ஏதோ கனவிலே கேட்பது போலே கிடக்கிறது. ஆனால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கு. கொஞ்சம் கண்ணை விழித்து காதைக் கூர்மையாக்கி கேட்கிறேன். உண்மையிலே அது ரெலிபோன் அடிக்கிற சத்தம் தான். வெள்ளிக்கிழமையெண்டபடியாலே லேற்றாக வந்து தான் படுத்தனான் கண் திறக்க எரிந்து வலித்தது. முழிக்க முயன்றேன் முடியவில்லை. ரெலிபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.
ஒரு மாதிரி முழிச்சு பக்கத்திலிருந்த மணிக்கூட்டைப் பார்க்கிறேன், அதிகாலை நாலு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரம் ஒரு நாளும் எடுக்கக் கூடாது எண்டு அம்மாவுக் பல முறை சொல்லியிருந்தால் அவ ஒரு நாளும் இப்ப எடுக்க மாட்டா…
அப்ப இப்ப இந்த நேரம் ஆர் எடுப்பினம்..
Read more...
|