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.அவளது மனம் ஒருவயப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்போதும் எழுதிக் குவிப்பது இயல்பாக இருந்தது.தான் எழுதுவது இலக்கியமென்று சிலர் சொல்வதை உறுதிப்படுத்தப் போராடுவது அவளுக்குத் தொழிலாகியது.

இப்போதும் சமயலறையுள் இருந்து அரசியோடு அவளும் வெந்தாள்.

"என்ன இந்த வாழ்க்கை?என்றைக்குமே நமக்குப் பஞ்சம்தானா?ஏனிப்படி நமக்கு மட்டும்?ஐயா இறந்த பின்னாலே வந்ததுதானே இந்தப் பஞ்சப்பாடு?"கேள்விகளோடு அடுப்படியில் அமர்ந்தவளோ தன்னை மறந்த நிலையைக் கலைத்து உலையிலிருந்த அரிசியை அகப்பையில் எடுத்துப் பதம் பார்த்தபோது,"அக்கோய்,அக்கோய்"என்ற குரலில் அவசரமடைந்தாள்.

பள்ளியிலிருந்து வசந்தனும்,குமணனும் வந்தகையோடு அக்காப் பாட்டோடு புத்தகங்களை மூலையில் எறிந்து குசினுக்குள் முற்றுகையிட்டார்கள்.

"அக்கா கஞ்சி வடிச்சிட்டியா?"இது வசந்தன்.

"அக்கா அம்மா எங்க?"குமணனுக்கு அம்மாப் பாசம்.

"போங்கடா,போய் கால் முகம் கழுவிக்கொண்டு வாங்கோ, நான் கஞ்சி வடிச்சுத்தாறன்."என்றவள் பானையைச் சரித்து அரசி வெந்த நீரை சட்டிக்குள் வார்த்தாள்.

"அக்கோய்,அம்மா எங்கை போயிட்டா?"குமணனின் கேள்வியை வசந்தன் ஞாபக மூட்டினான்.

"தோட்டப்பக்கம் போனவா கீரை புடுங்க.வசந்தன்,நீ ஒருக்கால் அம்மாவைப் பார்த்துக்கொண்டு வாறியா தம்பி?"

"கஞ்சி குடிச்சிட்டுப் போறனக்கா!"வசந்தனுக்குப் பசி பாசத்தையுங் கடந்து.

முதல்ப் போய் பார்த்துக்கொண்டு வாடா,கிழவி எங்க விழுந்து கிடக்கோ தெரியாது."அலுத்துக்கொண்டாள்.

வசந்தனின் குடலோ அவனை அழ வைத்தபடி தாயைத் தேடித் துரத்தியது.

கவிதாஞ்சலி வடித்த கஞ்சியைக் குமணனுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மீதியை வசந்தனுக்கு வார்த்து வைக்கும்போது,"பிள்ள!பிள்ள கவிதா?தம்பியவங்கள் வந்திட்டாங்களாடி?"என்றபடி மீனாட்சி கீரையுடன் தாய்மையைக் கொட்டினாள்.

வீட்டினுள்ளேயிருந்து பதில் வராமற்போக"என்னடி குசுனிக்குள்ளவே நித்திரையா,கூப்பிடுறது கேக்குதா?"அவசரப்பட்டாள் அந்த அன்னை.

"என்னண,கத்தி ஏன் ஊரைக் கூட்டுறாய்?,அவங்கள் இப்ப கொஞ்சத்துக்கு முன்தான் வந்தவங்கள்.அந்தா குமணன் குசுனிக்குள்ளயிருந்து கஞ்சி மண்டுறான்.மற்றவன் உன்னைத் தேடித்தான் தோட்டப்பக்கம் வந்தவன்.ஏனண நீ காணயில்லையா?"


"என்னடி பிள்ளை சொல்லுறாய்?அவன் தோட்டப் பக்கம் வரவேயில்லையே.நீ எதுக்கு அவ்வளவு தூரம் அனுப்பினாய்?,ஐயோ பெருமானே நான் என்ன செய்வேன்?ஊர் கெட்டுப்போய்க் கிடக்கு.எந்தக் கும்பல் இவனைப் புடிச்சுக்கொண்டு போச்சுதோ தெரியாது சிவனே."மீனாட்சி மிரண்டபோது"சும்மா கத்தாதையண.வசந்தன் பெரிய பெடியன்.ஊருலகம் தெரிஞ்சவன்.எங்கயாவது சுத்திப்போட்டு வருவான்."என்றபடி தாயை ஆறுதல்ப்படுத்த முனைந்தாள் மகள்.

"ஓமடி,ஓமடி.உனக்கு எல்லாம் தெரியும்.வாயை வைச்சுக்கொண்டு வக்கணையாகப் பேசு.றோட்டால கண்ட கண்ட குத்தியன்கள் துவக்கோட போறதை குசினுக்குள்ள இருந்தபடி உனக்குத் தெரியுமே?நான் கூப்பன் கடைக்குப் போயிட்டு வரேக்க என்னை உரசிக்கொண்டு போறான்கள்.ஐயோ,கடவுளே!"மீனாட்சி ஒப்பாரி வைத்தாள்.

தாயும் மகளும் நீண்ட நேரம் வாக்குவாதப்பட்டபின் மீனாட்சி மட்டும் மகனைத் தேடி தெருக்கள்,கோவில்கள்,பள்ளிக் கூடம்,அயலட்டமென்று அலைந்தாள்.

நீண்ட நேரமாகத் தாயும் திரும்பாதது கவிதாஞ்சலிக்கு அச்சத்தைக் கூட்ட குமணனுக்குப் பயத்தை இரட்டிப்பாக்கியது அந்தச் சூழல்.

"அக்கோய், அண்ணையத் தேடிக்கொண்டு போனா அம்மா.இப்ப ரெண்டுபேரையுங் காணேல்ல.இருட்டப்போகுது.வா அக்கா.நீயும்,நானும் தேடிப் பாப்பம்."கால்கள் நடுங்கியபடி அக்காளும் தம்பியும் அவசரமாகப் புறப்பட்டார்கள்.

பொழுது இருண்டுவிட்டது.

இரை தேடிய பறவைகளோ கூடுகளை அண்மிக்கப் பறந்தபடி.

குரைத்துக்கொண்டிருந்த நாயோ நிறுத்தியபாடில்லை.அதன் குரைப்பு இப்போது ஊளையாக மாறியது.காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருக்க ஆங்காங்கே மழைத் துளிகள் நிலம் நோக்கி வீழ்ந்தன.

கவிதாஞ்சலியும்,குமணனும் போகாத இடமெல்லாம் போயும் வசந்தனையும்,தாயையும் நெருங்க முடியாது சோர்ந்த மனத்துடன் வயிறுகாய வீடு திரும்பினார்கள்.
அங்கு மீனாட்சி மட்டும் ஓப்பாரி வைத்தபடி வீட்டு முற்றத்தில் மண்ணோடு மண்ணாகக் கிடக்க"அம்மோய்,வசந்தனைக் காணயில்லையண.நீ எங்கேயெல்லாம் பார்த்தாய்?"என்று கவிதாஞ்சலியும் குமணனும் ஒருங்கே குரல் கொடுத்தார்கள்.

"நான் சொன்னது சரியாய்ப் போச்சடி.என்ரை பிள்ளையை பாழாய்ப்போன இயக்கங்கள் கடத்திக்கொண்டு போயிட்டுது.ஐயோ கடவுளே நான் பெத்த குஞ்சு!,என்ரை குஞ்சைக் காப்பாத்து அம்மாளே."பெற்ற மனமோ நொந்து போய்க கிடக்க,பிறந்ததுகளும் நொந்துகொண்டிருக்கத் தேசம் மாவீரர்களைத் தின்று கொண்டிருந்தது.

காலம் சென்றுகொண்டிருந்த சாமத்தில் வெளியே இருந்து ஒரு குரல் கவிதாஞ்சலியை அதிர வைத்தது.

"வீட்டுக்காறர்"

"வீட்டுக்காறர்"

அமைதியான குரலில் அந்த "வீட்டுக்காறர்"அழைப்பு இருந்தது.

"அம்மோய்,அம்மோய் ஆரவோ படலையடியில் நிண்டு கூப்பிடுகினம்"நடுங்கியபடி தாயை அழைத்துத் தைரியம் பெற்றாள் கவிதாஞ்சலி.குமணன் தமக்கையின் பின்னால் மறைந்தான்.

