Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சை, வாழ்வின் அதீத அற்புதத் தாகம்!

உழைத்தோய்ந்த மானுடம் தனது களைப்பைப் போக்குவதற்காகப் பாடிப் பாடித் தன் மனதின் சுமைகளைக் களைந்து, வாழ்வை இரசித்தது-இலயித்தது. பின் ஆன்ம வலுவைத் தக்கவைத்தது.இந்த இலயிப்பின் இயல்பான பரிணாமம் மனித ஆற்றலை மேம்படுத்தும் ஆன்ம வலுவை-மனோ வலுவை மானுட வளர்ச்சிப் போக்கில் தோற்றுவித்தது.இசையும்,கலையும் உழைப்பின் விருத்தியென்பதும்,அது உழைப்பாளர்களின் தேட்டம் என்பதும் வரலாற்றுண்மையாகும்.மானுட வளர்ச்சிப்போக்கில் இசையும,; கலையும் அற்புதமான காரியத்தை மனித அக வளர்ச்சியில்-அறிவு வளர்ச்சியில் ஆற்றியுள்ளது.

"சிறார்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்,
இசை படிப்பதற்கு அனுப்பி வையுங்கள்." என்று ஜேர்மானிய இசைப் பேராசான் மொசாட் குறிப்பிட்டான்.


இது முற்றிலும் உண்மையானது!


இசையும் நடனமும் பாரத வழித் தோன்றில்களான நமக்கு "இரண்டு கண்களுக்கும் சமமாகக்" கண்டுணரப்படுகிறது.இசைத்திலின் அதீத இலயிப்பு,அறிவியில் மனதின் எழிச்சியோடு மனித உள வளர்ச்சியைத் தூண்டுவதை அன்றைய நமது ஞானிகள் உய்துணர்ந்தார்கள்.இந்த உணர்தலின் வெளிப்பாடே ஆத்மீக வளர்ச்சிப்பாதையில் அற்புதமான தேவார-திருவாசகப் பாடல்களாக நமது வரலாற்றோடும் வாழ்வோடும் இறை வணக்கமாகத் தொடர்கிறது.இந்த விந்தை மிகு நிகழ்ச்சி தற்செயலானது அல்ல.மக்களின் மனோ வளர்ச்சியின் உச்சபச்ச விருப்புறுதியே இதைத் தீர்மானிக்கிறது.இத்தகையவொரு சூழலில் நாம் கேட்டும்,இலயித்தும்-இரசித்தும் உய்துணரும் இசை நம்மை உருவாக்கி சமூகத்தில் வலுவான மனிதர்களாக்குவதை இன்றைய நவீனக் கணிதத்தின் வாயிலாக நிரூபிக்க முடியும்.


இசையினதும்,நாட்டியத்தினதும் வாழ்வியில் முக்கியத்தை நம் முன்னோர்கள் இறை வழிபாட்டின் அதீத உச்சமாகக் கண்டபோது,தாம் வழிபடும் இறைவனையே இந்தக் கலை வடிவங்களாகக் கண்டார்கள்.நடராஜர் இசையோடு நடனமிடும் அதீத வெளிப்படுத்தல்களாகவும்,சமூகத்தின் உளவியல் குறிப்பானாகவும் இந்தச் சிலைகள் காலவோட்டத்தில் மிக அவசியமானவொரு குறிப்பீடாக விரிகிறது.


எனவோதாம்"இசை கேட்டால் புவி அசைந்தாடும் இறைவன் கொடுத்த வரம்"என்றார்கள் நமது கவிஞர்கள்.


மனித வாழ்வின்-அதுவும் தமிழ் வாழ்வின் பாரிய பகுதி இசையோடேதாம் பின்னிப் பிணைந்துள்ளது.நாம் பிறந்ததிலிருந்து உலகத்தோடு கலப்பது வரை இசையும் தாலாட்டும் தொடர்கதையாகத் தொடர்ந்து, நம்மைத் தாலாட்டுகிறது.இத்தகைய அரிய கலை வடிவைப் பேணிப் பாதுகாத்து, அதன்வாயிலாகத் தானும் மகிழ்ந்து தான் உருவாக்கும் அடுத்த சந்ததியையும் மிக ஆரோக்கியமான மன-அறிவியல் வளர்ச்சியுடைய சமுதாயமாக்கும் பாங்குக்கு இந்த இசையையும்,நாட்டியத்தையும் கற்பதும் ,அதை நடைமுறையில் -வாழ்வுக்குள் இணைத்து ஒருங்கே வாழ்வதும் நமது இளம் தலைமுறைக்கு அவசியமானதுதாம்.


