Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 21 April 2014
குறுங்குழுவாதமும், தனிநபர்வாதமும் சமூகத்துக்கு எதிரானது PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 21 April 2014 07:53
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்று கொள்கைளும், நோக்கங்களும், நடைமுறைகளுமற்ற, உதிரி வர்க்கங்களைக் கொண்டு குறுங்குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதேயடிப்படையிலேயே தனிநபர்கள் கூட அரசியல் குதர்க்கங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து, தங்களை வேறுபடுத்துவதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவை அனைத்தும் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தோற்றத்துடன், அதற்கு எதிரான ஒன்றாக முனைப்பு பெற்று வருகின்றன.

 

புலி - அரசு சார்ந்த இரு பாசிசங்கள் அக்கம்பக்கமாக நிலவிய காலத்தில், தமில் பேசும் மக்கள் மத்தியில் இருந்த எல்லாவிதமான சமூக செயற்பாட்டுக் கூறுகளையும் புலிகளும் அரசும் அழித்தனர். இக்காலத்தில் நடைமுறை சார்ந்த சமூக-அரசியற் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட வர்க்க விடுதலைக்கான அரசியல் முற்றாகச் செயலிழந்து போனது. இந்த விசேடமான வரலாற்றுச் சூழலில் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் தவிர்க்க முடியாதாகவும், சில சந்தர்பங்களில் இவர்களின் இருப்புதேவையானதாகவும் தர்க்க ரீதியானதாகவும் கூட இருந்தது.

Read more...
Last Updated ( Monday, 21 April 2014 07:58 )