பருவ வயதை அடைந்தவர்கள், தங்கள் சுய முடிவுகளை எடுக்கின்ற பருவம். இதை அனுமதிப்பதா இல்லையா என்பதுதான், பெற்றோரின் சங்கடங்களும், முரண்பாடுகளும். குழந்தை முடிவை எடுப்பதை மறுப்பதும், நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் குழந்தைகள் செயல்படவேண்டும் என்பது, பெற்றொரின் அதிகாரம் சார்ந்த குரலாக இருக்கின்றது. இப்படி பெற்றோர் முடிவு எடுத்து வந்த போக்கும், குழந்தையானது தான் முடிவு எடுப்பதற்குமான அடிப்படை முரண்பாடு தான் இது. பெற்றோர் தாம் கண்ட அனுபவத்தை, தங்கள் அச்சங்களை, தங்கள் விருப்பங்களை, தங்கள் தெரிவுகளை, தங்கள் அதிகாரம் சார்ந்து இதில் ஒன்றோ அல்லது பலதோ சார்ந்து திணிக்க முனைகின்றனர். குழந்தைகள் தங்கள் அனுபவமின்மை சார்ந்து, அச்சமின்மை சார்ந்து, தங்கள் விருப்பங்கள் சார்ந்து, தங்கள் தெரிவுகள் சார்ந்து, தங்கள் சுதந்திர உணர்வு சார்ந்து, இதில் ஒன்று அல்லது பல சார்ந்து போராட முனைகின்றனர். இதில் உள்ள இணக்கமின்மைதான், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கும், விலகிப் பிரிதல் வரை விரிந்து செல்லுகின்றது. இந்தப் போக்கு சமூகத்தில் எங்கும் புரையோடிக் காணப்படுகின்றது.
Read more...
|