30 வருடங்கள் கடந்து விட்டன எத்தனையோ உயர்ப்பலிகளையும், உடமைகளை இழந்தும், லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். இத்தனை ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தும் எந்தவொரு விடிவும் கிட்டாது தமிழ் தேசம் இருக்கின்றது. தமிழ் மக்களோ அல்லது மற்றையப் பகுதி இனமக்களோ சுயநிர்ணயத்தினை இழந்து தான் வாழ்கின்றார்கள். இலங்கை மக்களை அன்னிய சக்திகளின், உள்நாட்டு ஆட்சியார்களினால் ஆட்டிவிக்கப்படுகின்றார்கள். முழு இலங்கையின் உற்பத்தியே வெளிநாட்டின் சந்தையை நோக்கியதாகவும், வெளிநாட்டவர்களின் பொருளாதார நலனும் உள்நாட்டு மாபியா அரசியல் சக்திகளின் முதலீடுகளுக்கும் உட்பட்டு இருக்கின்ற வேளையில் தான் 30 வருட சிறைக்கொலை, இனக்கலவரம் நினைவில் கொள்ளப்படுகின்றது.
Read more...
|