இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தே இன முரண்பாடுகளை கழைய முடியும் என்ற அரசியல் உண்மை இன்று அரசியல் ரீதியாக முன்னுக்கு வருகின்றது. அதேநேரம் எல்லாவிதமான இனவாத குறுந்தேசியவாத அரசியல் போக்குகளும் அம்பலமாகி முட்டுச்சந்திக்கு வருகின்றது.
இனவாதமும் குறுந்தேசியவாதமும் முந்தைய வியாபாரிகளினதும் பிழைப்புவாதிகளினதும் தொங்கு சதையாக எஞ்சிக் கிடக்கின்றது. இப்படி வலதுசாரியக் கூறுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு விட இடதுசாரிய வேடம் போட்டோர், சீரழிந்த தேசியவாதத்தை நடைமுறையற்ற "சுயநிர்ணயம்" என்ற வெற்றுக் கோசம் மூலம் மூடிமறைத்து மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர். இந்த வகையில் இன்று தனிநபர்கள் தொடக்கம் குறுங்குழுக்கள் வரை "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்திக் கொண்டு இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தங்களைப் போன்றோரை அணிதிரட்ட முற்படுகின்றனர்.
Read more...
|