Language Selection

இதுவோ எம்மை எதிர்கொள்ள முடியாதவனின் எதிர்வாதம். இது நாம் சந்திக்கும் அரசியல் சவால். எம்மால் அம்பலமாகும் புலிகளும் புலியெதிர்ப்பும் தான் தொடர்ச்சியாக இந்த வாதத்தை எம்மை நோக்கி எழுப்புகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நலனில் இருந்து இதைக் கேட்கவில்லை. இந்த அடிப்படையில் சுயமாக சிந்திப்பது கிடையாது.

 

 

வேடிக்கை என்னவென்றால் புலிக்கும் அரசுக்கும் வெளியிலான மக்களின் அரசியல் செயல்தளத்தை இவர்களே முன்நின்று அழித்த வண்ணம் தான் அந்த அரசியலை முன்னெடுத்தபடி தான் எம்மை நோக்கி இந்த அரசியல் தர்க்கத்தையே வைக்கின்றனர். மக்களுக்கான அரசியல் சாத்தியமற்ற ஒன்றாக கூறுமளவுக்கு இந்த மக்கள் விரோதத்தை 'ஜனநாயக" மாக்குகின்றனர். இப்படி இவர்கள் யாருக்காக ஊளையிடுகின்றனர்? மக்கள் அரசியல் என்பது ஒரு விவாதப்பொருளல்ல என்று கூறுமளவுக்கு புலம்பெயர் சூழலில் எதிர்ப்புரட்சிகரமான பண்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

ஒன்றில் புலியை ஆதாpப்பது அல்லது அரசை ஆதாpப்பது என்ற ஒற்றைப்பரிமாண பாசிச  அரசியல் முன்தள்ளப்படுகின்றது. இதற்கு வெளியில் இன்று மாற்று அரசியலுக்கு இடமில்லை என்கின்றனர். இது தான் புதிய அரசியல் சூழலின் சாரப் பொருள். இதைப் பொதுவில் இனம் காணாமல் இருப்பது இதை நாம் தனித்து எதிர்கொள்வது நாம் மட்டும் சந்திக்கும் புதிய அரசியல் நெருக்கடி. 

 

அரசுடன் அல்லது புலியுடன் சேர்ந்து இயங்குவதா மக்கள் அரசியல்?

 

இந்த கேள்வி ஒருபுறம். இதுதான் மக்களுக்கான அரசியல் என்று கூறுகின்ற பெரும்பான்மையான அரசியல் வாதங்கள். இவர்கள் மக்கள் அரசியல் என்பது சாத்தியமற்ற ஒன்றாக கூறுகின்றனர். இப்படி கூறும் இவர்கள் தாம் மக்களுக்காகத் தான் போராடுகின்றோம் என்று கூறுகின்ற வக்கிரமும் இதற்குள் அரங்கேறுகின்றது.

 
 
அரசுடன் அல்லது புலியுடன் எம்மை அடையாளப்படுத்தத் தவறுவது எமது கருத்தின் மீதான குற்றமாக காட்டப்படுகின்றது. இது புலி அல்லது புலியெதிர்ப்பு ஐக்கியத்துக்கு எதிரானதாக சித்திரிக்கப்படுகின்றது. மக்கள் அரசியலை வைப்பது ஒரு இணக்கமற்ற அணுகுமுறையாகவும் வரட்டுத்தனமானதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

 

இவர்கள் அரசின் பின்னும் புலியின் பின்னும் இருந்தபடி அதற்குள் நுழைந்தபடி அதை நியாயப்படுத்தியபடி எம்மீது 'தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு" என்ற எதிர் தாக்குதலை நடத்துகின்றனர்.

 

சரி இவர்கள் யார்? இவர்களின் அரசியல் அடையாளம் என்ன?

 

தேசியத்தையும் ஜனநாயகத்தையும் ஒரு சேர  மறுக்கின்றவர்கள் இவர்கள். புலிகள் தாம் விரும்பியவாறு தேசியத்தையும் அரசு தான் விரும்பியவாறு ஜனநாயகத்தையும் வைக்கின்றது. இதைத் தான் அவர்கள் மக்களின் விடுதலைக்கான பாதை என்கின்றனர். தமக்கே மக்கள் ஆதரவு உண்டு என்கின்றனர். இந்த எல்லையை மீறாத வகையில் அவர்கள் மக்கள் மேல் பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த எல்லைக்கு மேல்> மக்களுடன் வேறு எந்த உறவும் கிடையாது.

