Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சொன்னதைச் செய்த செயலூக்கத் தமிழ் முதலமைச்சர். எனக்குச் சரியாக ஞாபகமிருக்கு அதுவொரு மழைக்கால மார்கழி மாதம்.

தோட்டம் துரவெல்லாம் பயிரிடப்பட்டு அவைகள் அல்லி குத்திக் குருத்தெறிந்திருந்தன.

வருடமோ 1968.

எங்கள் வீட்டிலொரு கதைப் புத்தகத்தை அண்ணன் தலைமாட்டில் வைத்து அடிக்கடி படிப்பான். பின் தலையணைக்கடியில் திணித்து வைத்தபடி தானும் கதை எழுதிப்பார்ப்பான். அந்த குறிப்புப் புத்தகத்தில்-முன் அட்டையில் முத்தமிழ் வித்தகர் அறிஞர் அண்ணா என்றும ;பின்னட்டையில் கலைஞர் மு.கருணாநிதி என்றும் எழுதி வைத்திருப்பான். அன்றிந்தத் தலைவர்களே எமது சிந்தனைகளுக்குள் உலாவந்த பெருந் தலைவர்கள். இளைஞர்களுக்குக் கதையெழுதுவதற்கு அறிஞர் அண்ணாவின் கலைஞர் கருணாநிதி அவர்களின் தமிழ் அசலாக ஊக்கங் கொடுத்திருக்கவேணும். இல்லையேல் கதையெழுதும் முயற்சியை அண்ணை எடுத்திருக்க மாட்டான். பின்னாளில் இவன் எந்தக் கதையையும் எழுதும்படி முயற்சிக்கவுமில்லை. இவனது வாசிப்புப் பின்பு பேய்கள் பற்றிய கதைகளாக இருந்திருக்கிறது.
அது 1974 ஆம் வருடம்.

ஓரிரவுப் பொழுது. அண்ணன் ஊர் சுற்றப் போயிருந்தபோது அவனது கதைப் புத்தகங்களிலொன்றையெடுத்துப் படித்துப் பார்த்தேன். சில பக்கங்கள் வாசிப்பதற்குள் நெஞ்சுக்குள் பயம் குடி கொண்டது!

ஒரு தீக்குச்சியை எடுத்துப் பற்ற வைத்தபோது கொங்கு நாட்டுப் பேயொன்று றீம்றீமென்று திடீரென முன்வந்து உனக்கென்ன வேண்டும்-உனக்கென்ன வேண்டுமென்றது அந்தப் பேயிடம் என்ன கேட்டார்களோ எனக்குத் தெரியாது. நான் அதற்குமேல் அதைப்படிக்கவில்லை!

ஆனால் தமிழகத்து அரசியல் தலைவர்களோ அதே கொங்கு நாட்டுப் பேயின் நிலையெடுத்துத் தமிழர்களிடம் உனக்கென்ன வேண்டும் உனக்கென்ன வேண்டுமென்று கேட்டுக் கேட்டு அள்ளி வழங்கும் போது எனக்கு அந்தப் பேயை எண்ணாதிருக்க முடியவில்லை!

இத்தகையத் தலைவர்கள் யாவரும் மக்களுக்குச் சேவை செய்யப் பேயுருவோடு அலைவதைப் பார்க்கும்போது அவர் தம் பெருஞ் சேவை மனதைக் காட்டிவிடுகிறதல்லவா?

ஆம்! இருக்காதா பின்ன? கலைஞர் ஆச்சே எங்கள் மகமாயி அம்மாவாச்சே!

தேர்தலில் அள்ளியிறைத்த போலிக் கோசமெல்லாம் பொய்யின்றிச் செயலுருப் பெறுவது நிசமாகவே ஏழை மக்களின்பால்-மழலைகளின் ஆரோக்கியத்தின்பால் விவசாயிகளின்பால் ஓட்டுக்கட்சிகளுக்கு ஏற்பட்ட கரிசனையான மனிதாபிமானமா?

மக்களின் குரல்வளைகளை உலக வங்கியின் உத்தரவின் பேரில் சுருக்கிட்டு முறித்தெறிந்த ஜெயலலிதா கருணாநிதிகளா இங்ஙனம் பாச மழை பொழிவது!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பற்பல விவசாயிகள்எலிக் கறி உண்டதற்கு யாருதாம் காரணம்?

எங்கள் கவிஞனொருவன்:

......................மாலையிலே கூழ் குடித்துக்

குறட்டைவிட்டு மேனி தூங்கி

காலையிலே கண் விழித்துத்

தாரமுடன் குழந்தைகளும்

தனியாகப் பின் தொடர

நடக்கின்றான் விவசாயி.

விவசாயி வாழ்கின்ற சிற்றூரே வாழிய நீ

என்று ஆரம்பப் பள்ளிப் புத்தகத்தில் எழுதியிருந்தான்.

பாடல் சரியாகப் பாடமில்லை இப்போது!

அவ்வளவுக்கு விவசாயிகள் படும்பாடு வேதனையானது!

தலைவர் கருணாநிதி

6400.கோடி இந்திய பாய்களுக்கான அவர்களது

(விவசாயிகள்) பழைய கடன்களைத் தள்ளுபடி செய்து

2 பாய்க்குப் படியரிசி போட்டு

ஒன்றுக்கு இரு தடவைகள் ஊட்டச் சத்து முட்டைகளை

மழலைகளின் தட்டுக்குச் சொன்ன மாதிரிச் செய்தே காட்டிவிட்டார்!

அப்பாடா பெரிய மனிதாபிமானமும்

உத்தமருமான உலகத் தமிழ்த் தலைவர் நாணயவானாகிறார்!

எதற்குத்தாம் பதவி ஏற்றவுடனே ஒப்பமிட்டு உத்தரவிட்டார்?

மக்களின் துன்பத்துக்காகவா?

வெறும் 95 இடங்களோடு கூட்டணியுடன் ஆளமுடியுமா?

இது கடினமானது!

கலைஞர் வல்லவர்.

நாடகங்கள் போட்டவர்

நல்ல தமிழில் படங்களுக்கு வசனமெழுதியவர்.

கூட்டங்களுக்குள் சொல்லி வைத்தவர்களின் கேள்விகளுக்குச்

சுவையாக முன்கூட்டித் தயாரித்த பதில்களைக்

கணப்பொழுதில் கக்கி அறிஞர் எனப் புகழ் பெற்றவர்!

விடுவாரா தவறு?

இந்த அரசுக்குக் குற்றுயிர்தாம் என்பதை அவர் அறிந்தபோது

சொன்னதையுடனே செய்யுங்கால ;இடையில் வரப்போகும் தேர்தலில் தனித்த பெரும்பான்மை தி.மு.க.வுக்குத் தயாரிக்கக் கலைஞர் கண்ணியவானாகிறார்!

நெல்லுக்கிறைத்த நீர்

புல்லுக்கும் அங்கே பொசியும் என்ற மாதிரி

அப்பாவி மக்கள் நன்மையடையவாவது கூட்டணி ஆட்சிகளே தொடர்வது தொந்தரவு மக்களுக்கில்லை அது கட்சிகளுக்கே!

பிச்சைதாம்!

எனினும்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் ப+ சக்கரை என்பதுபோல்

கலைஞரின் தேர்தல் வாக்குறுதி நிசமாவதும் இப்படியேதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்

13.05.06

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது