தனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்க்கையை உருவாக்க முனைகின்றனர்.
சுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்... கொண்ட இன்றைய வாழ்க்கை முறை ஏற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்கையையும் உருவாக்கின்றது.
Read more...
|