 

இவர்களின் அரசியல் ஏஜண்டுகள் தான் மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்கின்றனர். அதை பற்றிக் கதைப்பதையும் ஏன் கதைப்பவர்களின் சுதந்திரத்தையும் கூட அவர்கள் மறுக்கின்றனர்.  

 

இவர்கள் யாரும் மக்களை அரசியல் ரீதியாகவும் அவர்களின் சொந்த செயல் சார்ந்த அரசியல் கோரிக்கைகளுடன் அணிதிரட்டுவது கிடையாது. அதை அவர்கள் சாத்தியமற்ற ஒன்றாகவும் எதார்த்தமற்ற ஒன்றாகவும் சித்தரிக்கின்றனர். இதை விமர்சிப்பதும் மறுப்பதும் வரட்டுத் தனமானது என்கின்றனர்.

 

மக்கள் போராட்டத்தைக் கோருவதே வரட்டுத்தனமானது என்கின்றனர். இவர்கள் இப்படி கூறிக்கொண்டு மக்கள் சார்ந்த அனைத்து செயல் சார்ந்த வழிகளையும் சிந்தனை முறைகளையும் மூடிவிடுகின்றனர். பாசிசத்தை மட்டும் தத்தம் அரசியல் வழிகளாகக் கொண்டு 'தேசியம்" என்றும் 'ஜனநாயகம்" என்று தாமாகவே மக்களுக்கு வெளியில் கொக்கரிக்கின்றனர்.

 

எதிர்தரப்புக்கு எதிராக இதில் ஒன்றை மறுப்பதன் மூலம் எதிர்தரப்பு தரமறுப்பதை காட்டி ஐயோ தமிழ்மக்களின் உரிமை என்று தலையிலடித்து கதறுகின்றனர். இப்படித்தான் இதற்குள் தான் இலங்கை அரசியல் இருக்கமுடியும் என்கின்றனர். இதைத் தமக்குள் தாம் போற்றுகின்றனர் எதிர்தரப்பை தூற்றுகின்றனர். இப்படி இரண்டு சமூக விரோத எதிர்மறைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தம்மைத் தாம் நேராக்க முனைகின்றனர். 

    

புலியெதிர்ப்பு அரசியலை நாம் வெட்டொன்று இரண்டொன்றாக முறித்தாக வேண்டியநிலை. அரசு ஆதரவு கொண்ட புலியெதிர்ப்பும் மக்கள் அரசியலை முன்வைப்பவர்களும் ஒன்றாக கூடி நடனமாடிய வேஷத்தை அனுமதிக்க முடியாது. அரசுடன் சேர்ந்து இயங்குபவன் மக்களின் முதல்தரமான எதிரி. இதைப் பிரகடனம் செய்யாத சமரசங்கள் அனைத்தும் அரசு சார்பானதே. இது இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் எதிரானது. அரசு குறிப்பாக பேரினவாதமாக இருப்பதால் தமிழ் மக்களின் பிரதான முதன்மை எதிரி. அவனுடன் கூடிக் குலைக்கின்றவர்களோ இனவெறி பாசிட்டுகள் தான். இந்த எதிரிகளுடன் நாம் விவாதத்தை மக்களுக்காக செய்ய முடியாது. மாறாக எதிரியை அம்பலப்படுத்தி போராட வேண்டியது எம்முன்னுள்ள பணி. 

 

பேரினவாத அரசுசார்பு பிரிவினரோ அரசுடன் சேர்ந்து இயங்குவதைத் தவிர அதனிடம் மக்களுக்கான மாற்று அரசியல் எதுவும் கிடையாது. இப்படி அரசுக்காக கூலிக்கு மாரடிப்பவர்கள் தான் பெரும்பாலான 'ஜனநாயக"வாதிகள். இதை இல்லை என்று சொல்ல அவர்களிடம் எந்த அரசியலும் மாற்றாக கிடையாது.

 

'துரோகி! துரோகி தாண்டா!!" என்ற எனது முந்தைய கட்டுரை> அவர்களின் இழிவான மலிவான அரசியலை அம்பலமாக்கியதைத் தொடர்ந்து பலரும் 'ஜனநாயகம்" பற்றி ஒப்பாரி வைத்து கதறுகின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்குவது தான் சாத்தியமான ஒரேயொரு 'ஜனநாயக" வழி என்கின்றனர். இலங்கை - இந்திய அரசுடன் சேர்ந்து நிற்கும் துரோகத்தை அரசியலாக முன்னிறுத்துகின்றனர். புலியல்லாத தளம்> இப்படி அம்பலமாகின்றது. அவர்கள் தமது துரோகத்தை மக்களுக்கான தமது சொந்த தியாகமாக பறைசாற்றுகின்றனர்.

