2020 தேர்தல் குறித்து, யாழ் மையவாத சிந்தனையானது முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றது. எது பாதை என்று குழம்புகின்றது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது.
தமிழ் இனவாதமும், பிரதேசவாதமும், மதவாதமும், சாதியமும் பேசுகின்ற தங்கள் மனித விரோத வக்கிரத்துக்கு வாக்களிக்கக் கோருகின்றனர். மறுபுறம் ஒடுக்குபவனுடன் சேர்ந்து அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று கூறி, ஒடுக்கப்பட்டவன் மற்றொருவனுக்கு அடிமையாக இருக்க வாக்களிக்குமாறு கோருகின்றது. இன்று தேர்தல் வெற்றிக் கனவுகளுடன் பயணிக்கின்றவர்களின் அரசியல் சாரம் இதுதான்.
தமிழ் இனவாதிகள் கடந்த 70 வருடமாக முன்னிறுத்தி பயணித்த அதே இனவாதக் கனவுகளுடன் - தீர்வுகளை கண்டடைந்ததான போலிக் பிரமிப்புகளுடன், கொழுப்பேறிய மண்டைக் கனத்துடன் கம்பு சுத்துகின்றனர். வழமை போல் இம்முறையும் பெற்றி பெற்று, தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற தங்கள் அதிகாரத்தை, மறுபடியும் கோருகின்றனர்.
ஒடுக்கப்பபட்ட தேசம், தேசியத்தின் அழிவைத் தவிர, வேறு எதையும் இந்த யாழ் மையவாத இனவாதச் சிந்தனைமுறை - தேர்தல் மூலம் கடந்த காலத்தில் உருவாக்கவில்லை. தேர்தல் அரசியல் முதல் ஆயுதப் போராட்டம் வரை, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதே ஒழிய, விடுதலைக்கு வழிகாட்டியது கிடையாது. விடுதலை என்பது இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், சாதி வாதம் மூலம் சாத்தியமில்லை.
Read more...
|