Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...
 

//ஆனால்,எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.//

 

...ம்...இம்முறை நம்மட தேசியத் தலைவர் "காலம்"குறித்த கடுமையானவொரு ஆய்வைச் செய்து,அதன்வழி தான் கண்டடைந்த தரவுகளோடு,ஞானம்பெற்ற கையோடு,இவ்வாண்டின்"மாவீரர்"தினவுரையை வீடியோக் கமிராவுக்கு முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.எனக்கு இந்தக் கதம்பத்துரையில்(விடலைக் குஞ்சுகள் வினைதீர்க்கக் கொதிக்காதீர்) எந்தவொரு கண்றாவியையும் விமர்சிக்க-விவாதிக்க விருப்பமில்லை,என்றபோதும் தலைவர் தனிநாட்டுக்கான போரை இலட்சம் மக்கள் இறந்த பின்பும் முன்னெடுக்கிறபோது நாம் கொஞ்சமாவது கதைக்கத்தானே வேணும்-இல்லையா?

 

நம்ம தலைவர் தன்பாட்டுக்குப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்."அது,இது"வென்று மனிதர் பட்டியலிட்டே உலக அரசியலை விமர்சித்துப் புரட்சிகரமானவொரு பொருளாதாரப் புதுயுகத்தைத் தனது வழியில் நிறுவி, ஈழத்தை விடுவிக்கப் போகிறார்.

 

(மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பி/கு:தலைவரைப் பார்த்துப் புரியவும்)

இதுவரை நடந்தவைகளைப் பட்டியலிட்டுக்கொண்டிருப்பதைக் கடமையாக ஏற்றுப் புலிகளின் ஊதுகுழல்கள்- பல ஊடகங்கள் இதுநாள்வரை பட்டியலிடும் இவ்வேலையைச் செய்தே வருகின்றன.மீளவும் அந்த ஊடகங்களின் பட்டியலிடலில் திருப்த்தியுறாத "நம் தலைவர்"தன்பாட்டுக்குப் பட்டியலிட்டு,இறுதியில் கால்நூற்றாண்டுக்குப் பின்பாகவும் அதே பல்லவியோடு, "தனியரசு"தனிநாடு என்று கூறிக்கொண்டு,"புலிகளின் தாகம்"சொல்லி உரையை முடித்தார்.

 

அப்பாடா அருமையான உரை!அவசரப்படாத ஆய்வு!அள்ளவள்ள அறிவாய்ச் சொரியும் அற்புதவுரை.

 

சிங்களவனிடம் சினக்கிறார்,பின் அவனிடம் மக்களுக்காக உணவுக்கு மடிப்பிச்சை கேட்கிறார்.திரும்பக் கோடானகோடி குற்றங்களைச் சுமத்தி சிங்களவரசுகள் "நீதியான"முறையில்"தீர்வு"தராதென்று சாத்திரம் சொல்லித் தமிழீழப்போரை செய்வாதாகச் சொல்கிறார்.இவர் தமிழீழப் போர் செய்யும் சூழலிலும் சிங்களவனே சாப்பாடு நமக்குப் போடணுமாம்.இவர்போடார்.இவர் அதற்கான முயற்சியோடு ஸ்ரீலங்காவின் ஆதிக்கத்தை உடைத்துத் தனது மக்களின் வயிற்றுப்பாட்டைத் தனது மண்ணிலேயே உற்பத்தியாக்கிக் கொள்ளார்.சுயசார்புடைய பொருளாதார இலக்குகளைச் செய்யாத தலைவர் தமிழீழத் தனியரசு நோக்கிய போரைத் தொடர்கிறாராம்.தனிநாடமைத்த கையோடு உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உலருணவுகள் வழங்குவாராக்கும்!யாரூ கண்டார்?

 

இப்படியாகத் தலைவர் தனிநாட்டுப் போரில் முனைப்படையும்போது, மரணம் பற்றி மகத்தானவொரு விளக்கத்தைச் சொன்னார்: >>>...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<<

இதைக் கேட்டபடி வேலைக்குப் போன நான்,பின் இரவு வந்து ரீ.ரீ.என்.தொல்லைக் காட்சியைப் பார்த்தேன்.

 

அடேங்கப்பா!

என்னவொரு ஆரய்ச்சி!! போராடிச் செத்த இராணுவங்களின் புதைகுழிகள் பற்றியொரு நீண்ட ஆய்வுரையை ஒரு தமிழர் செய்து கொண்டிருக்கிறார்.அப்பாடா,இரண்டாம் உலக யுத்தத்தில் தமது நாட்டிற்காகப் போராடிச் செத்த ஜேர்மனிய "இராணுவீரர்கள்"63 ஆண்டுகளாக உறங்குவதாகக் குழிகளைக் காட்டிச் சொன்னார்.

 

நல்ல ஆராய்ச்சி!தலைவனுக்கேற்ற தொண்டன்!

 

அவனவன் உற்பத்திகளை எங்ஙனம் உயர்த்துவதென்றும்,தாம் செய்யும் உற்பத்திகளில் எப்படிப் புதுமைகளைப் புகுத்திச் சந்தையைக் காப்தென்றும் யோசிக்கிறபோது-ஆராய்ச்சிகள் செய்கிறபோது,நாம் கல்லறைகள் குறித்து ஆய்வு செய்வது சரிதானே?அவரவர் எதைச் செய்கிறார்களோ அதில்தாம் ஆர்வம் அதிகமாகி மூளை சிந்திக்க ஆரம்பிக்கும்.

 

அட பாவித் தமிழர்களே!

உங்களுக்கு கருக்கு மட்டையால அடிக்கிறதுக்கு ஆளில்லையா?

இரண்டாம் உலகில் நாடுபிடித்து இனவழிப்பைச் செய்த பாசிச இராணுவங்கள் வீரர்களா?தாய் நாட்டுக்காகப் போராடினதா இந்த நாசிய ஜேர்மனியின் ஈனப்படைகள்?

அதென்னடா "அமைதியான" உறக்கம்?

 

செத்து மண்ணோடு மண்ணாகி, மக்கிப்போன பிண்டங்கள் இன்னும் உறங்குதோ?

>>>...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.<<<

 

இப்பிடிச் சுத்திச் சுத்தியே பல்லாயிரக்கணக்காகப் பறிகொடுத்தாச்சுத் தலைவரே!

அதைவிட இன்னும் கொடுக்கிறதுக்காக நார்மண்டிப் புதைகுழிகளை உங்கட தொண்டன்கள் போற்றிப் புகழ்ந்து ஆய்வு செய்து அடுக்கித் தள்ளும் அற்புத வரிகள் மாவீரர் துயிலும் குழிகளை ஒப்பிட்டு உயர்த்துவது இன்னும் அத்தகைய குழியளைத் தோண்டுவதற்குத்தாம் என்பதை நாம் அறிகிறோம்.ஐயா தலைவரே!அப்பாவிகளின் தலையில் இப்பிடி மிளாகாய் அரைக்கலாமோ?

எங்கட வாரீசுகள் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் தூங்கி வழியும்போது அப்பாவிகள் புதைகுழிகளுக்குள் அமைதியாய் துயின்று வரலாற்றில் மகத்தானவர்களாக வரவேண்டுமென்ற உங்கட பெரிய மனசு யாருக்கு வரும்?

நார்மண்டியில செத்தவர்களுக்கும் ஜேர்மனியில் செத்தவர்களுக்கும் வைக்கப்பட்ட தூபிகள்,கல்லுகள் வரலாற்றில் இத்தனை பேர்களை அழித்தது கொடிய யுத்தம் என்பதைச் சொல்வதற்கே!போற்றுவதற்கல்ல,மாறாகப் போரைத் தடுப்பதற்கு!

 

புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் நார்மண்டியை மட்டுமல்லை வியாட்நாமிலும் போய் புதைகுழிகளை ஆய்வு செய்து,"மாவீரர்களை"த் தயார் செய்வது மகத்தான தமிழ் தேவைதாம்!

வாழ்க:

 

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!"

ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2006

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது