April 2014
Written by தமிழரங்கம்
|
Wednesday, 30 April 2014 07:06
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 04
|
மே தினம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் சென்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தினமாகும். சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினமாகும்.1886 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட சதுக்கத்தில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் தமக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோஷமெழுப்பினார்கள்.
Read more...
|
Last Updated ( Wednesday, 30 April 2014 07:10 )
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 29 April 2014 11:00
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 04
|
இன்று நினைவு கூறப்படும் மே தினம் அதன் உண்மையான அர்த்தத்தோடு நினைவு கூறப்படுவதில்லை. அது ஒரு போலியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் தனித்தனியாக மே தினத்தை நினைவு கூறுகின்றன. அதேபோல், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாக இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடியுமென்றும் சில செஞ்சட்டை மேதாவிகளும் கூறுகின்றனர். இந்த போலி தர்க்கங்களுக்குப் பதிலாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடும் அரசியலை சமூகமயப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
Read more...
|
Last Updated ( Tuesday, 29 April 2014 11:04 )
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 28 April 2014 07:00
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
பாரிஸ் கூட்டத்தில் முன்னிலை சோஸலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் - தோழர் பூபுடு ஜெயக்கொட
கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இனவாத அரசியலால், நாடு இனவாத சகதிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் எம்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வில்லா பிரச்சினையாகவே தொடர்கின்றது. இந்நிலையில் எம்மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், நாம் தமிழ்மக்கள் பிரச்சினைகளை, சிங்கள மக்கள் மத்தியில் நேர்மையாக எடுத்துச் சொல்லி வருகின்றோம். இலங்கை அரசு இன்று தமிழ்-முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன அடக்கு முறைகள், திட்டமிட்ட முறையில் அம்மக்ககளின் பிரதேசங்கள் மீது செய்துவரும் இனவொழிப்பு நடவடிக்கைகளை ஏன்தான் செய்கின்றது.? என்பதையும் விளக்கி வருகின்றோம்.
Read more...
|
Last Updated ( Monday, 28 April 2014 07:07 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 24 April 2014 10:47
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
தனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்க்கையை உருவாக்க முனைகின்றனர்.
சுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்... கொண்ட இன்றைய வாழ்க்கை முறை ஏற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்கையையும் உருவாக்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 24 April 2014 10:49 )
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 22 April 2014 07:04
அரசியல்_சமூகம்
/ விருந்தினர்
|
இன்னுமொரு சர்வதேச தொழிலாளர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் உங்களை நாடி வந்திருப்பது பெரிய செய்தியொன்றின் ஆரம்பத்திற்காகத்தான்.
எமது நாட்டில் அநேகமானோர் சர்வதேச தொழிலாளர் தினத்தை மே தினம் என்றே அழைக்கின்றனர். தலைநகர் கொழும்பு வீதிகளை அதிரச் செய்யும் விதத்தில் மே முதலாம் திகதி நடக்கும் ஊர்வலங்கள் பிற்பகலில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்களினாலும், அவற்றில் சில இசை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெறும். வாராந்திரப் பத்திரிகைகள், தினசரிப் பத்திரிகைகள் போன்ற அனைத்து பத்திரிகைகளும் மே தினத்திற்காக பல பக்கங்களை ஒதுக்குகின்றன. பெரும்பாலும் புறக்கோட்டையில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் தோழர்களின் துன்ப ரேகைகள் படர்ந்திருக்கம் முகங்களுடனான புகைப்படங்கள் அவற்றை அலங்கரிக்கின்றன. ஆனால் அந்த மே தின ஊர்வலங்களில் எப்போதாவது அந்த தோழர்களை நீங்கள் கண்டதுண்டா?
Read more...
|
Last Updated ( Tuesday, 22 April 2014 07:07 )
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 21 April 2014 07:53
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
இன்று கொள்கைளும், நோக்கங்களும், நடைமுறைகளுமற்ற, உதிரி வர்க்கங்களைக் கொண்டு குறுங்குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதேயடிப்படையிலேயே தனிநபர்கள் கூட அரசியல் குதர்க்கங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து, தங்களை வேறுபடுத்துவதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவை அனைத்தும் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தோற்றத்துடன், அதற்கு எதிரான ஒன்றாக முனைப்பு பெற்று வருகின்றன.
புலி - அரசு சார்ந்த இரு பாசிசங்கள் அக்கம்பக்கமாக நிலவிய காலத்தில், தமில் பேசும் மக்கள் மத்தியில் இருந்த எல்லாவிதமான சமூக செயற்பாட்டுக் கூறுகளையும் புலிகளும் அரசும் அழித்தனர். இக்காலத்தில் நடைமுறை சார்ந்த சமூக-அரசியற் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட வர்க்க விடுதலைக்கான அரசியல் முற்றாகச் செயலிழந்து போனது. இந்த விசேடமான வரலாற்றுச் சூழலில் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் தவிர்க்க முடியாதாகவும், சில சந்தர்பங்களில் இவர்களின் இருப்புதேவையானதாகவும் தர்க்க ரீதியானதாகவும் கூட இருந்தது.
Read more...
|
Last Updated ( Monday, 21 April 2014 07:58 )
|
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 19 April 2014 11:30
அரசியல்_சமூகம்
/ சம உரிமை இயக்கம்
|
தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.
Read more...
|
Last Updated ( Saturday, 19 April 2014 11:33 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 18 April 2014 07:51
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 05
|
குடிக்க சுத்தமான குடிநீர் கேட்ட போராடிய மக்கள் மீது, பாய்ந்து குதறியது அரச பயங்கரவாதம். மூன்று பேர் கொல்லப்பட, 50 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பொது மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டது. இராணுவ வன்முறைக்கு அஞ்சி தேவலாயத்தில் புகலிடம் பெற்ற மக்களை, இராணுவம் அடித்து துவைத்துள்ளது. சுதந்திரமாக தகவல்களை சேகரிக்கவும், தெரிவிக்கவும் முடியாத வண்ணம், ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரச பயங்கரவரத்தை மூடிமறைக்கும் வண்ணம், அனைத்தையும் கண்காணிக்கின்றது. விசாரணையின் பெயரில் இராணுவவிசாரணைக்கு உத்தரவுவிட்டு நாடகமாடுகின்றது. விசாரணை பெயரில், மக்களையும் ஊடகவியளாளர்களையும் தனது இராணுவ முகாமுக்கு வருமாறு மிரட்டி வருகின்றது. வெலிவேரியாவுக்கு இராணுவத்தை யார் வரவழைத்தது, யார் துப்பாக்கி பிரயோகத்துக்கு உத்தரவை வழங்கியது என்று எதையும் கண்டறிய முடியாதுள்ளதாக கூறுகின்ற பாசிச கோமாளிகளின் கேலிக் கூத்துகளின் பின்னணியில் தான், விசாரணைகள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றது.
Read more...
|
Last Updated ( Friday, 18 April 2014 07:54 )
|
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 17 April 2014 13:24
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 05
|
"மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். இன்று அப்படித்தான். உழைப்பிற்கான பொது உடமையின்றி தனிமைப்பட்டுப் போன விஞ்ஞானமும், ஆய்வுகூடத்தில் கண்டறியும் நுட்பக் கருவி சார்ந்த அறிவும் கூட, கூட்டு உழைப்பில் மட்டும் தான் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த முடியும்."
உழைத்து வாழும் ஒவ்வொருமனிதனும் உழைப்பைச் செலுத்தும் போது, உழைப்புக்கு உள்ளாக்கும் பொருட்கள் பற்றிய அறிவைக் கொண்டிருக்கின்றான். இந்த அறிவு தான் விஞ்ஞானம். இந்த உழைப்புத் தான் விஞ்ஞானத்தின் மூலம். இரண்டையும் ஒன்றிலிருந்து வேறொன்றாகப் பிரிக்க முடியாது. உழைப்பும் அறிவும் இணைந்தது தான் விஞ்ஞானமாகவும், மனித வாழ்வுக்கான அடிப்படையாகவும் இருக்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 17 April 2014 13:28 )
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 15 April 2014 13:56
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
இலங்கை ஆளும் வர்க்கம் இனவாத மூலமாக மட்டும் மக்களை அடக்கியாள முடியாத நிலையில், இன்று புலி தேவைப்படுகின்றது. 30 வருடமாக புலியைக் காட்டி ஆண்டவர்கள், புலியை தோற்கடித்தன் மூலம் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு விட்டனர். பெரும்பான்மையின மக்களுக்கு எதிரியை காட்டி ஏமாற்ற முடியதா நிலையில், அவர்கள் அரசிற்கு எதிராக அணிதிரண்டு போராட எழுவதனை தவிர்க்க, மீண்டும் புலி தேவைப்படுகின்றது. அதாவது மக்கள் தமது எதிரியாக அரசைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்களுக்கு ஒரு எதிரியை உருவாக்கிக் கொடுக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் அரசு தடுமாறுகின்றது. புதிய புலி வேட்டை, இப்படித்தான் மேடையில் அரங்கேறியது.
இலங்கை ஆளும் வர்க்கத்தால் இன்று இதைத் தாண்டி எதையும் வழங்க முடியாது. தேர்தல் மூலம் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி கட்டமைப்பு மாறுவதில்லை. இன்றைய இலங்கை ஆட்சி அதிகார கட்டமைப்பானது இனவாதம் மதவாதத்தை அடிப்படையாக கொண்டது. எனவே ஆட்சியாளர்களை மாறுவதால் இந்த ஆட்சி அதிகார கட்டமைப்பானது ஒழித்துவிடப் போவதில்லை. உலகமயமாகிவிட்ட ஒற்றைப் பொருளாதாரக் கொள்கைக்கு மாறாக, மக்களை ஆள்வதற்கு வேறு அரசியல் தெரிவு இந்த ஆளும் வர்க்கத்திடம் இன்று கிடையாது.
காலனியவாதிகளிடம் அதிகாரத்தைப் பெற்ற சுதேசிகள், தொடர்ந்து இனவாதம் மூலமே மக்களைப் பிரித்தாண்டனர். இந்த அரசியலின் விளைவாகவே, புலிகள் தோன்றினர். புலி-அரசும் கையாண்ட எதிர் எதிரான இனவாத அரசியலும், அதன் இராணுவாதமும் இணைந்து பாசிசத்தை தோற்றுவித்தது. இறுதியில் புலிகள் அழிக்கப்பட்ட போதும்
Read more...
|
Last Updated ( Tuesday, 15 April 2014 13:59 )
|
|
Page 1 of 2
|