Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
க்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே.

இங்கே அந்த ஆதாரங்களை யுத்த அரசியலூடாகத் தட்டிப் பறிக்கும் இலங்கைச் சிங்கள மற்றும் தமிழ்ப் புலிகளின் யுத்த ஜந்திரங்கள் மக்களின் விடிவுக்காகப் போரிடுவதாகக் கூறிக்கொண்டே அவர்களை பொருளாதாரத் தடையால் போராட்ட வலுவற்றவர்களாக்கித் தத்தமது இருப்புக்கேற்ற அடிமைக் கூட்டமாகவும்,தமது எஜமானர்களின் தேங்கிய சந்தைகளை மீளவும் உயிர் பெற வைப்பதற்காவும் தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள் இருத்திவைக்கின்றார்கள்.இதிலிருந்து மீளமுடியாதபடி இனவாத அரசியல் முன்னெடுப்பை இலங்கையூடாகவும் அதை எதிர்ப்பதற்கானவொரு அரசியலையும், போராட்டத்தையும் மட்டுப்படுத்திப் புலிகளிடம் வழங்கியுள்ளது,அந்நியச் சக்திகள்.


இதை நோர்வே ஊடாகச் சிறுப்புறச் செய்து முடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் மக்களை இருவேறு முனைகளாகத் தாக்குகிறது.

ஒன்று பொருளாதாரத்தடை மூலமாகவும்,மற்றது வலிய யுத்தத்தாலும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாதாக்கித் தமது ஆர்வங்களுக்கும்,பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் இசைவானவொரு இலங்கையை மெல்லத் தகவமைத்து வருகிறது.அதற்காகப் புலிகளை தேசியச் சக்திகளாகவும்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரதி நிதிகளாகவும் மக்கள் மத்தியில் செயற்பட அநுமதிப்பதிலும்,மக்களைத் துரோகி சொல்லி புலிகளை வைத்தே அழிப்பதிலும் அந்நிய நலன்கள் வெற்றி பெற்றே வருகிறது.அதன் அப்பட்டமான முன்னெடுப்பே இன்றைய யாழ்ப்பாண வாகரை நிலைமைகள்.ஒருபுறும் பொருளாதாரத்தடை,மறுபுறும் யுத்தம் இடப்பெயர்வு,அகதிய வாழ்நிலை.



இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே.இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு,தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து,அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனையையும் அணுகவில்லை.மாறாக ஈழப் போரை முன்னெடுப்பதாக மார்பு தட்டும் புலிகளைத் தமது ஆர்வங்களுக்கமையவே போரிடத் தூண்டுகிறது.அந்த ஆர்வங்களானது புலிகளுக்கான குறைந்தபட்ச இருப்பையும்,அதன் அரசியல் ஆதிகத்தையும் தமது முதலாளிய நலன்களுக்கிசைவாகவே வழங்கிக் கொள்கிறது.

இதனால் இலங்கைச் சிங்கள அரசினதும்,சிங்கள ஆளும் வர்க்கத்தினதும் பேரினவாதத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மீது இனவாத அரசியலை ஏவிவிடும் இந்த அரச கட்டமைப்¨புயும் அதன் வன்முறை ஜந்திரத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான சூழலுக்குள் தள்ளப்பட்டபோது,அந்த மக்கள் மத்தியில் மலர்ந்த எதிர்ப்புச் சக்திகள் இலங்கைமீது வலைவிரித்துள்ள அந்நிய அரசுகளால் கையகப் படுத்தப்பட்டு,அந்நிய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முறைகளைக் கருவாகக்கிக் கொண்ட அமைப்புகளை மேலும் உருவாக்க முனைகிறது,இந்த அந்நியநச் சக்திகள்!

 

அதிலொன்று புலிகளைப் பிளந்து கட்டப்பட்ட "கருணா அம்மான் என்று புலிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட" புலிகளின் தளபதியான மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா குழுவாகும்.இது இலங்கை அரசோடிணைந்து புலிகளுக்கும் கிழக்கு மக்களுக்குமான அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறியவும்,கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாகப் பிரிக்கவும் முனைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவை இன்று சாத்தியமாக்கி வருகிறது.

இனங்களுக்கிடையிலான இனத்துவ முரண்பாடு மிகச் சாதுரியமாகத் தகவமைப்பட்டு வளர்தெடுகப்படுகிறது.இதன் தேவை இந்த அமைப்பு முறைக்கு அவசியமாக இருக்கிறது.இந்தத் தேவையினது ஒரு வெளிப்பாடாகவே புலிகள் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் மாற்றியக்கங்களைத் துரோகிகளென்ற நாசியப் பிரச்சாரம்போன்று மக்களின் மனங்களைக் காயடித்து அவர்களின் பிள்ளைகளைக் கொன்றார்கள்.

 

இவர்களின் இந்தத் தீயவினையானது திட்டமிட்ட அந்நியச் சக்திகளின் மேற்பார்வையோடும்,தூண்டுதலோடுமே நடந்தேறியது.இப்போது மக்கள் மத்தியில் தாமே நிற்பதாகவும்,இலங்கை இனப்பிரச்சனைக்கும்,இனவொடுக்குமுறைக்கும் எதிராகத் தாமே போராடுவதுமாக அறைகூவலிட முனைவதும் அந்நியச் சக்திகளின் ஆர்வங்களின் தூண்டுதலாகும்.

