Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
February 2014

Thursday, 27 February 2014

1971, மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் சென்ற கற்பிதங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 27 February 2014 14:52
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

1971 ஏப்ரல்மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு அறிவித்தல அடிக்கடி வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது. இந்நாட்டு மக்கள் என்றுமே எதிர்பார்த்திராத செய்தி அது. என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. "நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையங்களை தாக்கி அந்த பிரதேசங்களில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போரடி வருகிறது. அவர்களை முறியடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்ய தயாரக உள்ளதாக" அந்த செய்தி மேலும் கூறியது.

 

Read more...
Last Updated ( Thursday, 27 February 2014 14:54 )


Tuesday, 25 February 2014

காலாகாலமாக ஏமாற்றப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 25 February 2014 15:19
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்;பந்தமான கூட்டு உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடும் தொழிற்;சங்க கூட்டுக்கமிட்டிக்குமிடையில் நடைபெற்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம், ஏனைய தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு வருகின்றனர்

 

Read more...
Last Updated ( Tuesday, 25 February 2014 15:28 )


Monday, 24 February 2014

மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 24 February 2014 14:11
அரசியல்_சமூகம் / சம உரிமை இயக்கம்

நேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.

Read more...
Last Updated ( Monday, 24 February 2014 14:19 )


Wednesday, 19 February 2014

வல்லானின் குப்பைகள் வறியவனின் தோட்டத்தில்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 19 February 2014 13:31
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோரும் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைவீதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எந்தவகையிலாவது உழைத்த பணத்தைக் கொண்டு துணிமணிகள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் கொலன்னாவ பகுதியில் சம்பவமொன்று நடந்து கொண்டிருந்தது. கொலன்னாவையையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாறடித்துக் கொண்டிருந்த குப்பைமேட்டுக்கு போகும் வழியை மறித்து அப்பிரதேச மக்கள், அங்கே குப்பை கொட்டுவதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.

Read more...
Last Updated ( Wednesday, 19 February 2014 13:35 )


Tuesday, 18 February 2014

மலையகத்தில் பதிலீட்டு அரசியலும் மாற்று அரசியலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 18 February 2014 12:29
அரசியல்_சமூகம் / விருந்தினர்

2013 பொதுவில் இலங்கையில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு உட்பட்ட ஆண்டாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், சுத்தமான நீர் வழங்க கோரிய போராட்டங்கள், ஆட்கடத்தல்கள் படுகொலைகளையும் நிறுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான என்ற கோரிக்கையுடனான போராட்டங்கள் ஆகியன மக்களின் எதிர்ப்பை அரசியல் அதிகார மையத்துக்கு வெளிப்படுத்தி நின்றன. எனினும் மக்களின் இந்த போராட்டங்கள் எவ்விதத்திலும் வெளிப்படாத, பிரதிபளிக்காத பிரதேசமாக மலையகம் காணப்பட்டது. மலையக மக்கள் முகம்கொடுக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கும் (பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மனித உரிமை மீறல்கள், தனியார்மயம், இலஞ்ச ஊழல் அதிகரிப்பு) தமக்கே உரித்தான விசேட பிரச்சினைகளுக்கும் (சம்பள கூட்டு ஒப்பந்தம், வீடு, காணி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு) குரல் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? ஏனைய பிரஜைகளைவிட பொதுப் பிரச்சினைகளில் அதிகம் பாதிப்பவர்களாகவும் விசேடமாக பாரபட்சங்களுக்கும் உள்ளாக்கியுள்ள நிலையில் மலையக மக்களின் மௌனம் ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மலையக அரசியல் தலைமைகள் பொதுவில் அரசாங்கத்திற்குச் சார்பாக இருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்ற மக்களின் எண்ணத்தினால் இந்த மௌனம் நிலவுகின்றது என்றோ அல்லது மலையக மக்களை சரியாக வழிநடத்த மாற்று கொள்கையுடனான வேலைத்திட்ட நடைமுறையுடனுமான அரசியல் சக்தி இன்மையினாலே என்று நோகுவது கோளாறுகளைக் கொண்டதாகும்.

Read more...
Last Updated ( Tuesday, 18 February 2014 12:38 )


Monday, 17 February 2014

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு இணைவோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 17 February 2014 13:56
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 04

அது ஒரு உல்லாசப் பயணிகள் நாடி வரும் அழகிய கடற்கரை. இரு உல்லாசப் பயணிகள் அன்று அங்கே தற்செயலாய் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவர் நோர்வேஜியர் மற்றவர் ஆங்கிலேயர். நோர்வேஜியருக்கு நீண்டகாலமாக இருந்த ஆசைகளிலொன்று, தான் இந்திய பெருநாட்டை ஒருமுறையாவது சுற்றிப் பார்த்துவிடுவதென்ற சிறுவயதிலிருந்தே வளர்ந்து விட்டிருந்த பெருவிருப்பு. நிறையவே இந்தியாவைப் பற்றி தான் கேள்விப்பட்டவற்றை தரிசிக்க வேண்மென்ற ஆவல் அவருக்கிருந்தது. தனது இளவயதில் தனது வருமானத்திற்கு கட்டுப்படியாகாதிருந்தும் தனது இந்தக் கனவை நிறைவேற்றும் எண்ணத்துடன், தான் சிறிதுசிறிதாக சேமித்து வைத்திருந்த பணத்துடன் தனது காதலியுடன் அவர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

Read more...
Last Updated ( Monday, 17 February 2014 13:58 )


Sunday, 16 February 2014

சமவுரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்வு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 16 February 2014 17:57
சமகால நிகழ்வுகள் / Newsflash

2009ம்ஆண்டு பேரழிவுக்கு பின்னால் இலங்கையில் தொடருகின்ற அரசியல் நிலவரத்தில், சமவுரிமை இயக்கத்தின் அவசியமும் அதன் தேவையும் குறித்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு உங்களை அழைக்கின்றோம்

 

Read more...
Last Updated ( Monday, 17 February 2014 13:53 )


Friday, 14 February 2014

ஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது!!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 14 February 2014 08:02
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

"அந்த நாயக்கன் அன்று ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு வந்த பொழுதே அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும்" என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜா என்ற நாய் குரைத்திருக்கிறது. செய்திருக்கலாம் ஏன் செய்யவில்லை? கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தானே! இப்போது சொல்வதை அவன் உயிருடன் வாழ்ந்த போது செய்து காட்டியிருக்கலாமே. ஈ.வே ராமசாமியின் ஒரு முடியைக் கூட இந்த நாய்களால் தொட்டிருக்க முடியுமா?

Read more...
Last Updated ( Friday, 14 February 2014 08:05 )


Tuesday, 11 February 2014

மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 11 February 2014 17:08
அரசியல்_சமூகம் / விருந்தினர்

எமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். மலையக அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.

 

Read more...
Last Updated ( Tuesday, 11 February 2014 17:17 )


Sunday, 09 February 2014

கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 09 February 2014 18:21
அரசியல்_சமூகம் / விருந்தினர்

பல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

Read more...
Last Updated ( Sunday, 09 February 2014 18:27 )

Page 1 of 2