ஏதோ தெரியவில்லை நல்ல நிகழ்வுகளுக்காகவும், கெட்ட நிகழ்வுகளுக்காகவும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இப்ப அடிக்கடி கிடைத்து வருகின்றது. திடீரென எடுத்த முடிவின் பிரகாரம் அம்மாவின் திவசத்துக்காக போன கிழமை ஊருக்குப் போய் வரும் ஒரு பாக்கியம் கிட்டியது. ஒரு குறுகிய சில நாட்கள் தான் நின்றாலும் அங்கே என்னைத் தாக்கிய, என்னை உறுத்தி வருத்திய ஒரு விடையம் சம்பந்தமாக இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டே இதை எழுதுகிறேன்.
எங்கடை மக்களை ஒரு வகையிலும் நிமிரவிடாமல், ஏதோ சொல்ல முடியாத சுமைகளையும் துன்பங்களையும் கொடுத்து அவர்களை இன்னும் அடிமைகள் போல் அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் செய்கின்ற வேலைகளையும், விசமங்களையும் கேள்விப்பட்ட போது எங்களுடைய மக்களின் அறியாத்தனங்களையும் எண்ணி கவலைப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.
Read more...
|