இசையும்,பாடலும் மனித மனத்தின் உச்சமான சிந்தனைக் குவிப்புக்கும்,கவனக் குறைவின்றிக் கற்பதற்கும்கூட மிக அவசியமானது.இசையால் பிணி தீர்க்கமுடியும்,இசையால் உடலுக்குத் தெம்ப+ட்ட முடியும்,அதனால்தாம் இசை இறையாகிறது நமது சமுதாயத்தில்.


இந்த அரும் கலையை,அதுவும் வயிலினைத் தெரிந்தெடுத்துச் செல்வி.பகிரதி செல்வராஜா கற்றுணர்ந்து அதை அரங்கேற்றும் நிகழ்வுப் படிக்கட்டுவரை இழுத்து வந்துள்ளாரெனும்போது மனதுக்கு மகிழ்வுதாம்.


இசைக் கருவிகளுக்குள்ளேயே கற்பதற்கு மிகவும் கடினமான கருவி இந்த வயிலின்.

அதைத் துணிவோடு தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல சிறப்பாகவும் வாசிக்கும் தகுதி, இந்தப் பகிரதியிடம் இருப்பதை நான் எனது வீட்டில் அவர் வாசித்தபோது இலயித்து உணர்ந்தேன்.


இத்தகையவொரு மாணவி,அதுவும் கற்பதில் ஆர்வமுடைய,சதா கல்வியையும்,கலையையும் சிந்தனைக்குள் திணித்து தனது ஆளுமையைத் தொடர்ந்து விருத்திக்கிட்டு வந்துள்ள நல்லதொரு மாணவி இந்தப் பகிரதி.ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது செயற்படும் மனமும் இருந்தாகவேண்டும் கற்பதற்கு.இத்தகைய மனது என்றும் இந்தப் பகிரதிக்கு இருப்பதும் நாம் காணும் ஆச்சரியமான ஒழுக்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் இவருக்கு மிக நேர்த்தியாக இந்த இசைக் கருவியான வயிலினைக் கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்கும் நாம் நன்றி சொல்லக்கடமைப்பட்டவர்கள்.


ஒரு மாணவரின் வளர்ச்சி,உயர்வு-திறமை அனைத்தும் ஆசிரியர்களின் ஒப்பற்ற உருவாக்கத்தோடு தொடர்புடையது.இந்த நோக்கோடு பார்த்தால் இப்போது அரங்கேற்றும்வரை தனது இசையார்வத்தைச் செயலாக்கும் பகிரதிக்கு இவரது குருவின் மகத்தான உழைப்பு மிகுதியாகவே கிடைத்திருக்கிறது.


இந்தத் தரணத்தில் எல்லோரையும் நினைத்து மனதில் அனைத்தையும் உள்வாங்கி செல்வி.பகிரதி செல்வராஜா மேன் மேலும் கல்வியிலும்,கலையிலும் சிறந்து நமது சமுதாயத்தில் ஆரோக்கியமான சமூகப் பொறுப்புடைய மனித ஆளுமையாகப் பரிணமித்து,வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்றுச் சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்.


"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் ப+ன்றிய தூண்."


எனும் வள்ளுவன் வாக்குக்கு நிகராக தம்மையுருவாக்குவதில் ஒவ்வொரு சிறார்களுக்கும் ஒழுங்கமைந்த கல்வியும்,பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும் கிட்டவேண்டும்.இது பகிரதிக்கு மிகுதியாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது.


என்றும் சிறப்போடு,
"வாழ்க்கைச் செல்வமெல்லாம் வாய்க்கப் பெற்று வாழ்க"- நீ
தமிழாய்,தாயாய் -நல்
தலைவியாய்.


என்றும் பாசத்தோடு:

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி.
04.07.2006

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது