Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
March 2014

Thursday, 27 March 2014

புலம்பெயர்ந்த எமது - சுய விமர்சனமும், அரசியல் நடைமுறைக்கான அனுபவப் பகிர்வும்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 27 March 2014 11:54
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் தேசியப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009 யுத்தத்தின் பின்னான காலத்தில், அப்போராட்டத்தை தொடர்வதற்கான பலவகையான அரசியல் வழிமுறைகள் புலம்பெயர் தேசங்களில் விவாதிக்கப்படுகிறன. பெரும்பான்மையான புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசியற் சிந்தனைக்கேற்ப மேற்கு ஏகாதிபத்தியநாடுகைளைச் சார்ந்து நின்று தமிழ் ஈழத்தைப் பெறுவதே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் உள்ள இடதுசாரியம் கதைக்கும் உதிரிகளும், சிறு சிறு குழுக்களும் அவர்களின் இணையங்களும் மேற்படி புலிகளின் ஆதரவாளர்களின் அரசியலை விமர்சித்த வண்ணம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பல வழிகளை முன்வைக்கின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 27 March 2014 11:59 )


Tuesday, 25 March 2014

நவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 March 2014 15:32
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 05

2011 நவம்பர் 16ம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திட்டமொன்று வெளியிடப்பட்டது. 2000மாம் ஆண்டு இலக்கம் 49 நகர மற்றும் கிராம நிர்மாணம்( திருத்தம்) சட்டமூலத்தின் 3(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியால் 2011 ஜனவரி 13ம் திகதி நியமிக்கப்பட்ட தேசிய இயற்பியல் நிர்மாண சபையின் மூலம் 2011 மற்றும் 2030க்கிடையிலான 20 வருடகாலத்துக்குமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 'தேசிய இயற்பியல் வரைவு" (National Physical Plan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கத்திற்கு ஏற்ப, இலங்கையின் பூகோள அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை பஞ்ச மகா சக்திகளின் கேந்திரஸ்தானமாக்குவதேயாகும்.

Read more...
Last Updated ( Tuesday, 25 March 2014 15:37 )


Wednesday, 19 March 2014

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 March 2014 08:09
சமகால நிகழ்வுகள் / Newsflash

'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு

Read more...
Last Updated ( Wednesday, 19 March 2014 08:13 )


Wednesday, 12 March 2014

மலையக அரசியலில் மக்களின் நிலை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 12 March 2014 14:02
அரசியல்_சமூகம் / விருந்தினர்

மலையக மக்களுக்கு 4000 வீடுகளை கட்டிக்கொடுக்கப் போவதாக செய்திகள் தற்போது மலையகத்தில் அடிபடுகிறது. இச் செய்தி மலையக மக்களின் கரிசனைக்கு பெரிதாக உட்படாத போதும் மலையக அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடவும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவல்களை சந்தித்து அது தொடர்பாக கலந்துரையாடும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில தலைவர்கள் வெகு விரைவில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவல்களை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலைமைக்குக் காரணம் வழங்கப்படும் வீடுகள் முழுமையாக அரசியல் சகாய அடிப்படையில் இ.தொ.க சார்பானவர்களுக்கு வழங்கப்படுவதற்கான ஏது நிலைகள் இருக்கின்றது என மற்றைய மலையக தொழிற்சங்கத் தலைமைகள் கருதுவதனாலாகும். அவ்வாறு கருதுவதற்கு நியாயங்கள் உண்டு. இந்திய அரசு 4000 வீடுகள் வழங்குவதாக கூறப்படுகிறது. இன்றைய அரசாங்கம் 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனைக் கொள்கைப் பிரகடனத்தில் லயன் முறைகளை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து 2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் ஊடாக 50000 மாடி வீடுகளை கட்டித்தருவதாக கூறியுள்ளது.முழு சமூகமாக காணி, வீட்டுரிமைகளை மறுக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்தும் பொதுவில் மலையக மக்களிடமிருந்தும் வீட்டுரிமையை ஒரு உரிமை என்ற அடிப்படையில் நிலைநிறுத்திக்கொள்வதற்கான கருத்தாடல் இடம்பெறுவதாக இல்லை.

Read more...
Last Updated ( Wednesday, 12 March 2014 14:07 )


Saturday, 08 March 2014

உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தின அறைகூவல் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 08 March 2014 19:06
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

Read more...
Last Updated ( Saturday, 08 March 2014 19:09 )


Friday, 07 March 2014

சமவுரிமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமே PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 07 March 2014 18:59
பி.இரயாகரன் - சமர் / 2014

வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பவ்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக் கோரிக்கையை இணைக்கும் பொதுத் தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.

அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்;லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும்.

Read more...
Last Updated ( Friday, 07 March 2014 19:10 )


Thursday, 06 March 2014

மௌனம் காக்கும் நேரமா? குரலெழுப்பும் நேரமா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 06 March 2014 12:58
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

நீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.

 

Read more...
Last Updated ( Thursday, 06 March 2014 13:01 )