Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 18 July 2013
இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 18 July 2013 14:35
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

செக்கல் பொழுதின் மையிருட்டில் மனமெல்லாம் கிளுகிளுக்க தவநாதன், வனிதா வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார். வாசல்படலையில் பூவரசம் குழைகள் கட்டியிருந்தன. வனிதாவின் புருசன் ஜெயக்குமார் வீட்டில் இருக்கிறார் என்பதன் சிக்னல் அது. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார். பிறகொரு நாளில் படலையில் கட்டியிருந்த பூவரசம் குழையை ஆடு ஒன்று கடித்து தின்று விட்டது. காய்ஞ்ச மாடு கம்பிலே விழுந்தது போல தவநாதன் வீட்டிற்குள்ளே பாய்ந்தார். இண்டைக்கு இவற்றை முறையில்லையே இவரேன் வாறார் எண்டு யோசித்த வனிதா நிலைமையை விளங்கிக் கொண்டு கள்ளன், கள்ளன் எண்டு கத்தினா. கிழுவையை கடிச்சு, பூவரசை கடிச்சு கடைசியில் என்னையே கடிச்சிட்டுதே இந்த நாசமாப் போன ஆடு என்றபடி கவடு கிழிய வேலி பாய்ந்தார் தவநாதன். அப்பாவி ஜெயக்குமார் வீட்டிற்குள்ளே கள்ளன் வந்திட்டான் என்று அயல்சனங்களிற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அயல் வீட்டுக்காரர்களிற்கு வந்த கள்ளன் யாரென்று விளங்கி விட்டுது. அன்றையிலேயிருந்து பூவரசங்குழை தவநாதனோடு ஒட்டிக் கொண்டு பூவரசங்குழை தவநாதன் என்றாகியது.

Read more...
Last Updated ( Thursday, 18 July 2013 14:41 )