Language Selection

"இது வேட்டைக்கான
கனிந்த காலமெனக் கண்ட
சில நாடோடிகளின்
அம்புகளால்
துளைக்கப்படும் மான்கள்
குறையுயிரில் சேடம் இழுத்தபடி
நம்
தோள்களில் அதன் சுமையைச் சுமக்கச் சொல்லும் அதிகாரத்தை
இந்த நாடோடிகள் தாமாகவே
எடுத்துள்ளார்கள்"

 

இன்றைய புகலிட வாழ்வில் எந்தப் பெறுமானமுமின்றி வாழ்வு நகருகிறது.அனைத்து விடயங்களிலுமொரு வெறுப்புத் தலைதூக்கி நிற்கிறது.வேலை,குடும்பம்,பிள்ளைகளின் கல்வி,நாட்டுப்பிரச்சனை,உடல் நலம்... இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு வெறுப்பு! வாழ்வதில் அர்த்தமில்லையென்றவொரு வெறுப்பு மிக விரைவில் வரலாம்.


இந்தச் சூழ்நிலையை நம்மில் பலர் உணருகிறோம்.

 

குடும்பம் ,தொழில்,பிள்ளைகளென இருக்கமுடியாது. நமது பிரச்சனை, நமது தாயகத்தால் உருப்பெற்றது.இதை மறந்து வாழாதிருக்க முடியாது அப்பப்பயேதோ காரியமாற்றும்போது, பல பிரச்சனைகளும் கூடவே வருகிறது.

கடந்த காலங்களில் நம்மில் பலர் தாயகத்தின் போராட்டத்திலும் ,அமைப்புகளிலும் ஏதோவொரு வகையில் இணைந்திருந்தோம்.இதன் விளைவாலேற்பட்ட அரசியல் சிக்கல்களால் நாம் நாட்டை விட்டோடி புகலிட வாழ்வைத் துய்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் வந்து விழுந்துவிட்டோம். இதனாலானது வாழ்வின் பல பரிமாணங்களுக்குமான தேடுதல் -புரிதல் இன்னபிற.எனினும் இதுகாலவரை நாமடைந்த வேதனைகள்,சோதனைகளை வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் அடக்கிட முடியா.


1985 இன் பிற்பகுதியில் புகலிடத் தமிழர்களால் தாம் பெற்ற அநுபவங்களின் தொடர்ச்சியாகப் படைப்புகள்,சிறு சஞ்சிகைகள் வெளிக்கொணரப்பட்டன.


இலங்கைப் பெளத்த சிங்கள ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டி அடக்குமுறைகளை-ஈழப்போராட்டத்தை,ஈழக்கோசத்தை, இப்படிப் பலவற்றைக் குறித்து நாமெல்லோரும் படைப்புகளை,பத்திரிகைகளை முன்வைத்தோம்.மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்காய் மார்புகாட்டிப் போராடினோம்.


இதனால் நம்மெல்லோருக்கும் பொதுவாக, தொடர்பாடலுக்கானவொரு ஊடகமாக இலக்கியச் சந்திப்பை 1988 ஆம் ஆண்டு,பார்த்திபனினதும்,பீட்டரினதும்(ஜெயரட்னம்) முன் முயற்சியால் ஆரம்பித்து,வளர்த்துத் தேய்த்து-சிதறடித்து,சின்னாபின்னப் படுத்தி,ஒன்றிணைத்து... சிலகாலம்வரை இதுவே கதையாக இருந்தபோது, திடீர்த் தலைமைகள் உருவாகவும், தனிநபர்களுக்குச் சொந்தமாகவொரு தேவையேற்படவும்-தலைவர்களாகப் பலர் உலா வருவது சற்றும் எதிர்பார்த்த காரியங்களாக இருக்கவில்லை.

 

1992 ஆம் ஆண்டிற்குப் பின்பு மெல்லத் தலைகாட்டிய நிழல் தலைமை தம்மை முன்னிலைப்படுத்தியபோது கோஷ்ட்டிகள் உருவாகின.

 

இந்த வகை வளர்ச்சி(?!) இன்று ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது.

 

எல்லோருக்கும் ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறுசிறு தீவுகளாக இருந்துகொண்டே ஒவ்வொருகுழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள்.

 

இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான ஆதாரமாக,நம்மெல்லோருக்கும் தெரிந்த நபர் இன்று புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களின் அனைத்துப் பிரதிநிதியாகத் தன்னை முன்நிறுத்தும் கைங்காரியத்தில் பகாசூரானகக்கடமை செய்கிறார்.தனிநபர்களின் விருப்புக்கொப்பச் சமுதாயத்தின்மீதான எதிர்காலத்தைக்குறித்துக் கதையளக்கும் இந்த "இலக்கியப் பிதா மகன்"தனக்குத் தேவையான அரசியலைச் செய்வதில் முனைப்படையுந் தருணம் சந்தேகத்துக்கிடமான அரசியல் பின்னணியோடு சம்பந்தப்படுகிறது.இது குறித்த மிகவும் சாதுரியமான ஆய்வு அவசியமானது இன்றைய சூழலில்.


"புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில
கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு
மெளனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்
ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின்
பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பும்
கேட்பாரின்றி கோலாச்சும் மொழித்
தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொள்ளும்"

 

நமது காலத்தின் அவசியமானது வெறும் மதிப்பீடுகளில் காலத்தைக் கண்டு கொள்வதில் மையங்கொள்ள முடியாது.காலத்தில் வாழாத மானுடத் தேவைகள் மக்களின் நலனினது விழுமியமாக இருக்க முடியாது.எனவே இந்தப் பெரும் கதையாடல்கள்-மனிதக் கதையாடல்களாக இனிமேலும் விருத்தியுற முடியாது.இந்நோக்கில் பழமையான நமது புனைவுகளைக் கட்டுடைத்தல் அவசியமான பணிதாம்.மாற்றத்தை வேண்டியவொரு மனித வாழ்வு அனைத்தையும் மாற்றியே தீரும்.


இன்று மாற்றுக் கருத்தாளர்களாகத் தம்மைக் காட்ட முனையும் இலக்கியச் சந்திப்புக்காரர்கள் உண்மையில் இலங்கையில் நடந்தேறும் இனப்படுகொலைகளையும் அதுசார்ந்தியங்கும் புலிகளின் பாசிசச் செயற்பாட்டையும் எதிர்த்தியங்கும் ஜனநாயகப்பண்புடையவர்களாகக்காட்டும் சந்தர்பங்களில் அவர்களது அரசியல்"தெரிவு"இதுவரை எதுவென்று காட்டிக்கொவதில் தம்மைத் தகவமைத்துவரும் தளமே வெட்டவெளிச்சமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.அராஜகங்களுக்குத் துணைபோகும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடு நட்புறவை வளர்த்து அவர்களை இலங்கை யுத்தத்துக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.


மறுத்தலின் வரட்டுத்தனமான விருப்புறுதி கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் மெளனமாக உதாசீனப் படுத்துவதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்தநிலைத் தர்க்கத்தாலும் புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கிமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும் தனதிருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனிதத்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டும், புலம் பெயர் இலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது. இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.


இன்று இலக்கியச் சந்திப்பைக் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் சீரழிந்த-மனநோயாளிகளின் குணத்தோடு சேறடிப்பு, வம்பளப்பே மாற்றுக்கருத்தென்றும்,ஜனநாயக விழுமியமென்றும் உரக்கச் சொல்லப்படுகிறது.கலையிலக்கியத்தின் அவசியமான புரிதற் பாடு நமக்கான-நமது மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி,அதன் வாயிலான புதிய மாதிரி கருத்தமைவுகளை,சமூக மதிப்பீடுகளை-வாழ்வின் பெறுமானங்களை மீளுருவாக்கஞ் செய்தல் கடந்த கால அடிமைத்தனங்களை களைவதற்கான முன்னெடுப்பின் முகிழ்ப்புத்தாம்.எனவே இது தவிர்க்க முடியாத காலத்தின் அவசியமான பணி.பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்வொரு கூட்டமாகவே இருக்கிறோம்.


இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.


இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம் தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்கிறது.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.எங்கு நோக்கினும் மக்கள் விரோதிகளே தம்மை மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாகக் காட்டி வருகிறார்கள்.இலக்கியச் சந்திப்பென்பது இத்தகைய மக்கள் விரோதிகளை இன்னும் தொடர்ந்துருவாக்கும் ஒரு வடிவமாக மாற்றப்பட்டு இன்று ஒரு தசாப்தமாகிறது.


கட்டுடைப்பும்அதன் வாயிலாக புதிய முன்னெடுப்புகளும் மானுடநோக்கில் அவசியமாகும்.இதைப் புறந்தள்ளும் எந்த முன்னெடுப்புகளும்,விமர்சனங்களும் இன்றைய சூழலை மிகக் கேவலமான முறையிற் புரிந்த அரைவேக்காட்டு உளப் பாங்கின் வெளிப்பாடுகளே!

