நீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.
Read more...
|