Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2020

Wednesday, 15 July 2020

2020 இல் யாருக்கு வாக்களிப்பது!? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 15 July 2020 11:47
பி.இரயாகரன் - சமர் / 2020

2020 தேர்தல் குறித்து, யாழ் மையவாத சிந்தனையானது முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றது. எது பாதை என்று குழம்புகின்றது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது.

தமிழ் இனவாதமும், பிரதேசவாதமும், மதவாதமும், சாதியமும் பேசுகின்ற தங்கள் மனித விரோத வக்கிரத்துக்கு வாக்களிக்கக் கோருகின்றனர். மறுபுறம் ஒடுக்குபவனுடன் சேர்ந்து அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று கூறி, ஒடுக்கப்பட்டவன் மற்றொருவனுக்கு அடிமையாக இருக்க வாக்களிக்குமாறு கோருகின்றது. இன்று தேர்தல் வெற்றிக் கனவுகளுடன் பயணிக்கின்றவர்களின் அரசியல் சாரம் இதுதான்.

தமிழ் இனவாதிகள் கடந்த 70 வருடமாக முன்னிறுத்தி பயணித்த அதே இனவாதக் கனவுகளுடன் - தீர்வுகளை கண்டடைந்ததான போலிக் பிரமிப்புகளுடன், கொழுப்பேறிய மண்டைக் கனத்துடன் கம்பு சுத்துகின்றனர். வழமை போல் இம்முறையும் பெற்றி பெற்று, தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற தங்கள் அதிகாரத்தை, மறுபடியும் கோருகின்றனர்.

ஒடுக்கப்பபட்ட தேசம், தேசியத்தின் அழிவைத் தவிர, வேறு எதையும் இந்த யாழ் மையவாத இனவாதச் சிந்தனைமுறை - தேர்தல் மூலம் கடந்த காலத்தில் உருவாக்கவில்லை. தேர்தல் அரசியல் முதல் ஆயுதப் போராட்டம் வரை, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதே ஒழிய, விடுதலைக்கு வழிகாட்டியது கிடையாது. விடுதலை என்பது இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், சாதி வாதம் மூலம் சாத்தியமில்லை.

Read more...
Last Updated ( Wednesday, 15 July 2020 11:57 )


Sunday, 05 July 2020

"முன்போல் சாதி ஒடுக்குமுறையில்லை" PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 05 July 2020 12:49
பி.இரயாகரன் - சமர் / 2020

"முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" முதலாளித்துவ வெள்ளாளியத்தால் இப்படித்தான் புலம்ப முடியும். முன்போல் எதுதான் இருக்கின்றது!? எல்லாம் இயங்கிக் கொண்டு மாறிக்கொண்டு இருக்கின்றது. இதுதான் இயங்கியல் விதி, இது சாதிக்கு விதிவிலக்கல்ல. இதை மறுக்கிறவர்கள், நாங்கள் முன்போல் உங்களை ஒடுக்குவதில்லை என்று கூறுகின்றதன் பொருள், நவீன வெள்ளாளிய ஒடுக்குமுறை பூசிமெழுகுவதைத் தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவம், ஆணாதிக்கம், நிறவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை .. என எதுவும் முன்போல் இருப்பதில்லை. இதனால் இதை இல்லை என்று கூற ஒருவன் முற்படுவானேயானால், அவன் ஒடுக்குமுறையாளனாக இருக்கின்றான் என்பதுதான் பொருள்.

இது இன்று சாதி எப்படி, எங்கே இயங்குகின்றது என்பதைக் காட்டு என்று கேட்பதற்கு நிகரானது. பாரம்பரிய சாதிய சுடலையில் தான் எரிப்போம் என்பதும், யார் தேர் தடத்தை பிடிக்கலாம் என்பதை வரையறுப்பதாகட்டும், யார் பூசாரி என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயில் எங்கே - எது வரை யார் நுழைய முடியும் என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயிலில் பெண்களின் எல்லை என்ன என்பதை வரையறுக்கும் ஒழுக்க விதியாகட்டும், சேட்டைக் கழற்று - செருப்பை கழற்று என்ற அதிகாரமாகட்டும் இவற்றின் பின்னால் சாதிய அதிகாரமும் - ஒடுக்குமுறையுமே இயங்குகின்றது. இது இன்று வெளிப்படையாகவும் - மறைமுகமாகவும் இயங்குகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 05 July 2020 18:03 )