Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.
 

இதுவொரு சாபக்கேடான இழி நிலை.

 

 

ரீ.பீ.சீ.வானொலியானது புலிக்கு எதிரானவொரு வானொலியாகக் கருதப்பட்டாலும் அந்த வானொலியானது முழுமொத்த தமிழ்பேசும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான புலிகள் அமைப்பைப்போலவே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகச் செயற்பட்டது.எனினும் அந்த வானொலியின் குரல் வளையை நெரித்தெறியும் உரிமை எந்தக் கொம்பர்களுக்கும் கிடையாது.அந்த வானொலி மீதான பாசிசக்குண்டர்களின் தாக்குதலானது மீளவும் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கத்துடிக்கும் மேலாண்மையுடைய இயக்கங்களின் இழிசெயலாக இருக்கலாம்.அல்லது இத்தகைய செயல்களால் அந்த வானொலியைப் பிரபலப்படுத்த முனையும் ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எந்தக் காரணத்துக்காகவிருந்தாலும் அதை நாம் வன்மையாகக் கண்டிப்பதும்,மாற்றுக் கருத்துக்கள்-அது எவையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதற்கான உரிமையை எவரும் காவுகொள்ள அனுமதித்து வாளாதிருக்கமுடியாது.

 

இன்று, நாம் பொல்லாதவொரு அரசியல் அராஜகத்துள் வாழுகிறோம்.தமிழின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகமானது தேசம் கடந்து தனது கோரப் பல்லை நீட்டிக் கொண்டிருக்கிறது.இத்தகைய கொடிய பற்கள் எங்கள் மக்களின் எத்தனை தலைகளை உருட்டியது!இன்னும் எத்தனை தலைகளை உருட்டப்போகிறது?

 

தமிழ்த் (வி)தேசியவாதமானது அப்பாவி முஸ்லீங்கள்மீது அத்துமீறி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து,அவர்களை நாதியற்றவர்களாக்கி, அடித்து வெருட்டுகிறது.எதிர்க்கருத்துடைய தமிழ்பேசும் மக்களை நாயிலும் கேவலமாககச் சுட்டுக் கொல்கிறது. இதுவென்ன அரசியல்?,இதை இன்னும் அனுமதிக்க முடியுமா-தமிழின் பெயரால்,இனத்தின் பெயரால்,தேசத்தின் பெயரால் அனுமதிக்கமுனையும் ஒவ்வொருகணமும் நமது மக்களின் அழிவைத் துரிதப்படுத்துகிறோம்!

இது ,நாம் ஆற்றும் மிகப்பெரிய துரோகமான இழி செயல் இல்லையா?

எங்கள் மண்ணில் குருதியாறைத் திறந்துவிட்ட தமிழ் விதேசிய அதிகாரமையங்கள் அராஜகத்தை-பாசிசத்தை உலகம் முழுவதற்குமான சங்கிலித் தொடர் நகர்வாக்கிக் கருத்தியல் பரப்புரையைச் செய்வதற்கான தடைக்கல்லாகச் செயற்படும் மாற்று ஊடகங்களை, இல்லாதாக்கும் நகர்வில் தனது வலுக்கரத்தைப் பதிப்பது நமக்கு புதிதில்லைத்தாம்.என்றபோதும் இந்தத் தமிழ் மொழி ஊடாகக் கோடு கிழித்து,மக்களின் உரிமைகளைக் காவுகொண்டு தமது நலனை அடைய முனையும் தமிழ்ப் பாசிஸ்ட்டுகள்-மற்றும் ஆளும் வர்க்கமானது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவரும் தொடர் காரியத்தைத் தன்னையும் அறியாது ஆற்றிவருகிறது.ரீ.பீ.சீ.வானொலிமீதான நேற்றைய (24.11.2006)காட்டுமிராண்டித் தாக்குதலானது மிகவும் கொடூரமானதாகும்.இது மக்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயற்பாடுதாமென்பதில் இருவேறு கருத்து நிலைக்க முடியாது.

 

இத்தகைய தாக்குதல்களைப் பாசிசப் புலிகள் போன்றவொரு அமைப்பினால் மட்டுமே ஐரோப்பாவில் நிகழ்த்த முடியுமென்பதும்,சாதரணமான மக்களின் எந்த முனைப்பும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவதற்கான எந்தச் சாத்தியமும் மேற்குலகில் இல்லையென்பதும் நாம் புரிந்துகொள்ளத்தக்கதே!

 

ரி.பீ.சீ. வானொலி மீதான இந்தத் திடீர் தாக்குதலானது "மாவீரர்"தினக் கூத்துகக்ளை அது(ரீ.பீ.சீ.) கறாராக அம்பலப்படுத்துவதும் கூடவே பிரபாகரனின் அம்மணமான அறிவிலித்தனமானவுரைகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு சூழலை இல்லாதாக்குவதாகவுமே செயற்படுத்தப்பட்டுள்ளது.நெருங்கிவரும் இன்னொரு கொடிய சூழலை நாம் மௌனமாக வரவேற்க முடியாது.

 

அந்த வானொலி(ரீ.பீ.சீ)வரும் 27.11.2006க்கு முன்பாக-விரைவாக வருவது மாற்றுக் கருத்துகளற்றவொரு கொடும் பாசிசச் சூழலுக்குள் இருக்கும் தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானது.இத்தகையவொரு நிலையில் ரீ.பீ.சீ.வானொலிக் கெதிரான தமிழ்ப் பயங்கரவாதமானதை நாம் உலக அரங்கில் அம்பலப்படுத்தி,அந்த வானொலிமீதான தாக்குதல் மாற்றுக்கருத்துக்கு-ஜனநாயகத்துக்கு,மக்களுக்கெதிரானதாகவே நாம் பிரகடனப்படுத்துவோம்.

இந்தவொரு தளத்தில் நாம் ரீ.பீ.சீ.க்கு ஆதரவாகக் கத்தவில்லை,மாறாக மாற்றுககருத்துக்கெதிரான-மக்களின் ஜனநாயகத்துக்கெதிரான அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகவுமே குரல் கொடுக்கிறோம்.அந்தவகையில் எமது தோழமைக் கரம் ரீ.பீ.சீக்கு உண்டு.அது அவர்களின் கருத்துகளுக்கானதல்ல.மாறாக அவர்கள் கருத்தாடும் உரிமைக்கானது.

ப.வி.ஸ்ரீரங்கன்

25.11.2006.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது