Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
November 2008

Sunday, 30 November 2008

அநுராதபுரப் படுகொலை மே 14 1985 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 30 November 2008 21:39
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்-இலங்கை(ஒளி)

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில்
மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.

Read more...
Last Updated ( Friday, 03 June 2011 15:31 )

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா? PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 30 November 2008 17:39
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.

Read more...
Last Updated ( Sunday, 30 November 2008 17:44 )

இந்து பயங்கரவாதம் தான், பம்பாய் தாக்குதலை (வழி)நடத்தியுள்ளது. PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 30 November 2008 12:55
பி.இரயாகரன் - சமர் / 2008

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள், இந்து பயங்கரவாத அடையாளங்களை  தரித்திருந்தனரே, ஏன்!?

 

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள (முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம் மூலம்), இந்து பயங்கரவாத அடையாளங்களையே தம் கவசமாக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தான் மிக வெற்றிகரமான, முழு உலகை அதிரவைத்த ஒரு தாக்குதலை அவர்கள் இலகுவாக நடத்த முடிந்தது.

Read more...
Last Updated ( Sunday, 30 November 2008 13:16 )

மனித படுகொலைகளைக் கண்டு ரசிப்பவர்கள் தான், பம்பாய் மரணத்தை கண்டு புலம்புகின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 30 November 2008 10:18
பி.இரயாகரன் - சமர் / 2008

இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

Read more...
Last Updated ( Sunday, 30 November 2008 10:23 )


Saturday, 29 November 2008

தலைவரின் உரையைக்கடந்து... PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 29 November 2008 18:14
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

தேசியத் தலைவரின் மாவீரர் உரையும்,வை.கோ.அவர்களின் வீராவேசமும். -புரிதலுக்கான உரையாடல்.


2008 க்கான மாவீரர் தின உரையைப் பெரியவர் தந்துவிட்டார்!,திரு.கோபாலசாமி அவர்களும் உணர்ச்சிமிகு உரையைச் செய்து புலம் பெயர்ந்த மக்களை மேலும் போராட்டத்தோடும்,புலிகளோடும் ஈழத்தைக் கனவுகாணவும்,நிதிப் பங்களிப்புச் செய்யவும் அவர் தனது பங்களிப்பைச் செய்துவிட்டார்.எனினும்,சிங்கள அரசு போரை நிறுத்தி மக்களினது நலன்களைக் கவனிக்கப் போறதில்லை!அது,இந்திய மத்திய அரசின் சொல்படி யுத்தத்தில் முனைப்புற்றுப் புலிகளைச் சொல்லித் தமிழர்களைக் கொன்று குவித்துவருகிறது.

Read more...
Last Updated ( Saturday, 29 November 2008 18:20 )

புலித் தலைவர் பிரபாகரன் சுதப்பி விட்டார் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 29 November 2008 15:14
அரசியல்_சமூகம் / சிறி

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Read more...
Last Updated ( Saturday, 29 November 2008 15:21 )


Friday, 28 November 2008

திட்டமிட்ட பொருளாதார கொள்கையில் கூட திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:48
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம் உள்ளுர் தேசிய செல்வங்களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள்ளையாகும்.

 

இந்த வகையில் வாழைச்சேனையிலிருந்த காகிதத் தொழிற்சாலை மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இங்கு தொழில் புரியும் 1350 தமிழ், முஸ்லீம் ஊழியர்கள் தமது வேலையை இழக்கும் அபாயத்திலுள்ளனர்.

 

தமிழ்பகுதியிலிருந்த மூன்று முக்கிய பெரிய தொழிற்சாலைகளான பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பன மூடப்பட்ட நிலையிலும் இறுதியில் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை மூடிவிட இனவாத சிங்கள அரசு முயல்கின்றது.

 

40 வருட பழமைவாய்ந்த இந்த தொழிற்சாலையை திட்டமிட்ட இனவாத சூழ்ச்சியில் கடந்தகாலத்தில் நலினப்படுத்தப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த பழைய இயந்திரங்களின் மூலம் ஊழியர்களின் சொந்த முயற்சியில் உச்ச உற்பத்தியைப் பெற்று வந்தனர்.

 

இந்த தொழிற்சாலையைக் கொண்டு கிடைக்கப்பெற்ற வருமானத்தில் கட்டப்பட்ட எம்பிலிபிட்டிய காகித ஆலை நட்டத்தில் இயங்கிய காலத்திலும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை கைகொடுத்துப் பாதுகாத்தது.

 

இன்று திறந்த பொருளாதாரக் கொள்ளையின் ஒரு வடிவமான உலகமயமாதலின் தொடர்ச்சியில் காகிதம் மீதான சுங்க தீர்வையை அரசு ரத்துச் செய்வதன் மூலம் வெளிநாட்டுக் காகிதம் மலிவு விலையில் வெள்ளமாக இலங்கைக்குள் பாய்கிறது.

 

இதனால் அரச நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்கள் வாழைச்சேனைக் காகிதத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் வாழைச்சேனைக் காகித ஆலையில் உற்பத்தியான 3500 தொன் காகிதம் தேங்கி பாதுகாக்க வசதியின்றியுள்ளதுடன், மீள் உற்பத்தியாக சேமித்த காகிதமும் தேங்கத் தொடங்கியுள்ளது. மீள் உற்பத்தியைத் தடுக்குமாயின் அல்லது வெளிநாட்டு உற்பத்திக்கு மலிவு விலையில் செல்லுமாயின் இதைச் சேகரிக்கும் வறுமையிலுள்ள குடும்பங்கள் மேலும் பட்டினிச் சாவுக்கு நகர்த்தப்படுவர்.

 

இன்று உலகவங்கியின் கட்டளையை நிறைவு செய்ய அதுவும் அதைத் தமிழ்ப்பகுதியில் நடத்திவிட இனவாத அரசு தனது சிங்கள மேலாதிக்க நிலையில் நின்று செயல்படுகிறது. இன்று இலங்கையில் தேவை தமிழ் சிங்கள் மக்கள் இணைந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகும். இதை விடுத்து தமிழ்ப்பகுதி என கண் மூடின் மறுபுறம் இருப்பதை இழப்பதற்கு முதல்காலடி எடுத்து வைப்பதாக இருக்கும்.

 

Read more...

உங்களுடன் சமர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:46
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

இன்றைய தமிழீழப் போராட்டத்தின் தேக்கநிலையும், இந் நிலைக்கு உரிமையுடைய பாசிச சக்திகளின் வளர்ச்சியை முறியடித்து ஒரு சரியான போராட்டத்தை முன்னெடுத்து நெறிப்படுத்த ஒரு தலைமையின் தேவை நம்மெல்லார் முன்னுமுள்ளது. இத் தேவையின் பிரதிபலிப்பாகவே ஜரோப்பிய நாடுகளில் பல சஞ்சிகைகளும், தனிநபர் கருத்துக்களும் வெளிவருகின்றன.

 

அனேகமான இச்சஞ்சிகைகளின் வெளியீட்டாளர்களும், தனிநபர்களும் கடந்தகாலப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் பங்கு கொண்டவர்களாகவே உள்ளனர்.

 

இவர்களது தேடலும், விமர்சனங்களும் போராட்டத்தை விளங்கப்படுத்தி, நெறிப்படுத்த வேண்டும் என்பதே, சமூக நோக்கம் கொண்டவர்கள் அனைவரினதும் விருப்பபாகும்.

 

இன்று வெளிவரும் கருத்துக்கள் தொடர்பாகவும், குறித்த கருத்துக்களைச் சொல்பவர்கள் தொடர்பாகவும் சமர் கடந்த இதழ்களில் கருத்துச் சொல்ல முற்பட்டது. இக் கருத்துக்கள் தொடர்பாக விமர்சித்த பலரில் ஒரு சாரார் எம்முடன் கடந்தகாலங்களில் கொண்டிருந்த சாதாரண உறவைக் கூடத் துண்டித்துக் கொண்டனர். சமர் பற்றி ஆதாரமற்ற வகையில் வதந்திகளைப் பரப்பும் சக்திகளில் கணிசமான பங்கு மேற்குறிப்பிட்ட நபர்களுக்குண்டு. இவை பற்றி சமரின் நிலை யாதெனில், குறித்த எந்த விமர்சனத்தையோ வதந்தியையோ, எழுத்தில் முன்வைக்காது வெறும் திண்ணைப் பேச்சோடே முடிந்து விடுவது ஆரோக்கியமான விமர்சனமல்ல என்பது மாத்திரமல்லாமல் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுமாகும். சமர் தொடர்பான எக்கருத்தையும் நாம் திறந்த மனத்துடன் விமர்சனம், சுயவிமர்சனத்துடன் அணுகத் தயாராகவுள்ளோம்.

