Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இராஜன் கூலுக்கு-ஸ்ரீதரனுக்கு மனிதவுரிமைக்கான கௌரவ விருது!

ன்று நமது மக்களின் வாழ் நிலை என்ன?எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும், பஞ்சப் பரதேசிகளாகவும் கொலையுண்டோம்-கொலையாகிறோம்? இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது இத்தகைய கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா? விருதை வழங்கும் சர்வதேச மனிதவுரிமை-மன்னிபுச் சபைகள் எந்த நலனுமற்ற-எந்த வர்க்கத்துக்கும் துணைபோகாத முற்றுமுழுதும் மக்கள் நலனில் அக்கறையுடைய அமைப்புத்தாமா? இவைகள் விடைகள் காணவேண்டிய கேள்விகள். ஏனெனில் நாம் வர்க்கங்களாகப் பிளவுண்டு, வர்க்கச் சமுதாயமாகவுள்ளளோம். இங்கே வர்க்கங்களைக் கடந்த எல்லா மனிதர்களுக்குமான ஆட்சி என்பது கிடையாது! வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கஞ்சார்ந்த அரச அமைப்பும் அதன் நிறுவனங்களுமே நிலவ முடியும். ஒரு ஏகோபித்த-மொத்த இனமோ மொழிசார்ந்த ஏகோபித்த பொருளாதார வாழ்வோ கிடையாது. தமிழைப் பேசினாலும் கூலிக்காரனும் முதலாளியும் ஒரே வர்க்கம் இல்லை. இருவருக்குமான இடைவெளி மொழியைக்கடந்து பொருளாதாரத்தில் உச்சம் பெறுகிறது. 

 

எனினும், மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்புக்கு 2007 ஆண்டின் மார்ட்டின் என்னல்ஸ் விருது கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில்(இவ்வமைப்புக்கு "இன்றைய நிலையில்" இவர்களைவிட வேறெவரும் உறுப்பினர்களெனக் கூறமுடியாது. மனோரஞ்சன்...வெண்தாமரை...கனடா...கட்சி உருவாக்குதல்...) திரு. கோபாலசிங்கம் ஸ்ரீதரன் அவர்களும் திரு.இராஜன் கூல் அவர்களும் விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 2007 வருடத்திற்கான இவ்விருதுக்கு மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு(யாழ்பாணம்) உட்பட, உலகளாவிய பதினொரு மனித உரிமை அமைப்புகள் நியமிக்கப்பட்டிருந்தன. இலங்கையைச் சேர்ந்த மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பும் புருண்டியைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமும் 2007 ஆண்டின் மார்ட்டின் என்னல்ஸ் விருதுக்குரியவைகளாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன(ர்). இவ்விருதுக்கான தேர்வு செய்யப்பட்டவர்களில் நமது தேசத்து மனிதர்கள் இருவர்கள் அடங்கும்போது நாம் நமது தேசத்தின் இழி நிலையின் தீர்மானகரமான அழிவுப் பாதையை இந்த விருது சாட்சியம் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

 

இன்றைய நாள் வரை நமது தேசத்தில் மரித்தவர்கள் இலட்சம் தொகை பெறும். இதுள் மனிதவுரிமைக்காகக் குரல் கொடுத்த சுப்பனும், கந்தனும், சின்னாச்சியும்,பொன்னாச்சியும் அடக்கம். இவர்கள் எல்லோரும்தாம் மனிதப்படுகொலைகளுக்கு எதிராகவும்,இயக்கங்களின் மக்கள் விரோதப் போக்குக்கெதிராகவும் அன்று தொட்டுக் குரலெறிந்து, நாளடைவில் இயக்கப் பயங்கரத்துக்கு மரித்திருக்கிறார்கள்! இதுள் ஸ்ரீதரனும், இராஜன் கூலும் ஒரு சிறு பங்களிப்பை அவர்கள் மூலமாகவே செய்திருக்கிறார்கள். இவர்கள் செய்த பெரும் காரியமே மக்களின் கொலைகளைப் பட்டியல் போட்டதுதாம். இதைவிட்டு இயக்கப் பயங்கரவாதத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிடவோ அன்றி மக்களின் தயவில் நின்று காரியமாற்றவோ முடியவில்லை. இத்தகைய எதிர்மறை நிகழ்வுக்குப் புலிகளின் அதிபயங்கரமான கொலைக் கலாச்சாரமே காரணமாக இருப்பினும் அதைச் சாட்டாக வைத்து மற்றைய இயக்கங்களும் இத்தகைய மனிதர்களைப் பலியெடுத்தே இருக்கின்றன. இவர்களின் சக ஓடியான இராஜினி திரணகமவைக் கொன்றபோது புலி தவிர்ந்த மற்றையவர்களின் இயக்கப் பயங்கரவாதமும் அம்பலப்பட்டுப்போனது. இங்கே நாம் இத்தகைய விருதுகளைக் கண்டு-இது மக்களினதும் ஜனநாயகத்தினதும் வெற்றியென்று கூத்தாட முடியாது. அப்படிக் கூத்தாடுபவர்கள் அந்நியச் சக்திகளின் தயவில் மக்களின் உரிமைகளை வென்றிட முடியுமென நம்பும் பேதமையுடையோரே!

