தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் தேசியப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009 யுத்தத்தின் பின்னான காலத்தில், அப்போராட்டத்தை தொடர்வதற்கான பலவகையான அரசியல் வழிமுறைகள் புலம்பெயர் தேசங்களில் விவாதிக்கப்படுகிறன. பெரும்பான்மையான புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசியற் சிந்தனைக்கேற்ப மேற்கு ஏகாதிபத்தியநாடுகைளைச் சார்ந்து நின்று தமிழ் ஈழத்தைப் பெறுவதே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் உள்ள இடதுசாரியம் கதைக்கும் உதிரிகளும், சிறு சிறு குழுக்களும் அவர்களின் இணையங்களும் மேற்படி புலிகளின் ஆதரவாளர்களின் அரசியலை விமர்சித்த வண்ணம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பல வழிகளை முன்வைக்கின்றனர்.
Read more...
|