 

கடந்ததகாலத்தில் எமது விமர்சனங்கள் தொடர்பான எமது நிலையை தெளிவுபடுத்துவது அவசியமானது. எதிர்காலத்தில் கருத்துக் கூறுபவர்கள் யாராக இருப்பினும் எமது விமர்சன அணுகுமுறையைச் செய்யத் தவறின் ஒரு சரியான தலைமையை உருவாக்க முடியாதென திட்டவட்டமாக நாம் கூறுகின்றோம். இன்று வருங்காலப் போராட்டத்தை தனிநபர்களின் கடந்தகாலம் அத்துடன் இன்றைய அவர்களின் கருத்துக்களையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். இவ் விமர்சனத்தை மறுக்க அல்லது அவர்கள் தொடர்பான விமர்சனத்தை ஜீரணிக்க மறுப்பதென்பது ஒரு சரியான அரசியல் தலைமைக்கப்பால் ஒரு புலியையோ, அல்லது ஒரு சில பிரமுகர்களையோ உருவாக்கவே முயல்பவர்களாகவே இருப்பார்கள். குறித்த கருத்துக்கள் தொடர்பாக அக் கருத்தின் முழுப்பக்கத்தைவும் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லல் வேண்டும். அப்படிச் சொல்லும் போது அவை நாகரீகமில்லை, முற்போக்குக்குள் இப்படிப்பட்ட விவாதமா? இது புலிகளைப் பலப்படுத்தவே உதவும், இது பத்திரிகை தர்மமில்லை, இது முத்திரை குத்தல் ....... இப்படிச் சொல்லப்படும் எந்த வாதமும் விமர்சனத்தை தடுக்கும் செயற்பாடு மாத்திரம் அல்லாமல் ஒரு ஆரோக்கியமான சரியான தலைமையின் உருவாக்கத்தை தடுக்க முயலும் செயலுமாகும். ஒரு கருத்தின் மீது பிழையான விமர்சனம் வைப்பின் அதைக் கூட விமர்சிக்கும் உரிமையுண்டு. விமர்சனமென்பது சமூக இறுக்கத்துடன், ஆதாரங்களுடன் அமைவதாகயிருக்க வேண்டும். அப்போது தான் ஒரு சரியான தலைமை உருவாகும்.

 

 

Read more...

வானரங்களின் பாசிசம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:44
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

நாம் எதிர்பார்த்தது போல் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லீங்களின் பாரம்பரியம் மிக்க பாபர் மசூதியை, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிசத், பஜ் ரங்தத் ஆகிய பிழைப்புவாத அரசியல் மத வெறி கும்பல்களால் பாமர உழைக்கும் மக்கள் வெறியூட்டப்பட்டு மசூதி உடைப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மனித நாகரீகத்துக்கு சவாலாக நடத்தபட்ட இச்சம்பவத்தில் ஆயிரத்தி நூறு மனித உயிர்கட்கு அதிகமாகவும், இது சம்மந்தமாக ஏற்கனவே தொடர்ந்து வந்த தாக்குதலில் 3000 மனித உயிர்கட்கு அதிகமாகவும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

 

வறுமை, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசிய தேவைகள் புறக்கணிப்பு, இனவொடுக்குமுறை, பொலிஸ் அடக்குமுறை ஆகிய முரண்பாடுகளால் வர்க்கரீதியில் அணிதிரண்டு வரும் உழைக்கும் பாமர மக்களை நிலபிரபுத்துவ, தரகுமுதலாளித்துவ சக்திகள் பந்தாடி கூறுபோடும் பிழைப்புவாத அரசியலில் இது ஓர் அங்கம் மாத்திரமே.

 

ஆளும் காங்கிரஸ் பிழைப்புவாதிகள் மசூதி கட்டித் தரப்படும் என அறிவித்ததை நோக்குமிடத்து, எதிர்காலத்தில் தொடரவிருக்கும் பேச்சுவார்தையிலோ உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலமோ, மசூதியையும் ராமர் கோயிலையும் ஒரே நேரத்தில் அமைத்து சமன் செய்ய முயற்சிக்கலாம். எது எப்படி அமைந்த போதிலும் இராமர் கோயில் அமைவது உறுதியாகியுள்ளது. இதுகாலவரையிலும் சிறுபான்மை முஸ்லீம்கள் ஆங்காங்கே மதத்தின் பெயரரல் தாக்கபட்டபோதிலும், அயோத்தியின் அதிரடி நடவடிக்கை மூலம் போலிமதச்சார்பின்மை முழு உலகத்திற்க்கும் அம்பலப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு பிணைந்துள்ள மதம் மக்களின் அழிவுகளை மாத்திரமே காலத்திற்கு காலம் நமக்கு பெற்றுத் தந்துள்ளது.

 

நாட்டைச் சூறையாடவும், மக்களின்; வாழ்வை அபகரிப்பதற்கும் புராண கால இராமரை நாடிநிற்கும் இப் பிழைப்புவாதிகளுக்கு உழைக்கும் மக்களால் மாத்திரமே சரியான தண்டனை வழங்கமுடியும்.

 

 

Read more...

வாசகர்களும் நாங்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:39
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

உங்கள் சமர் 5-6- வாசித்தேன். அதில் நீங்கள் புலிகள் மீது வைத்துள்ள கருத்துக்கள் நீங்கள் புலிகள் மீது கொண்டுள்ள தெளிவு புரிகின்றது. அவர்கள் பாசிச தலைமையே. அவர்கள் தேசிய விடுதலை அமைப்பு என்பது தவறானது. ஆனால் உங்கள் விமர்சனங்கள் யாவும் தேவையானதே. ஆனால் உங்கள் விமர்சனங்கள் கடும் போக்கை கொண்டவையாகவுள்ளது. குறிப்பாக தோழமை சஞ்சிகைகளான மனிதம், உயிர்ப்பு மீதான விமர்சனங்கள்.

விமர்சனம், சுயவிமர்சனம் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது முத்திரை குத்துவது போல் அமையக் கூடாது. திரிபுவாதிகள் என்ற நிலையில் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். இனியாவது முற்போக்குச் சக்திகள் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும். இல்லையேல் அது புலிகளை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

அடுத்து உங்கள் தோழர் நாவலன் மீது நீங்கள் வைத்துள்ள விமர்சனம் எந்த ஓர் சூழ்நிலையிலும் விமர்சனம் வைக்கப்பட வேண்டியதே. அது உட்கட்சிக்குள் உட்கட்சி விமர்சனமாய் அமைய வேண்டும். அதை விடுத்து உங்கள் சஞ்சிகையில் விமர்சிப்பது கடுமையான ஆபத்து. இன்று உங்கள் எதிரிகள் நிறைய இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந் நிலையில் அவரை விமர்சிப்பது என்பது அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமையும். நீங்கள் எவரையும் வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சிகள் எடுக்காதிருப்பது நன்று.

மேலும், தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் மீது நீங்கள் விமர்சனம் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் அவர்களின் மத்தியகுழு உறுப்பினர் மீது வைத்துள்ள தனிநபர் குண நலன்களை விமர்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விடயம். என்.எல்.எவ்.டி-யினர் புத்தகத்தைப் புரட்சியாக்க முனைந்தவர்கள் என்பது ஒரளவு உண்மை தான் ஆனாலும் அவர்கள் நாட்டில் மக்கள் மத்தியில் (கூலி விவசாயிகள், நகர சுத்திகரிப்பாளர்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் நசுக்கப்பட்ட மக்கள் மத்தியில்) இறங்கி அரசியல் வேலைகளில் ஈடுபட்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனாலும் இவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் கவனத்தில் எடுத்து ஆராயப்பட வேண்டியதே. இவர்களது நகர்வும் மிகவும் இரகசியமாகவும் இறுக்கமாயும் இருந்தும் கூட எதிர்ப் புரட்சியாளர்களால் எப்படி முறியடிக்க முடிந்தது என்பதை கண்டறிய வேண்டுமே தவிர தனிநபர்களை விமர்சிப்பது சரியான ஆபத்தான முயற்சியே என கவலைப்பட வேண்டியுள்ளது. முற்போக்கு அணியின் முகாமுக்குள் ஆராயப்பட வேண்டியதே ஒழிய நடு வீதியில் அல்ல.

87 களில் அழிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கச் சிந்தனையை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் உங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

லோகன்-சுவிஸ்

 

இதே போன்ற கருத்துப்பட்ட ஒரு கடிதம் இலங்கையிலிருந்து கிடைக்கப் பெற்றோம். அதற்கான விமர்சனத்தையும் உள்ளடக்கியதே கீழுள்ள பதில்.

 

ஆசிரியர்குழு

 

உங்கள் விமர்சனங்கள் பொதுப்படையாக இன்று ஜரோப்பாவிலும், நாட்டிலும் உள்ள முற்போக்குச் சக்திகள் மீதான எமது விமர்சனம் தொடர்பானதே. முற்போக்குச் சக்திகள் தொடர்பான எமது பார்வை உங்கள் பார்வையை விட மாறுபட்டது. இன்று முற்போக்குச் சக்திகள் என்பது புலிகளுக்கு எதிராகவுள்ள அனைவரையும் உள்ளடக்கியதே. இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை ஆதரிப்பவர்கள் கூட இலைமறை காயாக மறைந்தே உள்ளனர். அவர்களை விடுத்து மிகுதியாகவுள்ள அனைவரும் ஓர் அணியாக நீங்கள் உட்பட சிலர் சுட்டிக்காட்டுகிறிர்கள். இந ;நிலைமை என்பது 1983 இல் இலங்கையரசுக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் தம் மீதான விமர்சனங்களை நிராகரிக்கக் கோரியது போன்றதே. அதன் விளைவு இறுதியில் இன்று நாம் பாசிசத்திற்க்குள் பலியானதிற்கு இட:டுச் சென்றது. இக் கோரிக்கை 1ம் உலகயுத்த காலத்தில் 2ம் அகிலத்தைச் சேர்ந்தோர் தந்தை நாட்டை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிப் புரட்சியை கை விட்டது போன்றதே. இன்று வெறும் புலி எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் அணிதிரட்டப்படும் எந்த அமைப்பும் மீண்டும் ஒரு புலியை உருவாக்கும்.

 

இதற்கு எதிர்மறையாக ஒவ்வொரு நபரின் ஒவ்வொரு கருத்தும் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். நீங்கள் உடன்படலாம். இதை பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்வது என்பதே இங்குள்ள பிரச்சனை. இன்று சமரோ அல்லது வேறு எந்த சஞ்சிகையோ தான் தமக்கிடையில் ஒரு கட்சியாக இல்லை. இவர்களுக்கிடையிலான விமர்சனம் என்பது ஒர் அமைப்பு வடிவம் இல்லாத நிலையில் பகிரங்கமாக வெளிவருவது அவசியமானது. மற்றும் இன்று எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் செயற்பட முற்படும் ஒவ்வொரு நபரும் எதிர்காலத்தில் ஒரு கட்சியை கட்ட முனைகின்றனர். அந்த வகையில் அனைத்துக் கருத்துக்களும் எந்த விதிவிலக்கு இன்றி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரியும் வகையில் ஒளிவு மறைவின்றி இருக்கும் போது மட்டுமே எதிர்காலத்தில் உருவாகும் எந்த அமைப்பும் விமர்சனம், சுயவிமர்சனத்திற்குட்பட்டு உருவாகும். இந்த உருவாக்கத்தில் முன் நிற்கும் ஒவ்வொரு தனிநபருடைய கடந்த கால அரசியல் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சந்தர்ப்பவாதமும், திரிபுவாதமும் பின்னிருந்தே அமைப்பை அழிக்கும். இதை சோவியத் முதல் சீனா வரை உள்ளிருந்த கம்யூனிஸ்ட்கள் எனச் சொன்னோர் மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டதை அனுபவ ரீதியாக நாம் கண்டுள்ளோம். ஆகவே நாம் எந்த விதிவிலக்குமுன்றி ஒவ்வொரு தனிநபரையும், எல்லாக் கருத்துக்களையும் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்.


எமது விமர்சனம் தனிநபர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற உங்கள் கருத்து தொடர்பாக ஆராயும் போது இன்று கடந்த கால அரசியலில் ஈடுபட்ட அனைவரும் எதிரிக்கு அம்பலப்பட்டே உள்ளனர். முற்போக்குச் சக்திகளுக்கு தெரிந்த விடயங்களை விட எதிரி கூடுதலாக தெரிந்தே வைத்துள்ளான். இந்த வகையில் என்.எல்.எவ்.டி., பி.எல்.எவ்.டி. தீப்பொறி.......மற்றும் தனிநபர்கள் யாரும் தப்பிக்கவில்லை. இதில் இவர்கள் மீதான விமர்சனங்கள் முன் வரும் போது விமர்சனத்தை எதிர்கொள்ள திராணியற்ற சிலர் பாதுகாப்பைக் காரணம் காட்டுகின்றனர். எமது விமர்சனம் இன்று எதிரியுடன் ஒரே தளத்தில் நின்று போராடும் யாரையும் காட்டிக்கொடுக்கும் வகையில் அமையவில்லை. எதிரியின் தளத்தை விட்டு விலகி பகிரங்கமாக அரசியல் நடத்துபவர்கள் மீதும் மற்றும் தம் மீதான சுயவிமர்சனத்தை முற்போக்கு சக்திகள் மத்தியில் செய்ய மறுத்து தொடரும் அரசியல் செயற்பாட்டின் பின்பே நாம் பகிரங்க விமர்சனத்தை முன் வைக்கிறோம்.


முத்திரை குத்தல் என்ற விடயம் தொடர்பாக நாம் மனிதம் மீது வைத்த விமர்சனம் முத்திரை குத்தல் அல்ல. அதை மனிதம் வேண்டும் என்று சொல்லி தமது திரிபைப் பாதுகாக்க முயலலாம். உண்மையில் கருத்துக்களை திரிப்பதை திரிபு என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது. வேண்டுமென்றால் முற்போக்கு கருத்துக்களில் இதுவும் ஒன்றெனச் சொல்வதா? முத்திரை குத்தல் என்பது, வைக்கப்படும் கருத்தின் மீது விமர்சனம் வைக்காது பொதுப்போக்காகச் சொல்வதே. அதாவது விமர்சனங்களிலிருந்து தப்ப, கருத்துப்பலமின்றி கருத்தைச் சொல்பவரும், கருத்தை எதிர் கொள்பவரும் கையாளும் வழிமுறைகளே. நாம் மனிதத்தின் கட்டுரையின் மீது (அதாவது கரிகாலன் கட்டுரை) வரிக்கு வரி எடுத்து எப்படி திரிக்கப்பட்டு திணிக்க முயல்கிறார்கள் எனச் சுட்டிக ;காட்டினோம். இதை மறுக்கும் உரிமை விமர்சகர்களுக்குண்டு. அதுவும் பொதுப்படையாகவல்லாமல் எப்படியென விளங்கப்படுத்துவதினூடாகவே.


மற்றும் என்.எல்.எவ்.டி.யின் வரலாறு தொடர்ச்சியாக வெளிவருகிறது. அதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களும் முன்வைக்கப்படும். மற்றும் என்.எல்.எவ்.டி.யின் மத்திய குழுவின் தனிநபர் மீதான விமர்சனம் அவசியமானது. என்.எல்.எவ்.டியின் வாழ்வில் அவை காத்திரமான பங்கு வகித்துள்ளது. இவை தொடரும் கட்டுரைகளில் புரியும். கட்டுரையை வாசிக்கும் அதேநேரம் மத்தியகுழு உறுப்பினர்களின் பாத்திரத்தை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், எதிர்கால அமைப்பை உருவாக்க என்.எல்.எவ்.டி யின் கடந்தகால மத்தியகுழு உறுப்பினர்கள் செயற்பட முனையும் இன்றைய நிலையில் முற்போக்குச் சக்திகள் அவர்களிடம் அவர்கள் தொடர்பான விமர்சனத்தை கேட்டுக் கொள்ளவும் எதிர்காலத்தில் உருவாகும் அமைப்பில் அவர்களின் கடந்த கால தவறுகள் உருவாகாமல் விழிப்புடன் ஒவ்வொரு ஊழியருமிருக்க இவ் விமர்சனம் உதவும். புதிய ஒரு அனுபத்தின் பின் சில அழிவுகளின் பின் இதே விமர்சனத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? நாம் இன்று அனைத்தையும் பகிரங்கமாக எந்த விதிவிலக்குமின்றி விமர்சிக்க வேண்டும். விமர்சனத்தை எதிர்கொள்பவர்கள் நேர்மையானவராக இருந்தால் திறந்த மனத்துடன் எதற்கும் அஞ்சாது விமர்சனம், சுயவிமர்சனத்தை முன்வைக்க வேண்டும். இதுவே எதிpர்கால புரட்சிக்கான ஓர் அமைப்பின் உயிரோட்டமுள்ள நடவடிக்கை மட்டுமல்ல நம்பிக்கையுமாகும்.

 

ஆசிரியர்குழு

 

Read more...

Page 1 of 21