 

நமது மக்களின் உயிர்கள் தினம் அழிப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் மாறிவிடவில்லை. நமது மக்களின் உரிமைகளை எவரும் இதுவரை தந்துவிடவுமில்லை. நமது மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையே உயிர்வாழும் அடிப்படையுரிமையாக விரிந்து கிடக்கும்போது, எங்கள் மக்களின் கொலைகளைப் பட்டியல்போட்டவர்களுக்கு விருது என்பது என்ன பெறுமானத்தைக் கொண்டிருக்கும்?

மக்கள் கொலையாகும் வழிகளை அடைத்து, அவர்களின் அடிப்படையுரிமைகளை வழங்கி, இயல்பு வாழ்வுக்கு வழிவிட முட்டுக்கட்டைபோடும் அந்நியச் சக்திகள் விருதுகளால் எங்கள் உரிமைகளைச் சமப்படுத்திட முடியாது. நமது உரிமைகளை இந்தியாபோன்ற அயல் நாட்டின் தயவில்தாம் பெறுமுடியுமென அலம்பும் கபோதிகளுக்கு இந்த விருது முக்கியமாகலாம்!ஆனால் நமது மக்களின் உரிமைகளை-நமது மக்களே போராடிப் பெறவேண்டுமென நம்பும் நாம் இத்தகைய விருதுகளைக் கண்டு சந்தேகமே கொள்கிறோம்.

 

எங்கள் வாழ்வும் அது சார்ந்த வாழ்வாதார உரிமையும் நமது தேசத்தின் விடிவில் மட்டுமே சாத்தியமென நம்பும் சாதரணத் தமிழ் பேசும் மக்களிடம் இத்தகைய விருதுகள் நம்பிக்கையை ஏற்படுத்தாது. மாறாகத் தமது அழிவைச் சொல்லியதற்காக விருதா என்றே நோக்கப்படும்.

 

இன்றைய கொடிய போர் வாழ்வில் ஒவ்வொரு இயக்கமும் தத்தமது நலனின் பொருட்டு மக்களின் உரிமைகளைக் கையில் எடுத்து அரசியல் பேசும்போது, அங்கே அவர்களின் பதவி ஆசையும்,பொருட் கனவுமே நிலைபெற்றிருக்க முடியும்.

 

ஸ்ரீலங்கா அரசினது இன ஒதுக்குதலும்,சுத்திகரிப்பும்-சிங்கள மயப்படுத்தலும் என்றுமில்லாதவாறு இன்று துரிதகதியில் இயங்கி வரும்போது, அதையே தமிழ் மக்களின் நலனென்று கூப்பாடுபோடும் தமிழ் இயக்க-அரசியல் தரகர்கள்,இந்த விருது தமிழ்பேசும் மக்களினதும் ஜனநாயகச் சக்திகளினதும் வெற்றியென்கிறார்கள். இங்கே இவர்கள் கூறும் ஜனநாயகச் சக்தியென்பது தம்மைத்தாம். இதுவரை தாம் சார்ந்த இயக்கங்களுக்குள் நிலவிய உட்கட்சிக் கொலைகள்-அராஜகங்களைச் சுய விமர்சனஞ் செய்து, தம்மைப் பூரணமான மக்கள் போராளிகளாகக் காட்ட முடியாத இந்தக் கபோதிகள்தாம் இன்றைய ஜனநாயகச் சக்திகள். இவர்கள் இந்தியாவுக்கு விளக்குப் பிடித்து எமது மக்களின் நலனை வென்றுவிடத் துடிக்கிறார்கள். இது எப்படியிருக்கென்றால் அந்நிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தமிழ் மக்களின் விடுதலையைச் சாதித்துவிட முடியுமெனும் புலிகளின் இன்னொரு அப்பட்டமான உறுப்புத்தாம்.

 

இன்றுவரை ஈழத்தில் ஓடும் இரத்த ஆற்றுக்குக் காரணமான இந்திய மற்றும் அந்நியச் சக்திகளின் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் எந்த மனித விரோதிகளும் தம்மை ஜனநாயக வாதிகளென்று பிதற்றட்டும், இது புலிகளின் இன்னொரு தரப்புத்தாம்.ஆனால் மக்கள் என்றும் தமது மொழியில் இவர்களனைவருக்கும் பாடம் புகட்டும் ஒரு தரணம் புரட்சியின் பெயரால் மேலெழும்போது, இந்த ஜனநாயகச் சக்திகள், புண்ணிய புலிகள் எல்லோரும் எந்தத் தரப்பில் நிற்பார்களென்று வரலாறு புகட்டும். அதுவரை மக்களின் கொலைகளைச் சொல்லி விருதுகள் குவியலாம். ஆனால் அந்தக் கொலைகளை அடைக்கும் வழி கொலையுறும் மக்களால் மட்டுமே முடியும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
08.05.2007

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது