இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய அரசியற் புரிதல் என்பது எதிர்மறையானது. பாட்டாளி வர்க்க விரோதத்தன்மை கொண்ட எதிர்மறையான முதலாளித்துவ அரசியல் கூறாகத்தான் இன்று விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. சுயநிர்ணயத்தைப் பிரிவினையாகத்தான் ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சார்ந்து விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த வகையிலேயே தான் தான் சுயநிர்ணயத்தைக் கோருவதும், நிராகரிப்பதும் கூட பொதுவாகக் காணப்படுகின்றது.
கடந்தகாலத்தில் பாட்டாளி வர்க்கம் இன முரண்பாட்டின் மீது வர்க்கக் கண்ணோட்டத்தில் செயற்படாமை தான், இதற்கான முக்கிய காரணம். தேசிய இன முரண்பாட்டை பூர்சுவா வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகக் குறுக்கி, அதில் தான் ஆற்றவேண்டிய வர்க்க கடமையை மறுதளித்தது. ஒரு முரண்பாட்டில் உள்ள முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையையும், அதற்காக போராட வேண்டிய வர்க்கக் கடமையையும் நிராகரித்து வந்தது கடந்தகால வரலாறு. எமக்கு வெளியில் இன்றுவரை சுயநிர்ணயத்தை மார்க்சிய உள்ளடக்கத்தில் முழுமையாக கொள்கையளவில் கூட எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சரியான உள்ளடக்கத்துக்கு அப்பால் "சுயநிர்ணயத்தை" இடது சார்ந்து ஏற்றுக் கொள்பவர்களை எடுத்தால்
Read more...
|