"அரசியல் பொருளாதாரத் துறையில் சுதந்திர விஞ்ஞான ஆராய்ச்சி சந்திப்பது, மற்றெல்லாத் துறைகளிலும் சந்திக்கிற எதிரிகளை மட்டுமன்று. அது ஆராய்கிற பொருளின் விசேடத் தன்மையானது மானுட நெஞ்சத்தின் உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனி நலனின் ஆவேசங்களை யுத்தகளத்துக்குள் எதிரிகளாக வரவழைக்கிறது." என்று மிக அழகாகவே மார்க்ஸ் தனது மூலதன முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆம் நாம் இன்று சந்திப்பது இதுதான்.
நாங்கள் தனிநபர் செயற்பாட்டை கடந்து அமைப்பாகியதும், வெறும் விவாதங்கள் கடந்து நடைமுறையுடன் கூடிய செயற்பாட்டுக்கு வந்தடைந்து இருப்பதும், இனவாதத்தை பொது அரசியல் உணர்வாக கொண்ட சமூக அமைப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் நிலைக்கு நாம் வந்திருப்பதும், எமக்கு எதிரான எதிரிகளை வரவழைக்கிறது. "உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனிநலனின் ஆவேசங்களை" எம்மீது காறி உமிழ வைக்கின்றது. வரலாற்றைத் திரிக்கின்றனர். தனிநபர்களை பற்றி இட்டுக்கட்டி அவதூறு பொழிகின்றனர்.
Read more...
|