 

இப்படி முன்னாள் இன்னாள் கொலைகாரர்கள் எல்லாம் கூடி இப்படித்தான் தமிழ் மக்களின் 'ஜனநாயகத்தை" பேரினவாத பாசிசமாக மீட்கின்றனர். இதைவிட இவர்களிடம் மாற்றான மக்கள் அரசியல் எதுவும் கிடையாது. இப்படி மக்கள் விரோதிகள் புலியின் எதிர்மறை அரசியலைப் பயன்படுத்தி தனது பேரினவாத பாசிசத்தை 'ஜனநாயகமாக" ஆதாpக்க கோருகின்றனர்.

 

புலியின் படுகொலை அரசியல் ஒருபுறம் ஆட்டம் போட அதைக் கூறிக்கொண்டு இலங்கை அரசை 'ஜனநாயக" அரசாக நியாயப்படுத்துகின்றனர். புலியின் படுகொலைகளுக்காக கண்ணீர் வடிக்கும் இந்த 'ஜனநாயக"வாதிகள் அரசின் படுகொலை அரசியலை ஆதாpக்கின்றனர். இப்படி பாசிச அரசியலின் எடுபிடிகளாக இருப்பதைத் தான் மக்கள் அரசியல் என்கின்றனர்.

 

இப்படிக் கூறுவதன் மூலம் தம்மை 'ஜனநாயகவாதி"கள் என்கின்றனர். இந்த புலியெதிர்ப்பு அரசியல் பேரினவாத பாசிசத்தை தேர்ந்தெடுத்தால் அது  சட்டபூர்வமான 'ஜனநாயகமாகவும்" புலிப் பாசிசத்தை சட்டபூர்வமற்றதால் அது 'ஜனநாயகமற்றதாகவும்" காட்டி நியாயப்படுத்துகின்றனர்.

 

இப்படி இரண்டில் ஒன்றாகவே சமூகம் இருக்க முடியும் என்று கூறி சமூகத்தை தமக்கு ஏற்ப  பிரித்து திரித்து விடுகின்றனர். இதற்கு வெளியில் எந்த மாற்றுச் சிந்தனையும் கிடையாது என்கின்றனர். இதற்கு எதிராக விமர்சனங்கள் எழும் போது இலங்கை அரசுடன் சேர்ந்து நிற்பதைத் தவிர 'ஜனநாயகத்தை" மீட்க வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என்கின்றனர். 'ஜனநாயகத்தை" மீட்க இலங்கை - இந்தியாவுடன் சேர்ந்து இயங்குதல் தான் எதார்த்தமான வழி என்கின்றனர். இப்படி புலியெதிர்ப்பு 'ஜனநாயக" வழி இன்று பாசிச முகத்துடன் அம்பலமாகின்றது.

 

இதே எதிர்மறையில் தான் புலித் 'தேசியமும்" இயங்குகின்றது. புலியை விட்டால் தேசியத்தை பாதுகாக்கவும் மீட்கவும் வேறு எந்த எதார்த்தமான மாற்றும் கிடையாது என்கின்றது. இந்த வாதங்கள் மூன்றாம் தரப்பான எமக்கு எதிராக வைக்கப்படுகின்றது.

 

இப்படி இரண்டு எதிர்மறைகளும் இலங்கையில் தத்தம் படுபிற்போக்கான அரசியலை தக்கவைக்க முனைகின்றன. இதற்கு ஏற்ப நியாயவாதங்களை கற்பிக்கின்றனர். இரண்டும் எம்மிடம் ஒரே கேள்வியைத் தான் கேட்கின்றது.

 

இதைவிட வேறு மாற்றுவழி என்ன என்று கேட்கின்றது? இப்படி அதிபுத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு மக்களின் முதுகில்; ஓங்கிக் குத்துகின்றனர். இதை அம்பலப்படுத்தும் எம்மை கம்யூட்டரின் முன் அமர்ந்து இருந்து எழுதுவதாகவும் ஐரோப்பாவில் இருப்பதாகவும் கம்யூட்டர் புரட்சி செய்வதாகவும் ஒருசேர இருதரப்பும் கூறுகின்றனர்.

