இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்காண்டு கால வகுப்புகளை மூன்றாண்டு காலமாக குறைத்தமைக்கு எதிராகவும் பல்கலைகழக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்பு கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் கண்டுகொள்ளா கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து பல்கலைகழக மாணவர்கள் 16ஆம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு விட்டு கலைந்து சென்ற மாணவர்களை சிவில் உடை தரித்த பொலிசார் அடாத்தான முறையில் கைது செயத்துடன் கண்மூடித்தனமாக தாக்கி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அரசாங்கம் பல்கலைகழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் 17ஆம் திகதி 'நிப்போன் ஹேட்டலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். அதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களின் சாரம்சம்:
Read more...
|