April 2013
Written by பி.இரயாகரன்
|
Monday, 29 April 2013 16:46
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
உலகமயமாதல் சூழலில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிகர வடிவம் என்ன? இது கடந்தகால கட்சிரீதியான வடிங்களையும், போராட்டங்களையும் மறுத்துவிடவில்லை. அதேநேரம் ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரத்தை ஜனநாயகப்படுத்தி மையப்படுத்தக் கோருகின்றது. எளிமைப்படுத்திய வடிவில் இடது முன்னணியாக அனைத்துப் புரட்சிகர சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஸ்தாபன வடிவமும், அதற்கான முதன்மையான அரசியல் பாத்திரமும் அவசியமானது. தனித்தனிக் கட்சிகளின், அமைப்புகளின் செயற்பாடுகள் இதை மையப்படுத்தி, இதற்கூடாக செயற்படுவது அவசியம். முரண்பாடுகள் என்பது முரண்பாடுகளைக் களையும் நோக்கில், நடைமுறைப் போராட்டத்தை முன்நகர்த்துவதாக இருக்க வேண்டும். பல்வேறு முரண்பட்ட சக்திகளையும், முரண்பாடுகளையும் ஒன்றிணைக்கும் புள்ளி தான் ஐக்கியம். புரட்சிகர சக்திகளும், போராடும் மக்களும் பிரிந்து நிற்காத வண்ணம், பாட்டாளி வர்க்க அரசியல் செயல்தந்திரம் இருக்க வேண்டும்;. முரண்பாடுகளை களைவதற்கான புள்ளி, நடைமுறையில் ஒன்றிணைந்து போராடுவது தான். ஆகவே முரண்பாட்டுடன் இணைந்து போராடும் புள்ளியும், அதற்கான வடிவமும் அதற்கான முதன்மையான இடமும் இன்று அவசியமானது. இதற்கான ஒரு பொது அரசியல்வெளியை உருவாக்கி அரசியல்ரீதியாக முன்னெடுப்பது தான், ஐக்கியத்துக்கான அரசியல் செயல்தந்திரமாக இருக்க முடியும்.
Read more...
|
Last Updated ( Monday, 29 April 2013 16:50 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 26 April 2013 12:11
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
மக்கள் சுயமாக சிந்திக்கவும், செயற்படவும் கூடாது. இதுவே தேர்தல் நடக்கவுள்ள வடக்கில், அரசு கட்டமைத்துள்ள இராணுவப் பாசிசத்தின் வெட்டுமுகமாகும். இந்த நிலையில் வடக்கு தேர்தலில் தமிழ் மக்களை தோற்கடித்தல் மூலம், இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லையென்று உலகுக்கு அரசு காட்ட முற்படுகின்றனர். வடக்கில் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து இருப்பது என்பதன் அர்த்தம், தமிழ் மக்களைக் கண்டு அஞ்சுவதும், தேர்தல் ஜனநாயகத்தையே கண்டு அஞ்சுவதும் தான். இந்த அரசின் பரிதாபகரமான இன்றைய அரசியலாகும்.
இந்த நிலையில் தேர்தலை வெல்வது என்ற அரசின் முடிவே, தேர்தல் ஜனநாயகத்தை மறுப்பதாகிவிட்டது. தேர்தல் மோசடியில் தொடங்கி மக்களை பிளப்பது வரையான, எல்லா மக்கள் விரோத செயற்பாட்டையும் கொண்டு தமிழ் மக்களை தேர்தலிலும் தோற்கடித்தல் என்பதே அரசின் செயல்தந்திரமாகும். யுத்தத்தில் வென்றவர்கள் தேர்தலில் வெல்வது பற்றிப் பேசுகின்றனர்.
Read more...
|
Last Updated ( Saturday, 27 April 2013 17:13 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 26 April 2013 05:57
அரசியல்_சமூகம்
/ எல்லாளன்
|
பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்
மீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களும் கஸ்ரத்தில் கஞ்சி குடிக்கின்ற நிலையில் இருந்தனர். அதற்குப் பின் அவர்களை நாம் கஸ்ரப்படுத்தவில்லை. எமக்கு உதவி செய்த அரசியலுக்குச் சம்பந்தமில்லாத இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். நகுலன் என்னுடன் ஏ.ஏல் படித்தவர். நிரஞ்சன் எனது ஊரைச் சேர்ந்த மாணவர். ரகு கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தவர். அவர்கள் எமது நிலைமையினை அறிந்து எமக்கு சாப்பாடு தந்தார்கள். தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும் செய்து தந்தார்கள். உதாரணமாக, சிலவேளைகளில் இலங்கை மாணவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஒன்றான நங்கநல்லூர், பழவந்தாங்கல் பிரதேசங்களுக்கு நாம் போகும்போது என்னுடன் படித்தவர்களோ ஊரவரோ என்னைக் கண்டால் தமது இருப்பிடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்று சாப்பிடச் சொல்வார்கள். ஆரம்பத்தில் இது தற்செயலான சம்பவமாக நடந்தது. என்றாலும் ஒரு கட்டத்தில் நானே அவ்வாறு சாப்பாட்டிற்காக அவர்களை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.
Read more...
|
Last Updated ( Saturday, 27 April 2013 09:42 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 25 April 2013 09:17
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
இலங்கையில் பாசிசம் அனைத்தையும் சேரிக்கின்றது. சுயாதீனமான செயல்கள் மீது வன்முறையை ஏவுகின்றது. இலங்கை அரசியலில் எங்கும் இதைக் காணமுடியும். இலங்கையில் உழைக்கும் மக்களில் தீண்டத்தகாதவராகவே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றனர். இலங்கையின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தைக் கூட மலையக மக்களுக்கு நடைமுறைப்படுத்த மறுக்கின்ற ஜனநாயக விரோத அரசு தான், இலங்கையில் “ஜனநாயகமாக” இன்னமும் தொடருகின்றது. அரசு பாசிச வடிவம் பெறுகின்ற போது, மலையக தோட்டத்தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும் வடிவமும் வன்முறை கொண்டதாகவும், திணிப்பாகவும் மாறுகின்றது. அவர்கள் தமக்காக போராட முடியாத வண்ணம், சுரண்டல் வன்முறை வடிவம் பெற்றுவருகின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 25 April 2013 09:27 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 23 April 2013 07:53
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
புகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல பத்தாயிரம கோடியாக குவித்துக்கொண்டு, அதை பாதுகாக்க படைகளையும் அதற்கான செலவுகளையும் பல மடங்காக அதிகரிக்கும் நாட்டின் ஐனாதிபதியிடம், இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
இதை மூடிமறைக்க குறைந்த மின் பாவனையாளர்களைப் பாதிக்காத அதிகரிப்பையே செய்துள்ளதாக கூறுவதன் மூலம், மக்களை முட்டாளாக்க முனைகின்றனர். மக்கள் மேலான புதிய வாழ்க்கைச் சுமையை திரித்தும், ஏய்த்தும் அதை மூடிமறைக்க முனைகின்றனர்.
Read more...
|
Last Updated ( Tuesday, 23 April 2013 07:56 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 19 April 2013 22:38
அரசியல்_சமூகம்
/ எல்லாளன்
|
பணப்பிரச்சினைக்குத் தீர்வு
நாம் ஏற்கெனவே வந்த நோக்கங்களில் ஒன்றான பணப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது. அதற்காக நாட்டில் ஏற்கெனவே இருந்த மற்றத் தோழர்களுடன் கதைத்தோம். நாம் எவருமே முன்பு ரெலோவில் இருந்தோம் என்பதைத் தவிர வேறு எந்தவகையான உறவுகளும் நிர்ப்பந்தங்களும் கட்டுப்படுத்தலும் இல்லாத நிலையில் இருந்தோம். ஆனால் இந்தியாவில் இருந்த பெண் தோழிகளின் நிலையினைக் கருதித்தான் அந்தப் பிரச்சனைகள் தீரும் வரை தொடர்ந்து வேலை செய்வதென முடிவெடுத்தோம். அதாவது, யார் விரும்பினாலும் அவர்கள் சொந்த வாழ்க்கைக்குச் செல்லலாம் என்ற நிலையில் இருந்தோம்.
நானும் என்னுடன் வந்த தோழரும் பெண் தோழிகளின் பிரச்சினை முடியும்வரை சேர்ந்து வேலை செய்வதென்ற முடிவில் இருந்தோம். அன்றைய எமது சந்திப்பில் பணத்தை ஏற்பாடு பண்ணிக்கொண்டு திரும்பவும் இந்தியா செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது. எனது நிலைமைகளை வீட்டிற்குத் தெரியப்படுத்தி நான் நாட்டில் இருப்பது நல்லதல்ல என்றும் திரும்பவும் இந்தியா போக முடிவுசெய்து விட்டேன் என்றும் கூறினேன். அவர்களைப் பொறுத்தவரையில் என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும் அது நல்ல முடிவாகவே அவர்களுக்கும் பட்டது.
Read more...
|
Last Updated ( Saturday, 27 April 2013 12:03 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 19 April 2013 08:05
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
இன்று இலங்கையில் சர்வதேசக் கடன் மூலதனமும், போர்க்குற்ற மூலதனமும், ஓரே திசையில் ஒரு புள்ளியில் பயணிக்கின்றது. இந்த வகையில் தனிவுடைமையிலான இன்றைய இலங்கையில் சொத்துடமையை, மீளப் பங்கிடக் கோருகின்றது. இது வைத்திருக்கும் மையக் கோசம் தான் "அபிவிருத்தி". இன்று இலங்கை அரசியலின் மையமானதும், பிரதானதுமான கோசமாக "அபிவிருத்தி" அரசியல் மாறியிருக்கின்றது. தங்கள் நிதி மூலதனத்தையும் முதலிட முனைகின்ற திசையில் தான், யுத்தத்திற்கு பிந்திய சூழலாகும்;. இது மக்களின் சிறுவுடமைக்கு எதிரான, நீதி மூலதனத்தின் யுத்தமாகவுள்ளது.
யுத்தம் நடந்த பிரதேசத்தில் நடந்தேறும் மீள்கட்டுமானம் என்பது, வெறும் இனவாதம் மதவாதம் சார்ந்த கூறாக மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக நிதி மூலதனத்தின் நலன்களே மையப்படுத்தப்பட்டு, அவை முதன்மைப்படுத்தப்பட்டு முன்தள்ளப்படுகின்றது. இதற்கு இனவாதம், மதவாதம் மூலம் கவசமிடப்படுகின்றது. யுத்தம் நடக்காத பிரதேசத்தில் கூட "அபிவிருத்தி" எனும் பெயரில் நடந்தேறுகின்ற அதே நேரம், முஸ்லிம் மதவாதம் பயன்படுத்தப்படுகின்றது.
Read more...
|
Last Updated ( Friday, 19 April 2013 08:07 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 18 April 2013 14:37
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
பொதுபல சேனா வெறுமனே இனவாத மதவாத அமைப்பல்ல. இப்படி அது தன்னைக் காட்டிக் கொள்வதும், அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதும் குறுகிய அரசியலாகும். அதாவது பொதுபல சேனா அமைப்பின் வெளிப்படையான நடவடிக்கைகளைக் கொண்டு அணுகும் போக்கு, இதை தோற்றுவித்தவர்களின் நோக்குக்கு சமாந்தரமானது. சிறுபான்மை இனத்தையும் மதத்தையும் பெரும்பான்மையின் எதிரியாகக்காட்டி ஒடுக்குவதன் மூலம் பிரித்தாளுவது மட்டும் இதன் அரசியல் நோக்கமல்ல. யுத்தத்தின் பின்னான பொருளாதார நலன்கள் தான், இதன் குறிப்பான இதன் குவிவான செயற்பாட்டுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இந்த வகையில் போர்க்குற்றவாளிகளின் கையில் குவிந்துள்ள சொத்துடமை சார்ந்த பொருளாதார நலன்கள், பொதுபல சேனாவின் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது.
இந்த வகையில் இறுதி யுத்தமும், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய படுகொலை மூலமும் புதிய சொத்துடமை கொண்ட ஒரு ஆளும் வர்க்கம்; உருவாகி இருக்கின்றது. இந்த வர்க்கம் தன்னுடைய புதிய சொத்துடமையைக் கொண்டு சுரண்டவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றது. இந்த வகையில் புதிய ஆளும் வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.
Read more...
|
Last Updated ( Thursday, 18 April 2013 14:40 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 14 April 2013 17:05
பி.இரயாகரன் - சமர்
/ 2013
|
யுத்தத்தின் பின்னான சூழல், யுத்தம் மூலம் கைப்பற்றிய மூலதனத்தை முதலீடுவதற்காக உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாகும். உள்நாட்டுச் சந்தையை மீள மறுபங்கீடு செய்யக் கோருகின்றது. இதுவே ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக, இன மத சிறுபான்மையியினது மூலதனத்துக்கு எதிரானதாக மாறிவருகின்றது. அரசு முன்தள்ளும் அபிவிருத்தி அரசியலின் உள்ளடக்கம் இதுதான். இந்த வகையில் யுத்த மூலதனமும், சர்வதேச நிதி மூலதனமும் இணைந்து பயணிக்கின்றது. அது ஏற்கனவே இருந்த சொத்துடமை ஒழுங்கையும், சுரண்டல் வடிவத்தையும், நிலவும் ஜனநாயக வடிவம் மூலம் பூர்த்தி செய்யமுடியாது. இதனால் பாசிசம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்தப் பாசிசம் வெறுமனே ஜனநாயக மேற்கட்டமைப்பை மட்டுமல்ல, பொருளாதாரக் கட்டமைப்பை தனக்கு ஏற்ப மறுபங்கீடு செய்து வருகின்றது.
இந்த அடிப்படையில் அரச பாசிசத்தை சமூகமயமாக்க முனைகின்றனர். அரசும், அதற்கு யுத்த மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தலைமைதாங்கும் குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து பாதுகாக்கவும், மூலதனத்தை விரிவாக்கவும் பாசிசத்தை தவிர வேறு வடிவம் அதனிடம் கிடையாது. புதிய யுத்த மூலதனத்தால் ஆளும் வர்க்கத்துக்குள்ளான முரண்பாடுகளும், வர்க்கரீதியாக சுரண்டும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடும், இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க பாசிசத்தை தேர்தெடுக்கும் அதேநேரம், இதை நிலவும் ஜனநாயக வடிவங்கள் ஊடாக ஜனநாயகப் போர்வையில் திணித்துவிட முனைகின்றது. இராணுவ ஆட்சியைக் கூட இயல்பான ஜனநாயகக் கட்டமைப்பாக்க முனைகின்றது.
Read more...
|
Last Updated ( Monday, 15 April 2013 05:28 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 14 April 2013 05:13
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
இன்று (13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும்.
Read more...
|
Last Updated ( Monday, 10 June 2013 21:36 )
|
|
Page 1 of 2
|