Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 15 April 2014
ஆளும் வர்க்கத்துக்கு இனவாதம் மட்டுமல்ல, புலியும் தேவைப்படுகின்றது! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 15 April 2014 13:56
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை ஆளும் வர்க்கம் இனவாத மூலமாக மட்டும் மக்களை அடக்கியாள முடியாத நிலையில், இன்று புலி தேவைப்படுகின்றது. 30 வருடமாக புலியைக் காட்டி ஆண்டவர்கள், புலியை தோற்கடித்தன் மூலம் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு விட்டனர். பெரும்பான்மையின மக்களுக்கு எதிரியை காட்டி ஏமாற்ற முடியதா நிலையில், அவர்கள் அரசிற்கு எதிராக அணிதிரண்டு போராட எழுவதனை தவிர்க்க, மீண்டும் புலி தேவைப்படுகின்றது. அதாவது மக்கள் தமது எதிரியாக அரசைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்களுக்கு ஒரு எதிரியை உருவாக்கிக் கொடுக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் அரசு தடுமாறுகின்றது. புதிய புலி வேட்டை, இப்படித்தான் மேடையில் அரங்கேறியது.

 

இலங்கை ஆளும் வர்க்கத்தால் இன்று இதைத் தாண்டி எதையும் வழங்க முடியாது. தேர்தல் மூலம் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி கட்டமைப்பு மாறுவதில்லை. இன்றைய இலங்கை ஆட்சி அதிகார கட்டமைப்பானது இனவாதம் மதவாதத்தை அடிப்படையாக கொண்டது. எனவே ஆட்சியாளர்களை மாறுவதால் இந்த ஆட்சி அதிகார கட்டமைப்பானது ஒழித்துவிடப் போவதில்லை. உலகமயமாகிவிட்ட ஒற்றைப் பொருளாதாரக் கொள்கைக்கு மாறாக, மக்களை ஆள்வதற்கு வேறு அரசியல் தெரிவு இந்த ஆளும் வர்க்கத்திடம் இன்று கிடையாது.

 

காலனியவாதிகளிடம் அதிகாரத்தைப் பெற்ற சுதேசிகள், தொடர்ந்து இனவாதம் மூலமே மக்களைப் பிரித்தாண்டனர். இந்த அரசியலின் விளைவாகவே, புலிகள் தோன்றினர். புலி-அரசும் கையாண்ட எதிர் எதிரான இனவாத அரசியலும், அதன் இராணுவாதமும் இணைந்து பாசிசத்தை தோற்றுவித்தது. இறுதியில் புலிகள் அழிக்கப்பட்ட போதும்

Read more...
Last Updated ( Tuesday, 15 April 2014 13:59 )