கவிதாஞ்சலியும்,மீனாட்சியும் அரிக்கன் லாம்புடன்"ஆரு தம்பி"என்றபடி படலைக்கு வந்தார்கள்.

"ஆரது தம்பி?"இருட்டில ஒருத்தரையும் தெரியேல்ல.வசந்தன்ர நண்பர்களோ நீங்கள்?எங்க என்ர பெடி?"கேள்விகளைக் கொட்டியபடி இருட்டில் நின்ற தலைகளை அண்மித்தாள் மீனாட்சி,தாய்மை ஏக்கத்துடன்.

"அது நாங்கள்தான்.லாம்பை அங்கால வைச்சிட்டு வாருங்கோ."அதிகாரத்துடன் ஒரு குரல்.

"ஆரு தம்பி,வசந்தன்ர சிநேகிதர்மாரே?"

"நாங்கள் தமிழர்கள் எல்லாருக்கும் சிநேகிதர்கள்தான்."வந்தவர்களில் ஒருவர் சொல்ல மற்றவர் தொடர்ந்தார்,"இங்க பாருங்கோ அம்மா,உங்கட மகன் வசந்தனை நாங்கள் நாட்டுக்காக உழைக்கச் சேர்த்துக்கொண்டு விட்டோம்.இப்படி எல்லா வீடுகளிலையும் நாட்டுக்காக உழைக்க ஒருவரை நாங்கள் அழைக்கிறோம்.இப்ப உங்களுக்கு இந்தத் தகவலைச் சொல்லிப்போட்டுப் போகத்தான் தலைமை உத்தரவு.வேறு மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.ஆனால் நாங்கள் சொன்ன இந்த விடயம் ரகசியம்.சத்தம்போட்டுக் குழறினால் பின் விளைவுகளைப்பற்றி உங்களுக்கே தெரியும்.நாங்கள் வாறம்."


மீனாட்சியின் பதிலை எதிர் பார்க்காதவர்களாய்,வந்ததும் போனதும் தெரியாமலே அவர்கள் போய் விட்டார்கள்.

மீனாட்சியோ பேய் அறைந்த மாதிரி சிலையாக நின்றாள்.வந்தவர்கள் சொன்னவை அவள் வாயைக்கட்டிப் போட்டிருப்பினும் பெற்ற வயிறு படபடத்திட மனது பொங்கிப் புலம்பலாய் மாறியது.

"ஐயோ என்ர ராசா!என்ரை குங்சு.உன்னை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டன்.ஐயா செத்தபிறகு உங்களை வளர்க்கத்தானே நான் உயிரோடு இருக்கிறன்?என்ர ராசா நீ பள்ளிக் கூடத்தால பசியோடு வருவாய் எண்டடி அரசி வேண்டி...கீரை புடுங்கிச் சமைக்க...ஐயோ என்ரை தாயே!என்ரை பிள்ளையைக் கடத்திக் கொண்டு போட்டான்களே...நானும் என்ர குஞ்சுகளும் பசியால வாடேக்க,எங்கட பட்டுணிக்கு ஆர் உதவினவை?,இண்டைக்கு வந்து நாட்டுக்கு உழைக்கச் சேர்த்திட்டினமாம்.ஆர் நாட்டுக்கு உழைக்கினம்?ஆளை ஆள் பழிவாங்க உன்னைப் பலிக்கடாவாக்கிப் போட்டான்களே என்ர குங்சு!,பாடையில போவாங்கள்.பெத்தமனதை தவிக்க வைச்சிட்டான்களே...ஐயோ..."


மீனாட்சியின் மனம் தவிக்க அவள் உடலோ மண்ணில் சரிந்தது.காலம் விலகிக்கொண்டிருக்க அவள் கண்ணீர் தரையை ஈரமாக்கியது.உளையிடும் நாயோ அவளை நக்கி மெளனித்தது.வசந்தனின் கஞ்சியோ ஆடைகட்டி ஆறிப்போய் அநாதையாகக் கிடந்தது,மீனாட்சியைப்போல்.

ப.வி.ஸ்ரீரங்கன்

(புனைவு)


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது