Wed05012024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 05 July 2020
"முன்போல் சாதி ஒடுக்குமுறையில்லை" PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 05 July 2020 12:49
பி.இரயாகரன் - சமர் / 2020

"முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" முதலாளித்துவ வெள்ளாளியத்தால் இப்படித்தான் புலம்ப முடியும். முன்போல் எதுதான் இருக்கின்றது!? எல்லாம் இயங்கிக் கொண்டு மாறிக்கொண்டு இருக்கின்றது. இதுதான் இயங்கியல் விதி, இது சாதிக்கு விதிவிலக்கல்ல. இதை மறுக்கிறவர்கள், நாங்கள் முன்போல் உங்களை ஒடுக்குவதில்லை என்று கூறுகின்றதன் பொருள், நவீன வெள்ளாளிய ஒடுக்குமுறை பூசிமெழுகுவதைத் தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவம், ஆணாதிக்கம், நிறவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை .. என எதுவும் முன்போல் இருப்பதில்லை. இதனால் இதை இல்லை என்று கூற ஒருவன் முற்படுவானேயானால், அவன் ஒடுக்குமுறையாளனாக இருக்கின்றான் என்பதுதான் பொருள்.

இது இன்று சாதி எப்படி, எங்கே இயங்குகின்றது என்பதைக் காட்டு என்று கேட்பதற்கு நிகரானது. பாரம்பரிய சாதிய சுடலையில் தான் எரிப்போம் என்பதும், யார் தேர் தடத்தை பிடிக்கலாம் என்பதை வரையறுப்பதாகட்டும், யார் பூசாரி என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயில் எங்கே - எது வரை யார் நுழைய முடியும் என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயிலில் பெண்களின் எல்லை என்ன என்பதை வரையறுக்கும் ஒழுக்க விதியாகட்டும், சேட்டைக் கழற்று - செருப்பை கழற்று என்ற அதிகாரமாகட்டும் இவற்றின் பின்னால் சாதிய அதிகாரமும் - ஒடுக்குமுறையுமே இயங்குகின்றது. இது இன்று வெளிப்படையாகவும் - மறைமுகமாகவும் இயங்குகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 05 July 2020 18:03 )