இப்ப ஆக்களை விட வாகனங்கள் தான் கூடிப்போச்சு. சும்மா நாட்களிலேயே கார்கள் விட இடமில்லை. அதுவும் சனிக்கிழமையெண்டால் சொல்லவா வேண்டும்...? சுற்றிச் சுற்றிக் களைச்ச எனக்கு கடைசியிலே ஓர் இடம் கிடைச்சது.
காரை விட்ட இடத்துக்கு முன்னால் ஒரு சின்ன மரக்கூடல், அதுக்கு கீழே இருக்க நாலைந்து வாங்குகள். அதிலேயிருந்து சில பேர் வைனும், பியரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சில பேர் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.
வேலையில்லாத ஆக்கள்;, குடிகாரர்கள், குடும்பத்தைத் துலைத்தவர்கள், வாழ்க்கையை வெறுத்தவர்கள், நிரந்தர வீடில்லாதவர்கள், என்று பல தரப்பட்டவர்கள், இப்படிக் கூடி சேர்ந்து குடிப்பது இங்கே ஒரு வழக்கம், இவர்கள் எதிலும் சுதந்திரமானவர்கள் சந்தோசமானவர்கள் எண்டும் சொல்லலாம்.
Read more...
|