 

யுத்தத்துக்குள் மூழ்கிய சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடி மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய எதிர்ப்புக்கூறுகளை(யுத்தத்துக்கு எதிரான-இனவாதத்துக்கு எதிரான-ஈழக்கோசப் பொய்மைக்கு எதிரான) கொணடி;ருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியச் சந்திப்பின் பணியாக உள்ளது.ஆனால்,அந்தச் சந்திப்பைச் சொந்தங்கொண்டாடி இன்று நடந்தேறும் இந்தக் குழுக்கட்டல் கயவர்க்கூட்டம் மக்களின் எதிரிகளின் கைக்கூலிகளாக மாறியதை மறைப்பதற்கே எல்லோரையும் அழைத்து வம்பளக்கிறார்கள்.ஜேர்மனியில் இலக்கியச் சந்திப்புக்களை எடுத்து நடாத்திய சிலர் ஜெர்மனியின் பொது அமைப்புகளிடம் காசுவேண்டிப் பொக்கற்றுக்குள் போட்டதை உதாரணமாக எடுங்கள்.புலிகள் மக்களை ஏமாற்றிப் பொருள்களை மட்டுமல்ல மனித உயிர்களையும் சுரண்டும்போது நீங்கள் இதையும் செய்யாட்டித் தமிழரென்று கூற என்ன மண்ணுண்டு?


"பரதேசிக் கோலம்பூண்டு
தெருவெல்லாம்
படுத்தொழும்பி
தேசத்தின் இதயத்துள் துரோகியென்று பொறித்துவிட்ட
அப்பாவிக்
குரல்களை
அடக்கிவிடத் துடிப்பர் கைக்கூலிகள்
என்றபோதும்
தெரு நாய்கள்
குரைப்பதை நிறுத்தாவரை
"துரோகிகளும்" தூங்க மாட்டார்."

 

எல்லோருக்கும் புரியும்படி எதைத்தான் எடுத்துவைத்தாலும் , அதுவொரு வன்னுணர்வின் மிகைச் செயலாகக் கண்டுகொள்ளப்படுமானால்- நீ எந்தத் தளத்தலிருக்கிறாயோ அந்தத் தளத்தில் நோய் இருக்கிறது.உனது(எனது) நோய்க்கான காரணியைக் கண்டுகொள்ளாத மனமானது பிறரையும் புரிந்துகொள்வதில் நாட்டங் கொள்வதில்லை.இங்குதான் பெரிய நெறிமுறைகள்,பண்பு,பண்ணாடையென்றெல்லாம் ரீல் விடுகிறோம்.எது சமுதாயத்தின் தளத்திலிருக்கிறதோ-அது சமூகத்தில் பிரதிபலிக்கிறது.சமூகமென்றால் அது தனிமனிதரின் கற்பிதங்களையொட்டியே நகருமென்பது எப்படிச் சாத்தியமில்லையோ,அதே மாதிரித்தான் பல்வகைக் கருத்தாடல்களும்,அதையொட்டிய ஆவேசங்களும்.


எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.


சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?இத்தைதான் இலக்கியச் சந்திப்பின் பிதாமக்கள் இப்போது செய்துவருகிறார்கள்.


நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.


ஆனால் நமது மக்கள்?

 

பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?நாளும் பொழுதும் யுத்தால் கொல்லப்படும் மக்களின்மீது எவர் கரிசனைகொண்டார்?


தமிழீழத்தின்மீதானபற்றுறுதி தம் உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு அன்று ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்த கல்லொழுங்கையூடாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து, ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்ததத் தேசக்கனவுதான்.தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தியாக உணர்வே.ஆனால் அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடிமறைந்துவிட்டது.

 

மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.


இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இதற்காக ஒரு இலக்கியச் சந்திப்பு?


அனைத்து மூலையிலும் இருளின் தூதா;கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்!


தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பெளத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.


மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய இந்தக்கபடதாரிகளின் அரசியல் தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.தத்தம் எஜமானர்களின் அன்பளிப்புக்காக தமது மக்களையே வேட்டையாடும் மனிதர்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்குத் தோதான சந்திப்பாகச் சிதைந்தது இந்த இலக்கியச் சந்திப்பு.

 

"புயலடித்த தேசத்தின் புழுதிகள்
ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க
சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன "வெற்றி,வெற்றியென"
முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது
வீண் கற்பனைகளாற்
சில முகங்கள் மலர்ந்தன"


ப.வி.ஸ்ரீரங்கன்

14.06.2008


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது