December 2013
Tuesday, 31 December 2013
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 31 December 2013 14:05
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 03
|
கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.
Read more...
|
Last Updated ( Tuesday, 31 December 2013 14:09 )
|
|
Saturday, 28 December 2013
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 28 December 2013 09:10
அரசியல்_சமூகம்
/ விஜயகுமாரன்
|
கம்யுனிஸ்ட்டு கட்சி அறிக்கையை,ஆசான்கள் கார்ல் மார்க்சும்,பிரடெரிக் ஏங்கெல்சும் உலகதொழிலாளர்களிற்கு தந்த மாபெரும் ஆவணத்தை,தமிழ்மண்ணின் உழைப்பாளிகளிற்கும்,இடதுசாரி முற்போக்கு சக்திகளிற்குமாக முதல் தமிழ்மொழிபெயர்ப்பை பெரியார்,பொதுவுடமைக்கட்சியின் சிங்காரவேலனாருடன் சேர்ந்து கொண்டு வந்தார். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்,கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று வாழ்நாள் முழுவதும் மதங்களிற்கு எதிராக,மூடநம்பிக்கைகளிற்கு எதிராக போராடினார். பார்ப்பனக் கொடுங்கோன்மையை,மனிதர்களை சாதி பிரித்து உயர்வு,தாழ்வு கற்பிக்கும் சதியை சாடினார். "நான் பிராமணர்களது சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் சந்தோசப்படும் வேளாளர்களும்,செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து,அவர்களை மற்ற தமிழ்சாதியினர் சமமான மனிதர்களாக மதித்து நடக்காத சாதிவெறி குறித்து பேசும் போது மெளனமாக இருக்கிறார்கள்" என்று சாதிப்படிமுறையின் கீழ் உள்ளவர்களை ஒடுக்கும் இரட்டைவேடம் போடுபவர்களை சாடினார்.
Read more...
|
Last Updated ( Saturday, 28 December 2013 09:32 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 27 December 2013 15:48
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 03
|
ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.
Read more...
|
Last Updated ( Friday, 27 December 2013 15:55 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 23 December 2013 14:08
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ போராட்டம் பத்திரிகை 03
|
மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Monday, 23 December 2013 14:12 )
|
|
Tuesday, 10 December 2013
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 10 December 2013 15:26
அரசியல்_சமூகம்
/ சம உரிமை இயக்கம்
|
சுதந்திரம் அடைந்த காலம் முதல் இலங்கையை ஆண்டு வருகின்ற அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களைச் சாதாரண மக்களிற்கு மறுத்து வந்துள்ளனர். மேலும் மக்களை இனம், மதம், மொழி வாரியாக பிரித்து வைத்து இனக்கலவரங்களைத் தூண்டியும், மனித உரிமைகளை மறுக்கின்ற சட்டங்களை இயற்றியும் மக்கள் ஒன்றிணைந்து தமக்கு எதிராக அணிதிரளா வண்ணம் திட்டமிட்டு இவர்கள் செயற்பட்டு வந்தனர் வருகின்றனர்.
Read more...
|
Last Updated ( Tuesday, 10 December 2013 15:29 )
|
|
Saturday, 07 December 2013
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 07 December 2013 10:40
அரசியல்_சமூகம்
/ விஜயகுமாரன்
|
சிறைச்சாலையால் எங்களது உறுதியை,அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதிவெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது. இருபத்தேழு வருடங்களை தனிமைச்சிறையில் கொடும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மனிதனின் எழுச்சிவரிகள் இவை. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப்பிரிவினது தலைவராக சிறை சென்றவர் சிறை மீண்டு தென்னாபிரிக்க குடியரசின் ஜனாதிபதியானார். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமைகள் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்பு மாறியுள்ளனவா?
தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்கள் சிறுபான்மை பிரித்தானிய ,டச் வெள்ளையினத்தவரின் நிறவெறிக் கொடுமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். கறுப்பினத்தவர்கள் ஜனாதிபதியாகவும்,மந்திரிகளாகவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆனால் பசியிலும்,பட்டினியிலும் வாழ்ந்த கறுப்பு மனிதர்களின் வயிறுகள் நிறைகின்றனவா? சேரிகளின் நெரிசல்களில் வாழ்ந்த வாழ்க்கை மாறி விட்டதா?. வயிற்றுப்பசிக்காக ஆபத்து மிகுந்த வைரச்சுரங்கங்களில் தமது குழந்தைப் பருவங்களை தொலைத்த வாழ்க்கை மாறி விட்டுதா? வேலை இல்லாததால் களவிலும்,வன்முறையிலும் ஈடுபட்டு வாழ்க்கையை சிறைச்சாலைகளில் தொலைத்த நாட்கள் மாறி விட்டனவா?
Read more...
|
Last Updated ( Saturday, 07 December 2013 10:49 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 06 December 2013 17:06
அரசியல்_சமூகம்
/ சம உரிமை இயக்கம்
|
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சமஉரிமை இயக்கம், ஜரோப்பாவில் கூட்டங்கள் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்துள்ளது.
Read more...
|
Last Updated ( Friday, 06 December 2013 17:15 )
|
|
|