 

இப்படி கூறும் இவர்கள் தான் அன்றும்-இன்றும் எம்மை மண்ணில் அரசியல் செய்ய அனுமதிக்காத பாசிட்டுகள். நாம் மண்ணில் கால்பதித்தால் உடனடியாகவே கொன்றுவிட திடசங்கர்ப்பம் கொண்டவர்கள் தான்.

 

எமது தொடர்ச்சியான எழுத்தோ இவர்களை அம்பலமாக்குகின்றது. இருதரப்பும் ஆப்பிழுத்த குரங்காட்டம் ஒருபுறம் காட்டுக் கூச்சலாக எமக்கு எதிராக கத்துகின்றனர். மறுபுறம் மரப்பிளவில் விட்ட அரசியல் வாலை மீட்க முடிவதில்லை. அது எம்மீதான அரசியல் வெறுப்பாக காழ்ப்பாக அவதூறாக மாறுகின்றது.

 

இவர்கள் எமக்கு எதிராக கொண்டுள்ள அரசியல் என்ன? 

 

1.பேரினவாதம் மறுக்கும் தமிழ் தேசியத்தை புலிக்கு வெளியில் எப்படி பாதுகாப்பது என்கின்றனர். இப்படி கூறி புலியை ஆதரிக்கின்றனர்.

 

2.புலிகள் மறுக்கும் ஜனநாயகத்தை மீட்க அரசை விட்டால் மாற்று வழி என்ன என்று கேட்கின்றனர். இப்படி கூறி அரசை ஆதரிக்கின்றனர்.

 

இரண்டு தரப்பும் எமக்கு எதிராக கூறுவது இதைத் தான். எம்மை நோக்கி எழும்பும் இந்த வாதம் மக்கள் விரோதம் என்பதால் எம்மீதான அரசியல் அவதூறாக மாறுகின்றது. நீங்கள் என்னத்தைக் கிழித்தீர்கள் என்கின்றது? எத்தனை பேர் உள்ளீர்கள் என்கின்றது? கம்யூட்டருக்கு முன்னால் புரட்சி செய்கின்றீர்கள் என்கின்றது. மண்ணின் எதார்த்தம் தெரியாது கதைக்கின்றீர்கள் என்கின்றது. இதன் பின்னுள்ள தியாகம் மனிதாபிமானம் சேவை என அனைத்தையும் மறுக்கின்றீர்கள் என்கின்றது. வரட்டுத்தனமாக கதைக்கின்றீர்கள் என்கின்றது. இப்படி பல குற்றச்சாட்டுகள்.

 

இவை எல்லாம் எதற்காக? புலியை ஆதரி அல்லது அரசை ஆதரி என்ற அவரவர் பாசிச அரசியல் நிலைக்கு ஏற்பத்தான் வைக்கின்றனர். இதில் ஒன்றை ஆதரி எல்லாம் சரியாகிவிடும் என்பதே இவர்கள் தரப்பு அரசியல் வாதம்.

 

இந்த வகையில் நாங்கள் மட்டும் தான் புலிக்கும் – அரசுக்கும் எதிராக உள்ளவர்கள் என்ற அடிப்படையில் எம்மை நோக்கி அவர்கள் ஒரே அரசியல் கண்ணோட்டத்தில் எமக்கு எதிராக  ஒன்றுபட்டு நிற்க முனைகின்றனர். ஒரே விதமான குற்றச்சாட்டை எம்மீது வைக்கின்றனர்.

 

இவர்கள் குற்றம்சாட்டும் நாங்கள் யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்பது மிகத் தெளிவானது. தேசியமாகட்டும் ஜனநாயகமாகட்டும் எதுவாக இருந்தாலும் இது மக்களின் சொந்த விடுதலையுடன் தொடர்புடையது என்பதை அரசியலாக கொண்டவர்கள் நாம். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக அவர்களே போராட வேண்டிவர்கள் என்ற அடிப்படையில் நடைமுறை அரசியலை முன்வைப்பவர்கள். இந்த அடிப்படையில் இயங்குபவர்கள் நாம்.

 

பி.இரயாகரன்
25.05.2008

பின்குறிப்பு : தமிழ் மக்களின் மாற்றுப் பாதை என்ன? மிக விரையில் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