August 2012
Written by பி.இரயாகரன்
|
Friday, 31 August 2012 10:02
பி.இரயாகரன் - சமர்
/ 2012
|
அண்மையில் "விடியல் சிவா" மரணம் பற்றி எமது அஞ்சலியில், நாம் அரசியல்ரீதியான தவறொன்றை இழைத்திருந்தோம். "சமூக விடுதலைக்கு உரமூட்டிய விடியல் சிவா மரணித்து விட்டார்." என்ற எமது அஞ்சலிக் குறிப்பு, மக்களை அணிதிரட்டும் நடைமுறையை நிராகரித்த ஒருவருக்கு பொருத்தமற்றது. சமூகத்துடன், அதன் வர்க்கப் போராட்ட நடைமுறையுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துக்கள் தொடங்கி, சமூகத்துடன் இணையாத தனிநபர் செயல்பாடுகள் வரை, புரட்சிகரமான சமூக நடைமுறையை அவை கொண்டிருப்பதில்லை.
மார்க்சிய நூல்களை அச்சிடுவதால் மட்டும், ஒருவர் சமூக விடுதலைப் போராளியாகி விட முடியாது. ஒருவர் மார்க்சிய கருத்தைக் கொண்டு இருப்பதால், தனக்கென்று கொள்கைகளைக் கொண்டு இருப்பதால், அவர் மார்க்சியவாதியாகி விடுவதில்லை. இப்படி கருத்தை கொண்டு இருப்பதால், கருத்தை அச்சிடுவதால், ஒருவர் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை.
Read more...
|
Last Updated ( Friday, 31 August 2012 10:05 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 30 August 2012 19:36
பி.இரயாகரன் - சமர்
/ 2012
|
நடைமுறையுடன் இணையாத கருத்துகளில் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து அமைப்பாக்காக முனையாத வெற்றுக் கருத்துகளை நாம் போற்ற முடியாது. இந்தக் கருத்துக்கள் எதுவும் சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பயணிப்பதில்லை. கருத்துகள் மனித வாழ்வியல் சார்ந்து பிறக்கும் போது, அதை நடைமுறையுடன் மீளப் பொருத்தாத வரை, கருத்துக்கள் சமூக இயக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் கருத்துகளல்ல, அது நடைமுறைத் தத்துவமாகும். அதுபோல் வெறும் வரட்டுவாதமல்ல, மாறாக நடைமுறைக்குரிய தத்துவம். இது உலகை மாற்றியமைக்கும் கோட்பாடாகும். கருத்துக்களை வெறும் விவாதத்துக்குரிய எல்லைக்குள் முடக்குவது, அதை வாழும் சூழலுக்கும் தனக்கு ஏற்ப தகமைத்துக் கொண்டு, கருத்தை வெறும் கருத்தாக நடைமுறையில் இருந்து பிரிப்பது புரட்சியாளனின் அரசியலல்ல.
Read more...
|
Last Updated ( Thursday, 30 August 2012 19:39 )
|
|
Wednesday, 29 August 2012
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 29 August 2012 10:31
அரசியல்_சமூகம்
/ அகிலன்
|
பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.
தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்சங்களில் இருந்து ஆராயப்பட்டது. உலகில் முதலில் தோன்றியது பருப்பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஓர் அடிப்படை அம்சமாகும். உலகம் அறியப்படக் கூடியதா? மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச்சென்று அதன் விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு,… "உலகம் அறியப்படக் கூடியதே" என தத்துவஞானிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் இவ்வுலகு அறியப்படக்கூடிய ஒன்றல்ல என வாதிட்டவர்களும் இருந்தனர். இவர்களை இருவகை கொண்டு அன்றைய மக்களின் தத்துவஞானம் அதை உலகிற்கு சாட்சியமாக்கிற்று.
Read more...
|
Last Updated ( Wednesday, 29 August 2012 10:34 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 27 August 2012 13:45
பி.இரயாகரன் - சமர்
/ 2012
|
பொதுவாக புலியெதிர்ப்பு அரசியல் குறித்து மட்டும் தான், இந்தத் தவறான புரிதல் இன்று பொதுவானதாகக் காணப்படுகின்றது. அரசு - புலி இரண்டையும் எதிர்க்கின்ற பிரிவிலும் கூட, இதே தவறான அரசியல் போக்கு தான் காணப்படுகின்றது. புலியெதிர்ப்பின் அரசியல் சாரம் எப்படி ஜனநாயகத்தை மட்டும் கொண்டு இயங்குகின்றதோ, அதே ஜனநாயகத்தைக் கொண்டு அரசு – புலி எதிர்ப்பு அரசியலும் இயங்குகின்றது. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்று புலியை மட்டும் எதிர்க்கின்றது, மற்றது அரசு – புலி இரண்டையும் எதிர்க்கின்றது. இதற்கு அப்பால், இவர்களுக்கிடையிலான அரசியல்ரீதியாக வேறுபாடு தெளிவாக வெளிப்படுவதில்லை.
Read more...
|
Last Updated ( Monday, 27 August 2012 13:52 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 26 August 2012 08:12
பி.இரயாகரன் - சமர்
/ 2012
|
இதில் உள்ள அரசியல் மற்றும் நடைமுறை வேறுபாட்டை தெளிவாக பிரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்;. இன நல்லுறவு ஊடாக வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்கப் போராட்டம் ஊடாக இன இனநல்லுறவா என்பதை அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தி வேறுபடுத்திக் கொள்ளவேண்டும். சுயநிர்ணயம் முன்வைக்கும் இன ஐக்கியம் என்பது, இனங்களுக்கு இடையில் நல்வுறவுகளை ஏற்படுத்துவதல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் ஊடான வர்க்க ரீதியான ஐக்கியத்தையும், அது சார்ந்த இன நல்லுறவையும் ஏற்படுத்துவதுதான்.
Read more...
|
Last Updated ( Monday, 27 August 2012 07:24 )
|
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 26 August 2012 07:59
அரசியல்_சமூகம்
/ சபேசன் - கனடா
|
கருமையம் அமைப்பு சார்பாக அனைவருக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்கள்
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கிறோம். கருமையம் ஒரு நாடகம் சார்ந்த அமைப்பாக வெளியில் தெரிந்த போதிலும் உண்மையில் நாம் அரசியல் சார்ந்த கலை இலக்கியம் அமைப்பு, சமுக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்குரலாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எமக்கு ஏற்கனவே நாடகத்துறையுடன் இருந்த அனுபவம் காரணமாக நாடகத்துறைக்கூடக சற்றுகூடுதலாக செயற்பட முனைந்தமை தான் இந்தப் பெயர் வருவதற்குக் காரணம்.
இன்று இதற்கான அதாவது இந்த கூட்டத்திற்கான அவசியம் என்ன?
Read more...
|
Last Updated ( Sunday, 26 August 2012 16:14 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 25 August 2012 19:25
பி.இரயாகரன் - சமர்
/ 2012
|
"போராட்டத்தின்" பெயரில், "இடதுசாரியத்தின்" பெயரில், "முற்போக்கின்" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது தனித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.
இந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Saturday, 25 August 2012 19:30 )
|
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 25 August 2012 05:09
அரசியல்_சமூகம்
/ நேசன்
|
"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.
இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.
கொழும்பில் அமைந்திருந்த சோவியத் கலாச்சார நிலையத்துக்கு சென்றிருந்த நான் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என்பதால் நுகேகொட என்னுமிடத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அறைக்குள் இருந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குள்ளாகவே எனது பெயரை அழைத்தவாறு வீட்டின் உரிமையாளர் அறைக்கதவைத் தட்டினார்.
Read more...
|
Last Updated ( Saturday, 25 August 2012 13:00 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 24 August 2012 15:29
அரசியல்_சமூகம்
/ சுஜீவன்
|
எழுக தலைமுறையே
நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள்
நித்தம் வலியைச் சுமப்பவர்கள்
வதையோடு வாழ்பவர்கள்
Read more...
|
Last Updated ( Friday, 24 August 2012 15:31 )
|
|
Wednesday, 22 August 2012
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 22 August 2012 11:25
அரசியல்_சமூகம்
/ சுஜீவன்
|
உலக சமாதான சட்டப்புத்தகத்தில்
சிறிலங்கா வெற்றி கொண்டு விட்டது
கோத்தபாயவின் யுத்தவெறி
அவமானப்பட்டியலில்
வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது
Read more...
|
Last Updated ( Wednesday, 22 August 2012 11:28 )
|
|
Page 1 of 7
|