Sunday, 06 April 2014
Written by தமிழரங்கம்
|
Sunday, 06 April 2014 17:11
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
/ புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
|
அது ஒரு வைத்தியக் கலாநிதியின் வீடு. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறேன். ஊதுபத்திகள் வாசத்தைப் பரப்பியபடி புகை விடுகின்றன. சந்தனமும், பன்னீரும் சேர்ந்து நறுமணம் வீசுகின்றன. காவியுடை அணிந்த ஒருவரின் படத்திற்கு முன்னால் விழுந்து கும்பிடுகிறார்கள். அவரின் படத்திலிருந்து குங்குமம் கொட்டுகிறதாம். அவர் கடவுளின் அவதாரம் என்று அம்மா சொன்னா. அவரின் தலை பொப் பாடகர் ஏ.இ.மனோகரனின் தலை போல சுருள், சுருளாக ஸ்பிரிங் தலையாக இருந்தது. குங்குமம் கொட்டுவதற்கு பதிலாக இனிப்பு கொட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதுவும் அய்ந்து சதத்திற்கு ஒன்று என்று விற்ற தோடம்பழ இனிப்பு எனப்படும் சிவப்பு நிற இனிப்பாக இருந்தால் இன்னும் நல்லது என்று நினைத்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் படத்தில் இருந்து இனிப்பு ஒருநாளும் கொட்டவில்லை. கடவுளின் அவதாரமும் கான்சர் வந்து செத்துப் போய் விட்டார்.
Read more...
|
Last Updated ( Sunday, 06 April 2014 17:14 )
|
|
|