சிறைச்சாலையால் எங்களது உறுதியை,அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதிவெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது. இருபத்தேழு வருடங்களை தனிமைச்சிறையில் கொடும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மனிதனின் எழுச்சிவரிகள் இவை. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப்பிரிவினது தலைவராக சிறை சென்றவர் சிறை மீண்டு தென்னாபிரிக்க குடியரசின் ஜனாதிபதியானார். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமைகள் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்பு மாறியுள்ளனவா?
தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்கள் சிறுபான்மை பிரித்தானிய ,டச் வெள்ளையினத்தவரின் நிறவெறிக் கொடுமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். கறுப்பினத்தவர்கள் ஜனாதிபதியாகவும்,மந்திரிகளாகவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆனால் பசியிலும்,பட்டினியிலும் வாழ்ந்த கறுப்பு மனிதர்களின் வயிறுகள் நிறைகின்றனவா? சேரிகளின் நெரிசல்களில் வாழ்ந்த வாழ்க்கை மாறி விட்டதா?. வயிற்றுப்பசிக்காக ஆபத்து மிகுந்த வைரச்சுரங்கங்களில் தமது குழந்தைப் பருவங்களை தொலைத்த வாழ்க்கை மாறி விட்டுதா? வேலை இல்லாததால் களவிலும்,வன்முறையிலும் ஈடுபட்டு வாழ்க்கையை சிறைச்சாலைகளில் தொலைத்த நாட்கள் மாறி விட்டனவா?
Read more...
|