இது,புலிகளை ஒரு மட்டுப்படத்தப்பட்ட குறுகிய நிலப் பரப்புக்குள் தள்ளி அதன் உயிர்வாழும் தகுதியைத் தமது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருக்கும் இன்றைய பூகோள அரசியல், தமிழ் மக்களின் அனைத்துத் துயரத்துக்கும் காரணமாக ஈழவிடுதலைப் போரே என்பதையும்,அந்தப் போராட்டம் மக்களின் அனைத்து அடிப்படையுரிமையையும் இல்லாதாக்கிய மெய்ப்பாட்டை மிகவும் வலுவாக மக்களுக்கு அறியப்படுத்தும் நகர்வில் வெற்றியுற வைத்து, மக்களின் போராட்ட உணர்வை மெல்ல அழித்து வருகிறது.இதுவே மூன்றாம் உலகில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முளையில் கிள்ளியெறியும் இராஜ தந்திரம்.

புலிகள் சாரம்சத்தில் ஒரு விடுதலை அமைப்பல்ல.அது எப்போதும் மக்களைப் பலியிட்டுத் தமது அதிகாரத்தைத் தக்கவைக்கும் ஒரு சமூக விரோதக் கும்பல்.அந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருந்திருந்தால் தமிழ் மக்களின் உண்மையான விடுதலைக் கூறுகளைத் தமது இயக்கத்துக்குள் கடைப்பிடித்து அந்த இயக்கத்தை மக்கள் சார்ந்து கட்டியிருக்கும்.ஆனால் அந்த அமைப்பு அத்தகையவொரு வளர்ச்சியை எட்ட முடியாத நிலைக்கு அதைப் பின் தள்ளிய சக்திகள் இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சக்திகளாகும்

அந்நியச் சக்திகள் புலிகளுடாகவே தமிழ் மக்களின் பிள்ளைகளை நாசியக் கட்சியைப் போன்றே இனவாதத் தீயில் வாட்டியெடுத்துப் போருக்குத் தயாராக்கினார்கள்.புலிகளின் எந்தவொரு அரசியல் இலக்கும் மக்களைச் சார்ந்த அவர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை.மாறாகப் புலித் தலைமையின் இருப்புக்கூடாகவே அவை பிரதிபலிக்கின்றன.இத்தகைய வடிவத்தோடுதாம் புலிகள் அமைப்பை உருவாக்கும் தகமையைப் பாலசிங்கத்தின் மதியுரைப்பூடாக வளர்த்தது அந்நிய சக்திகள்.

 

இதனால் குறுகிய இயக்கத் தலைமையின் அதிகாரத்துக்கான யுத்தமாகவும் அந்த யுத்தின் வாயிலாக இலங்கைத் தமிழரின் ஏகப் பிரதிநிதிகளாகவும்,அவர்களின் அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் சட்பூர்வக் கிரிமனல் அமைப்பாகவும் இருக்க முனைகிறார்கள்.இதற்காக இலங்கை அரசின் அதீத இனவாதச் செயற்பாட்டை இவர்கள் தூண்டுகிறார்கள்.இதற்காகவே திட்டமிட்ட சிங்களப் பிரதேசக் குண்டுவெடிப்புகளைச் செய்கிறார்கள்.இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை இனவாதத்தூடாக வளர்ப்பதன் மூலம் இலங்கை அரசைக் காத்தும் வருகிறார்கள்.

மீளவும் அந்நியச் சக்திகளின் கண்காணிப்போடு புலித் தலைமை புதிய இலக்கு நோக்கித் தள்ளப்படுகிறது.இது மிகவிரைவில் இன்னொரு முகத்தோடு ஏகாதிபத்தியத்துக்கு விரோதமில்லாதவொரு அரசியலை விரைவில் பேசும்.அது ஈழத்துக்கு நேர் எதிராக இருக்கும்.

பல் தேசியக் கம்பனிகளின் மலிவுத் தொழிலாளரின் நீண்டகால வேலைச் சந்தையை இதனு}டாக உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை சமீபத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் வெற்றி பெற்று வருவதற்கு இத்தகைய விடுதலைப் போர்களென்ற ஏகாதிபத்திய யுத்தங்கள் உதவி வருகின்றன.ஆனால் மக்களோ அனைத்தையும் இழந்து செத்து மடிகிறார்கள்.சமத்துவத்துக்கான போராட்டம் மிகவும் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய அழிவில் மக்களின் துன்பம் இருமடங்காகிறது.அது உயிர்வாழும் தகமையை வலிய வடிவில் இல்லாதாக்கி வரும் சூழலில் இலங்கையைத் தொடர்ந்து இருத்திவைக்க முனைகிறது.

இறுதியாக:

இந்த வலைப் பதிவில் தினமும் இலங்கை அரசியலை விமர்சிப்பவர்கள் நாம்.எமது அரசியல் விமர்சனமானது,இலங்கை அரசியலில் ஆதிக்கச் சக்திகள் யாவையும் அம்பலப்படுத்தி,இலங்கை மக்களின் இன முரண்பாடானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் பங்குப் பிரச்சனையால் எழுவதாகவும்,அது திட்டமிட்ட இனவழிப்பைச் செய்வதற்கான கால அவகாசத்தைக் கோருவதற்கான அரசியல் வலுவைச் சிறுபான்மை இனங்களுக்குள் உருவாகியுள்ள தரகு முதலாளிய ஆர்வங்களைக்கொண்டே ஏற்படுத்தியுள்ளதையும் நாம் மிக அவதானமாக அறியவேண்டும்,என்கிறோம்.

இங்கே இனங்களின் சுய நிர்ணயவுரிமையை இத்தகைய முரண்பாட்டை வளர்ப்பதனூடாக மெல்ல அழித்து வருகின்றார்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2007

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது